பகுத்தறிவுப் பரப்புரை
பகுதி -01
மூடநம்பிக்கைகள்
பேய் பிசாசுகள் இருக்கின்றனவா?
இரவில் நீங்கள் எதைக்கண்டு அதிகம் பயப்படுவீர்கள் என்று கேட்டால் பலரும் சொல்கின்ற பதில் பேய் பிசாசு என்பதாகும் உண்மையில் பேய் அல்லது பிசாசு இருக்கின்றதா? பேய் அல்லது பிசாசு என்றால் என்ன? இந்தக் கேள்வியை கேட்டுப்பாருங்கள்!
பேய் - பிசாசு என்பது இறந்தவர்களுடைய ஆவி இதில் நல்ல ஆவியும் இருக்கிறது கெட்ட ஆவியும் இருக்கிறது இவற்றில் கொள்ளிவால் பேய்,இரத்தக்காட்டேறி,சுடலை மாடன், மோகினி-சங்கிலி என்று பல வகைகள் இருக்கின்றன, இப்படியான பதில்கள்தான் எமக்கு இதுவரை தரப்படுகின்றன, சாவுக்கு குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைபவர்கள் ஆவியாக அலைவார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு கொலை செய்யப்படுபவர்களும் தங்களை கொலை செய்தவர்களை பழிவாங்குவதற்காக ஆவியாக அலைவார்கள் என்றும் -இந்த வகை ஆவிகளே கெட்டஆவிகள் என்றும், கூறப்படுகின்றது.இந்த ஆவிகளுக்கு கால்கள் இல்லை என்றும் இவை மரங்கள் மயானங்கள், பாழடைந்த கட்டிடங்கள், தங்கியிருக்கும் என்று இரவு வேளைகளிலேயே அதிகம் நடமாடும் என்றும்- சொல்லப்படுவதுண்டு.
விஞ்ஞானரீதியாகப் பார்த்தால் ஒரு மனிதனின் மரணம் என்பது அவனது மூளையும் இதயமும் செயலற்றுப் போவதாகும், மூளை செயலற்று விட்டால் அல்லது இறந்துவிட்டால் சகல அசைவுகளும் நின்றுவிடும் அதில் உள்ள ஞாபகங்கள், பதிவுகள் எல்லாமே அழிந்துவிடும். அது போல் இதயம் செயலற்று போய்விட்டால் இரத்த ஓட்டம் நின்றுவிடும், சுவாசம் நின்றுவிடும் இவையனைத்தும் ஒரு சேரநிகழும்போது ஒரு மனிதன் மரணமடைந்து விட்டதாக மருத்துவரீதியாக சொல்லப்படுகிறது.
ஒரு மனிதன் மரணம் அடைகின்றபோது மூக்கு மற்றும் ஏனைய துவாரங்கள் வாயிலாக அவன் ஏற்கனவே சுவாசித்த காற்று மட்டும்தான் வெளியேறுகிறது, ஆவி என்றோ உயிர் என்றோ, ஆன்மா என்றோ ஒன்றும் வெளியேறுவதில்லை, ஒரு மனிதனின் கடைசி மூச்சாக வெளியேறும் காற்றை எடுத்து பரிசோதித்தால் அதில் காபனீரொட்சைட்டும், ஒட்சிசன், நீராவி, முதலான வாயுக்கள்தான் இருக்கும்.
ஓரு இயந்திரம் , அல்லது தன்னுடைய செயற்பாட்டுத்திறனை இழந்து விட்ட ஒரு துப்பாக்கி தனது கடைசி செயற்பாட்டுடன் செயலற்றுப்போகும் போது என்ன நடக்குமோ ஒரு மனிதன் இறக்கும் போதும் அதுதான் நடக்கிறது. ஓரு பழுதடைந்த செயலற்று போன இயந்திரத்தின் பாகங்கள் பிரித்தெடுத்து வெறோரு இயந்திரத்திற்கு பொருத்துவதை போலவே இறப்புக்குள்ளாகும் மனிதனின் கண், சிறுநீரகம், இதயம், முதலான பல உறுப்புக்கள் , இந்த உறுப்புக்களில் பழுதுள்ள வேறோரு மனிதர்களுக்கு பொருத்தப்படுகின்றன.
ஏனவே மனிதனின் மரணத்தின் போது இயமன் எருமைக்கிடாயில் வந்து பாசக்கயிற்றை விசி உயிரை எடுத்துக்செல்கிறான் , என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதையாகும்.
