கோடம்பாக்கம் எனறு நான் குறிப்பிட்டது தமிழ் சமூகத்தின் கருத்தியல் தளத்தை சீரழிக்கும் கருத்துருவாக்கத்தின் குறியீட்டை மட்டுமே.
அந்த கருத்துருவாக்கத்தளம் தமிழர் விரோத சக்திகளால் தான் கட்டுப்படுத்தப்பட்டு ஆளுமை செய்யப்பட்டு வருகிறது.அந்தத் தளத்திலே மாற்றுச் சினிமா முற்போக்கு சிந்தனை மற்றும் தமிழ் தேசிய ஆதரவு என்பவற்றைக் கொணட பலர் இருக்கிறார்கள்.ஒருசிலர் இந்த ஆதிக்க சக்திகளுடன் சமரசம் செய்து கொண்டு இருப்பை தக்க வைத்துக் கொள்ள முயல்கிறார்கள்.அதை விரும்பாதவர்கள் தங்களது திறமையை கனவுகளை வெளிக்காட்ட முடியாமல் முடங்கிப் போய் உள்ளார்கள்.ஓரளவுக்கு தமிழ் தேசிய ஆதரவு தளத்தில் செயற்படும் தங்கர் பச்சான் நடிகைகளின் செயற்பாட்டை கண்டித்ததற்காக அவர்களது காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட வைக்கப்பட்டதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
அடுத்து இந்தக் கோடம்பாக்கத்து கருத்துருவாக்கத்தளம் ‘ரோ’ எனப்படும் இந்திய புலனாய்வுத்துறையினாலும் மத்திய கொள்கை வகுப்பு பிரிவினராலும் கட்டுப்படுத்தப் படுகிறது. முதலிட்டாளர்கள் தணிக்கை சபை உறுப்பினர்கள் மற்றும் நான் இங்கே பெயர் குறிப்பிட விரும்பாத சில பெரும் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மூலமாக இந்த ஆளுமை செலுத்தப்படுகிறது.தமிழ் கருத்தியல் தமிழ் தேசிய உணர்வு என்பன இந்த சினிமா என்ற ஊடகத்தினுடாக மக்கள் மத்தில் பரப்பப்பட்டு விடக் கூடாது என்பதில் இந்திய புலனாய்வுத்துறையினரும் மத்திய கொள்கை வகுப்பு பிரிவினரும் மிகக் கவனமாக இருக்கிறார்கள்.1985 க்கும் அதற்கு பின்பும்(அதாவது எமது போராட்டம கூர்மையடைவதற்கு முன்னர்) வெளிவந்த தமிழ் திரைபடங்களை எடுத்து ஆய்வுக்குள்ளாக்கினால் இந்த உண்மை உங்களுக்குப் புரியும்.
நான் இதை ஊகத்தின் அடிப்படையில் சொல்வதாக நினைக்க வேண்டாம். விடுதலைச் செயற்பாடுகளுக்காக (1982லிருந்து 87 வரை ) தமிழகத்தில் தங்கியிருந்த காலத்தில் கோடம்பாக்கத்தின் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பலருடன் நேரடித் தொடர்பு இருந்ததன் அடிப்படையிலேயே இதை சொல்கிறேன். 1985 ம் ஆண்டு எமது 1983 இனக்கலவரத்தை படமாக எடுக்க முயன்ற ஒரு பிரபல இயக்குனர் ரோ அதிகாரிகளால் நேரடியாக எச்சரிக்கப்பட்டதை அடுத்த தனது முயற்சியை கைவிட்டார்.; அடுத்து அவர் இயக்க முயன்ற படங்களுக்கு எவரும் முதலீடு செய்ய முன்வரவில்லை. ஆர்.கே.செல்வமணி விஜயகாந்தை வைத்து தயாரித்த குற்றப்பத்திரிகை படம் எந்த விதத்திலும் தமிழ்தேசிய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருக்காத போதிலும் அரசியல் காரணங்களுக்காக அதற்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இப்போது ‘சாதியம்’ ‘றவடீசம்’ ‘போராளிகளும் தற்கொலைப் போராளிகளும் மூளைச் சலவை செய்யப்பட்ட பயங்கரவாதிகள்’ ‘மக்களின் உரிமைப் போராட்டங்களை அடக்கி ஒடக்கும் காவல்துறையினர்; மேலானவர்கள்’ என்கின்ற கருத்தியல்கள் தான் கோடப்பாக்க சினிமாவின் அடிப்படை கருத்தியலாக இருக்கிறது.விதி விலக்காக ஒன்று இரண்டு நல்ல படங்கள் வெளி வந்தாலும் அவற்றை இந்த கோடம்பாகக் மேலாதிக்க கருத்தியலை தாண்டி வெளிக் கொண்டுவருவதற்கு அவற்றின் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் பட்டபாடு வெளியே தெரிவதில்லை.