அப்படி என்றால் ஆவி அல்லது பேய் என்று சொல்லப்படுவ தெல்லாம் என்ன?
இது ஒரு மனப்பயம் அல்லது பிரம்மை என்று சொல்லலாம் ஒரு மனிதன், உயிருடன் இருக்கும்போது நடந்துகொண்ட விதம் பேசிய பேச்சுக்கள், செய்த செயல்கள் இவையல்லாம் மற்றவர்களுடைய மனங்களில் பதிவாகின்றன இந்தப்பதிவுகள் அந்த மனிதன் இறந்தவுடன் நினைவுகளாகின்றன.இறந்த அந்த மனிதனுடன் மிக நெருக்கமாக பழகியவர்களுக்கும் (குடும்பத்தினர்,உறவினர்,நண்பர்கள்) அந்தமனிதர்களுக்கு தீங்கிளைத்த வர்களையும், அவனது இழப்பை சுலபமாக ஏற்றுக்கொள்ளாத முடியாத நிலையிருக்கும் அந்த மனிதனுடைய உடல் எரிந்து சாம்பலாகும் காட்சியை பார்க்காதவர்களுக்கு இந்த நிலை அதிகம் இருக்கும் அவர்களது மூளைக்கலங்கள் அந்த மனிதனின் இழப்பை சுலபமாக ஏற்றுக் கொள்வதில்லை. அந்த மனிதன் விட்டுச்சென்ற தடயங்கள் அல்லது அந்த மனிதனைப்பற்றிய நினைப்பு வரும்போது அவன் உயிரோடு தங்களுடன் வாழ்கின்றான், என்றோரு பிரம்மை உருவாகின்றது, இவை தான் பேய் பிசாசுகள் தொடர்பான கட்டுக்கதைகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. பகலில் கடும் வெய்யில் காலத்தில் பரந்த வெளியில் நீங்கள் சென்றால்துரத்தில் தண்ணீர் ஓடுவது போன்ற ஒரு காட்சியை நீங்கள் பார்க்கமுடியும் ஆனால் கிட்டச் சென்று பார்த்தால் எதுவும் இருக்காது இதை கானல் நீர் என்று சொல்வார்கள், அதாவது சூரியஒளி தரையில் பட்டு தெறிக்கும்போது இது ஏற்படுகிறது.
இதே போலவே இரவில் காட்டுப்பகுதிகள் மற்றும் வயல் வெளிகள், சதுப்பு நிலங்களில் மங்கலாக சில பொருட்கள் அசைந்து செல்வதைப்போல காட்சிகள் தென்படும்,இவையும், அந்த பகுதிகளில் உள்ள இரவு வெப்பநிலை மற்றும் பனிமூட்டத்தால் இவ்வாறு தென்படுகின்றன.
மொத்தத்தில் பேய் பிசாசு என்பது எங்களுடைய நினைப்பில்தான் இருக்கிறதே தவிர வெளியில் இல்லை.சில சதுப்பு நிலங்களில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டு அந்த தீப்பிழம்புகள் காற்றில் மிதந்து செல்வதுண்டு இதைத்தான் கொள்ளிவால் பேய் என்று சொல்கிறார்கள் இந்தப் பேய் ஆட்கள் கிட்டப்போனால் அடித்து எரித்துக் கொன்று விடும் என்றெல்லாம் கதை சொல்லப்படுவதுண்டு.
உண்மையில் சதுப்பு நிலத்துக்கு அடியில் இருக்கும் அடர்த்திகுறைந்த வாயுக்கள் அமுக்கம் காரணமாக வெளியில் வரும்போது தீப்பற்றிக் கொள்கின்றன. இந்த தீயை கொள்ளிவால் பேய் என்று நினைத்து பயந்து ஒடுவர் ஓட முற்பட்டால், அந்த தீப்பிழம்பு அவரை துரத்திச்செல்லும் இது எனென்றால் நாங்கள் ஓடும்போது காற்றை கிழித்துக்கொண்டுதான் ஒடுகின்றோம். இவ்வாறு ஓடும்போது எங்கள் முதுகுக்குபின்னால் ஒரு வெற்றிடம் வரும், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு அருகில் உள்ள காற்று வரும்போது அதில் மிதந்து கொண்டு இருக்கும் இந்த தீப் பிழம்பும் ஓடிவரும் இதைத்தான் கௌ;ளிவால் போய் துரத்துகின்றது என்று கிளைந்து பலர் உயிரிழந்து விடுகின்றார்கள் இந்த உயிரிழப்பிற்கு காரணம் பயத்தினால் வரும் மாரடைப்புத்தான் அடுத்து நாங்கள் சில இடங்களில் சில வீடுகளில் படுத்து உறங்கும் போது அது பகலாய் இருந்தாலென்ன இரவாக இருந்தாலென்ன எங்களுக்கு ஏதோ ஆபத்து வருவதைப்போலவும் எங்களை யாரோ கொல்ல வருவதைப் போலவும் கனவு வரும். நாங்கள் கத்திப் பார்ப்போம் குரல் வெளியே வராது, எழும்பி ஓடப்பார்ப்போம், உடம்பு அசையாது, இப்படி ஒரு விசித்திரமான நிலை உங்களில் பலருக்கும் வந்திருக்கலாம் இவ்வாறு நடப்பது பேயின் வேலை என்றும் இந்தப் பேய்க்கு அழுக்குப் பேய் என்றும் என்றும் நம்மவர்கள் பேரும் வைத்திருக்கின்றார்கள. இரவில் தன்pயாகச் சென்றால் காற்றுக் கறுப்புப்பிடித்து வருத்தம் வரும் என்றும் மோகினிப் பேய் பிடித்துவிடும் என்றும் நமது கிராமங்களில் சொல்லக் கேட்டிப்பீர்கள். குழந்தைகளை இரவில் வெளியில் கொண்டு சென்றாலும் இப்படி சொல்வதுன்டு இரவில் சாப்பாட்டை வெளியில் எடுத்துச் செண்றாலும் பேய் அதிலுள்ள சாற்றை உறிஞ்சி விடும் என்றும் கிராமத்து மக்கள் சொல்வதுன்டு. இதற்காக இரவில் சாப்பாட்டை வெளியில் கொண்டு செல்லும் போது கரித்துண்டு ஒன்;றை (கார்பன் ) அதற்குள் போடுவதுன்டு அல்லது இரும்புக்கம்பி ஒன்றை கூடவே எடுத்து செல்வதுன்டு (இப்படிச் செய்தால் பேய் வராது என்பது அவர்களது நம்பிக்கை ) உண்மையில் நாம் உயிர் வாடுகின்ற இந்தப் புமியில் மேற்பரப்பில் பல்வேறு மின் காந்த அலைகளும், சூரியக் குடும்பத்திலே உள்ள பல்வேறு கோள்களினதும் உப கோள்களினதும் கதிர் வீச்சு சக்தி அலைகளும் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருக்கும், அதேபோல மனிதனுக்கு கெடுதி விளைவிக்கக் கூடிய கொடிய வைரசுகளும் பக்டீரியாக்களும் கூடக்காற்றில் அலைந்து கொண்டிருக்கும் சூரிய சக்திக்கு இயல்பாகவே அனைத்துப் பொருட்களையும் எரிக்கும் சூடாக்கி விரிவடையச்செய்யும் தன்மை இருக்கிறது பகலில் நாம் நடமாடும் போது சூரியக்கதிர்கள் ஓரளவிற்கு எம்மை பாதுகாக்கின்றன ஆனால் இரவில் அவ்வாறான தன்மைகள் மிகக் குறைவு அதனாலேயே இரவில் காடுகள், வயல்வெளிகள், சதுப்புநிலங்கள் கடற்கரைகள் என்று பயணம் செய்பவர்களின் உடலில் கதிர்வீச்சுத் தாக்கமும் நோய்க்கிருமிகளின் தொற்றும் ஏற்பட வாய்பும் அதிகமாக இருக்கிறது.
இதனாலேயே இரவில் வெளியே சென்று விட்டு வருபவர்கள் (சில இடங்களில் பகலில் கூட ) குளித்துவிட்டு அல்லது கை கால் கழுவிவிட்டு வீட்டுக்குள் வரவேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால் பிள்ளைகளுக்குக் கூடாது என்று நமது பெரியவர்கள் சொல்வதுண்டு.அவர்கள் பேய் பிசாசுகளோடு சம்மந்தப்படுத்தி இதைச் சொன்னாலும் இதற்குரிய அடிப்படைக்காரணம் இதுதான்உணவை வெளியில் எடுத்துச்செல்லும் போது கூட இது தான் நடக்கிறது பொதுவாக கரிக்கு (கார்பன் ) அல்லது இரும்புக்கு கதிர்களை உறிஞ்சும் சக்தி இருக்கின்றது, இதனாலேயே அவற்றை உணவில் போட்டு எடுத்துச்செல்லும் வழக்கம் இருக்கிறது.