என்னுடைய கோரிக்கை ரோவினால் வழி நடத்தப்படும் கோடம்பாக்க ஆதிக்க சினிமாவை சீரழிவு சினிமாக்களை நிராத்து அந்தத் தளத்திலிருந்ர மிகப்பெரிய போராட்டத்தின் மத்தியில் வெளிவரத்துடிக்கும் மாற்றுச் சினிமாவுக்கும் மாற்றுச் சினிமா இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களும் ஊடகங்களும் ஊக்கமளிக்க வேண்டும் என்பதேயாகும். இதைத் தான் நான் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறேன்.
இன்றைக்கு புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் கோடம்பாக்க தமிழ்சினிமாவின் சந்தையை ஓரு குறிப்பிட்ட அளவுக்கு தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கிறது. இதை தொலை நோக்குப் பார்வையோடு அணுகி தமிழ் தேசிய ஆதரவையும் மாற்றுச் சினிமா பார்வையையும் கொண்ட தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் தங்கள் படைப்புக்களை வெளிக் கொண்டவருவதற்கு உதவ வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்.
இன்றைக்கு பாரிஸ் இலண்டன் போன்ற பெரு நகரங்களில் வன்முறையில் ஈடுபடும் இளைஞர் குழுக்களுக்கு கில்லி விஜயின் பாணிதான் முன் மாதிரியாக இருக்கிறது.
இன்றைக்கு புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் எப்படி இருக்கிறது? பாரிஸ் போன்ற பெரு நகரங்களில் 5 திருமணங்களில் 3 திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.10 க்கு 8 பெற்றோர் வயது வந்த தங்களது பிள்ளைகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள்.10 க்கு 6 இளைஞர்கள் திசை மாறி தெருவுக்கு வருகிறார்கள்.10 க்கு 2 முதியவர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் முதியோர் இல்லங்களுக்கு செல்லும் நிலையில் இருக்கிறார்கள்.100 க்கு ஒருவர் அடையாளம் இழந்து 24 மணிநேரக் குடிகாரர்களாகி தெருவுக்கு வருகிறார்கள்.
இந்தக் கோடம்பாக்க கழிசடை சினிமாவை தூக்கிப் பிடிப்பவர்களைப் பார்த்து அதை காட்டித்தான் மக்களை அணி திரட்ட முடியும் என்பதைப் பார்த்து எனக்கு அளவுக்கதிகமாக கோபம் வருகிறது என்றால் என் வாழ்க்கையின் பெரும் பகுதியை சாவு இரத்தம் அவலம் என்பவற்றை களத்தில் நின்று அனுபவித்தவன். நாங்கள் இங்கே எங்கள் கடமையை சரிவர செய்யத் தவறும் ஒவ்வொரு நாளும் அங்கே தாயகத்திலே ஒவ்வாரு போராளியின் மக்களின் உயிர்கள் போய்க் கொண்டிருக்கிறதே என்று துடிப்பதேயாகும்.
2003 ம் அண்டு நான் வன்னிப் பெரு நிலப் பரப்புக்குச் சென்ற போது கரிப்பட்டமுறிப்பு பகுதியில் ஒரு இடத்தை எனக்கு கூட்டிக்கொண்டு சென்று காட்டினார்கள்.
அந்த இடத்தின் முக்கியத்துவம் என்ன வென்றால் ஏ9 நெடுஞ்சாலை மீட்புச் சமரின் போது வாழ்வா சாவா என்ற ரீதியில் அங்கே சிறீலங்காவின் அக்கிரமிப்பு படைகளுக்கும் எமது போராளிகளுக்கம் இடையில் நேரடிச் சமர் நடந்தது.
பெண் போராளிகள் அணி ஒன்று எதிரியின் ஆக்கிரமிப்பு வியூகத்தை உடைப்பதற்காக எதிரிக்கு மிக சமீபமாக நின்று மோட்டார் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. எதிரியோ எறிகணைகளை மழையாகப் பொழிந்து கொண்டிருக்கிறான்.எமது போராளிகள் எண்ணி எண்ணி எதிரியின் இலக்குகளை நோக்கி தங்களிடம் அந்தக்கள முனையில் இருந்த ஒரே ஒரு மோட்டார் மூலம் எதிர் தாக்குதல் நடத்துகிறார்கள். அந்தப் பெண் போராளிகள் அணி அந்த களமுனையை உடைத்தால் தான் பின்னால் வரும் போராளிகள் அணி எதிரிகளை அழித்து அந்தப்பகுதியை மீட்கமுடியம் என்ற நிலை.அந்தப்பெண் போராளிகள் தோற்றுப் போய்விட்டால் பின்னால் வரும் போராளிகள் அணி அழிக்கப்படுவதோடு ஏ9 நெடுஞ்சாலை உட்பட வன்னிப் பெருநிலப்பரப்பின் பெரும்பகுதி சிறீலங்கா படைகளின் ஆக்கிரமிப்பக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட பெண் போராளிகள் மோட்டரை வைத்திருந்த இடத்தை நோக்கி எதிரியின் எறிகணை ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. அந்த எறிகணை அந்த இடத்தில் விழுந்து வெடிக்கும் போது அந்த மோட்டார் அழிக்கப்பட்டுவிடம் அல்லது சேதப்படுத்தப்பட்டுவிடும்.அந்த மோட்டர் செயலிழந்தால் அந்தத் தாக்குதலே தோல்வியடைந்து விடும; பல நூற்றுக்கணக்கான போராளிகள் எதிரியால் கொல்லப்பட்டு விடுவார்கள். ஒரு சில விநாடிகள் தான் ஒரு பெண் போராளி இதை பற்றி சிந்திக்கின்றாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் பாய்ந்து சென்று அந்த மோட்டாரை கட்டிப்பிடித்துக் கொள்கிறாள்.எதிரியின் எறிகணை வீழ்ந்து வெடித்து அவளது தலை துண்டாடப்பட்டு தனியாகப் பறக்கிறது. மோட்டார் சேதமின்றிக் காப்பாற்றப்படுகிறது.மோட்டரோடு சேர்ந்து உயிரற்ற தலையறற அவளது உடல் தரையில் சாய்கிறது. அவளது ஈடுஇணையற்ற ஈகத்தைக் கண்டு அதீத உத்வேகம் பெற்ற பெண்போராளிகள் ஏதிரி மீது மூர்கத்தனமான தாக்குதலை தொடக்கிறார்கள். எதிரி ஓட ஓட விரட்டப்படகிறான். ஏ9 நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது பல்வேறு விமர்சனங்களை வைத்த புலம் பெயர்ந்த தமிழர்கள் பலருக்கு அந்தப் போராளி செய்த தியாகத்தின் பலனாகத்தான் அவர்களால் அந்தப் பாதையில் பயணிக்க முடிந்தது என்பது தெரியுமா?
இப்படி பல நூற்றக்கணக்கான வீர வரலாறுகள் தியாக வரலாறுகள் எங்கள் மண்ணிலே இருக்கின்றன.மக்களுடைய அவலங்கள் ஏராளமாக இரக்கின்றன. இவற்றை மாற்றுச் சினிமா என்ற வரையறைக்குள் உட்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.- அந்த வேலைக்கு புலம் பெயாந்த ஊடகங்களும் புலம் பெயர்ந்த மக்களும் உதவ வேண்டும் என்பது தானே எனது கோரிக்கை.
சினிமா என்ற மக்கள் தொடர்பு சாதனம் பிறந்த இடம் பாரிஸ். உலகப் புகழ்பெற்ற உலகளவில் சாதனை படைத்த பல சினிமா இயக்குனர்கள் பாரிசிலுள்ள சினிமா கல்லூரிகளில் தானே தமது கல்வியை கற்றிருந்தார்கள்.3 முதல் 5 வருடங்கள் கொண்ட அந்தப்படிப்பை எங்களது இளைதலைமுறை படிப்பதற்கு எமது ஊடகங்கள் ஊக்கவிக்க வேண்டும் பொருளாதார ரீதியாக உதவவேண்டு என்பது தானே எனது கோரிக்கை.
எதுவும் தெரியாமல் எல்லாம் தெரியும் என்று பாசாங்கு செய்கின்ற போக்குத் தானே எமது ஊடகங்களில் நிறைந்திருக்கிறது.
மக்கள் மத்தியில் அரசியல் வேலை செய்வதில் மக்களை அணி திரட்டுவதில் நீண்ட அனுபவம் உள்ளவன் என்ற வகையில் சில கேள்விகளை கேட்கவிரும்புகிறேன்?
மேலே நான் குறிப்பட்ட போராளியின் தியாகம் -ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் பேராட்டத்தை ஆரம்பித்து இன்று அதை வான்படையை கட்டும் அளவுக்க வளர்த்தெடுத்த தேசியத்தலைவரின் ஆளுமை இவற்றை ஒருபுறமும் விஜப் அஜித் அசின் நயன்தாரா வகையராக்கள் நடிக்கும் சினிமாக்களையும் எடுத்துச் சொல்லி மக்களிடம் ஆதரவு கேட்கச் செல்வோம்.வீடுவீடாகச் செல்வோம். இதிலே எந்த தளத்திலே மக்களின் ஆதரவை திரட்டுவது நிரந்தரமானதாக இருக்கும்?கோடம்பாக்க கழிசடை கலாச்சாரத்தை ரோவினுடைய விருப்பத்தை வெளிப்படுத்தும் உடகங்களுக்கு எதிராக போராளிகளின் ; தியாகம் - தேசியத்தலைவரின் ஆளுமை. மக்களின் அவலங்கள் இவற்றை உரிய ஊடக வடிவ வெளிப்பாட்டு முறையில் பதிவாக்கி மக்கள் முன் எடுத்துச் சென்றால் அவர்கள் எங்களை விட்டுவிட்டு புது சினிமாவை நோக்கித்தான் ஓடுவார்களா?
மேலே நான் குறிப்பட்ட போராளியின் தியாகம் -ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் பேராட்டத்தை ஆரம்பித்து இன்று அதை வான்படையை கட்டும் அளவுக்க வளர்த்தெடுத்த தேசியத்தலைவரின் ஆளுமை இவற்றை ஒருபுறமும் விஜப் அஜித் அசின் நயன்தாரா வகையராக்கள் நடிக்கும் சினிமாக்களையும் எடுத்துச் சொல்லி மக்களிடம் ஆதரவு கேட்கச் செல்வோம்.வீடுவீடாகச் செல்வோம். இதிலே எந்த தளத்திலே மக்களின் ஆதரவை திரட்டுவது நிரந்தரமானதாக இருக்கும்?கோடம்பாக்க கழிசடை கலாச்சாரத்தை ரோவினுடைய விருப்பத்தை வெளிப்படுத்தும் உடகங்களுக்கு எதிராக போராளிகளின் ; தியாகம் - தேசியத்தலைவரின் ஆளுமை. மக்களின் அவலங்கள் இவற்றை உரிய ஊடக வடிவ வெளிப்பாட்டு முறையில் பதிவாக்கி மக்கள் முன் எடுத்துச் சென்றால் அவர்கள் எங்களை விட்டுவிட்டு புது சினிமாவை நோக்கித்தான் ஓடுவார்களா?
கற்பனையில் புனையப்படும் கோடம்பாக்க இம்சைத் தொடர்களுக்கு பதிலாக எங்கள் மக்களுடைய அவலங்களை அவர்களது இடப்பெயர்வின் சோகங்களை எங்கள் மண்ணிலும் புநை;துள்ள கதைகளை இப்போதைக்கு குறைந்த பட்சம் தமிழகத்தின் தமிழுணர்வுள்ள இயக்குனர்களை வைத்து தயாரித்து வெளியிட்டால் எங்கள் மக்கள் பார்க்கமாட்டார்களா?
புலம் பெயாந்த யூதர்கள் பாரிசிலும் நியூயோhக்கிலும் லண்டனிலும் உள்ள சினிமாகல்லூரிகளில் கல்வி கற்று தங்களுடைய முதலீடுகளை போட்டு படம் எடுத்து தங்களது திறமையை நீரூபித்துத்தானே ஹொலிவுட்டுககு; கால் பதித்தார்கள். இந்த முன் மாதிரியை நாங்கள் பின்பற்ற வேண்டும் என்ற தானே நான் வலியுறுத்துகிறேன்.
ஓராயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு காட்சிப்பதிவால் ஒருபடத்தால் சொல்ல முடியும் என்பதை தமிழன விரோதிகள் நன்கு தெரிந்துவைத்துக்கொண்டு துறைசார் ரீதியில் அதை திட்டமிட்டு பயன்படுத்துகிறார்கள்.ஆனால் நாங்கள்….. ?
இறுதியாக இப்போது நான் இவ்வாறு சொல்வதும் எழுதுவம் சிலருக்கு பைத்தியக்காரத் தனமாகத் தோன்றலாம்.இதை சொல்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று சிலர் கேட்கலாம்.ஆனால் இன்னொரு பத்து வருடத்தில் இந்த சிரழிவு கலாச்சாரத்தை தமிழ் கலாசச்hரம் என்ற சொல்லி விதைப்பதன் அறுவடையை புலம் பெயர்ந்த சமூகம் செய்யும் போது இப்படி ஒருவர் முன்பே சொன்னாரே என்று ஒரு சிலராவது நான் உயிரோடு இல்லாவிட்டாலும் என்னை நினைவு கூருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.நான் மீண்டும் சொல்கிறேன் நாங்கள் இங்கே புலம்பெயர்ந்த நாடுகளில் எங்கள் கடமையை சரிவர செய்யத் தவறும் ஒவ்வொரு நாளும் அங்கே தாயகத்திலே ஒவ்வாரு போராளியின் மக்களின் உயிர்கள் போய்க் கொண்டிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
4 கருத்துகள்:
நல்ல பதிவு சிவா,
இப்படி எழுதியாவது எதாவது மாற்றம் வருகிறாதா என்று பார்ப்போம்.
நாங்கள் அரசியல் பேசினால் தடை செய்துபோடுவான்ங்கள் என்று சொல்லிச் சொல்லியே தங்களது திறமையீனங்களை மறைத்து வருகின்றனர்.மக்களை கோடம்பாக்க சினிமா மயக்கத்தில் வைத்திருக்கும் தேசிய ஊடகங்களால் விளைந்த பயன் தான் என்ன? இவை எமக்குத் தேவை தானா?
ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புக்களை ,மாற்றுச் சினிமாவை இவர்கள் காசுகொடுத்து வாங்குவார்களா?ஆணிவேருக்கு மக்கள் மத்தியில் இருந்த வரேவேற்பின் பிறகாவது இவர்கள் மக்களின் அபிலாசைகளைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
உங்கள் பதிவின் பின்னூட்டங்கள் தமிழ் மணத்தால் திரட்டப் படவில்லைப் போலும்.
இதற்கு நீங்கள் தமிழ் மண கருவிப் பட்டையை உங்கள் வார்ப்புருவில் உள்ளிட வேண்டும்.மேலும் தகவல்களுக்கு இங்கே பாருங்கள்.
http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=toolbar
In which language you are using?!
Nice to visit in your site. Have a nice weekend and Greeting's from Jakarta, Indonesia !
http://aqiegaul.blogspot.com
கருத்துரையிடுக