உணவு பழுதாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இது சொல்லப்பட்டதே அன்றி பேய் பிசாசு சத்தை உறிஞ்சி விடும் கூடிக்கொன்டு வந்துவிடும் என்பதற்காகவல்ல.
மனம் என்ற ஒன்று இருக்கிறதா ?
இந்த பேய் பிசாசுகள் பற்றி பேசுகின்ற போது மனம் என்ற ஒன்று இருக்கிறது தானே என்று ஒரு கேள்வி உங்களுக்கு எழக்கூடும் அந்த மனம் தான் ஆத்மா என்றெல்வாம் நிங்கள் நினைக்கலாம் உண்மையில் மனம் அல்லது ஆத்மா என்ற ஒன்று இருக்கிறதா? மனிதனின் உடல் வேறு , ஆத்மா வேறு. உடல் அழியும் ஆத்மா அழியாது மனிதன் இரவில் உறங்கும் போது ஆத்மா உடலை விட்டு வெளியேறி உலகெல்லாம் சுற்றிவரும் என்று மதவாதிகள் பல கதைகள் சொல்வார்கள் ஆரம்ப காலத்தில் இதயம் தான் மனம் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். மனதைத்தொட்டுச்சொல்கிறேன் என்றால் இதயத்தை தொட்டுக்காட்டும் வழக்கம் இருந்து வந்தது. காதலுக்கு அடையாளமாக இதயத்தை அம்பு துழைத்துச்செல்லும் படத்தைக் கான்பிப்பது இன்றும் வழக்கம் இருக்கிறது .
பிற்காலத்தில் மனித மூளையில் தான் மனம் இருக்கிறது அது தான் சிந்திக்கிறது செயற்பட வைக்கிறது என்ற கருத்து வலுப்பெற்றது இது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு கருத்துத்தான் என்றாலும் இந்த மனம் தான் ஆத்மா என்றாலும் இது ஒரு மனிதனின் இறப்புககுப் பின்னும் உயிர் வாமும் என்பதும் மனிதன் உறங்கும் போதும் உடலை விட்டு வெளியேறி தனியாகச் செயற்படும் என்பதும் அப்பட்டமான மூடநம்பிக்கையாகும் மனித மனம் என்று நாங்கள் சொல்வது மனித மூளையின் பகுதிகளையும் செயற்பாட்டுத்திறனையும் மட்டுமே இது ஒரு கணணியின் டேட்டா பேசுக்கு ஒப்பானது. ஒரு குழந்தை தாயின் கருவில் உருவாவதிலிருந்து அது வளர்ந்து மூப்படைந்து இறக்கும் வரை அதன் மூளையில் பதிவாகும் அனைத்து விடையங்கள் அனுபவங்கள் செயற்பாட்டுத்திறன்கள் அனைத்தின் தொகுப்பே மனம் என்று வரையறுக்க முடியும். இதை ஒரு மொழிக்கிடங்கு என்றும் இப்போது விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள். குழந்தை பிறந்ததிலிருந்தே அதன் மூளையில் பதியப்படும் மொழி (தற்போது தாயின் வயிற்றில் இருக்கும் போதே குழந்தைகள் தகவல்களை பெற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றன என்று விஞ்ஞானிகள் நிருபித்திருக்கிறார்கள்) அல்லது மொழிகள் மூலமே உலகைப் பற்றியும் உலகிலுள்ள பொருட்களைப்பற்றியும் அது அறிந்து கொள்கிறது என்றும் மொழி என்;ற ஒன்று இல்லை என்றால் இந்த அறிதலும் சிந்தனையும் இருக்காது என்றும் அவர்கள் கூறுகின்றார்கள. ஒரு கணணியை முற்றாக அழித்து விட்டால் அதில் பதித்து வைத்துள்ள அனைத்து விடயங்களும் அழிந்து விடுவதைப்போலத்தான் மனித மூளையும் இறந்து விட்டால் அதிலுள்ள அனைத்துப்பதிவுகளும் செயற்பாடுகளும் (அதாவது மனமும் ) இறந்து விடுகிறது. அந்தக் கணணியிலிருந்து பிரதி எடுக்கப்பட்ட சில பல தகவல்கள் அந்தக் கணணியின் அழிப்பின் பின் நினைவு கூரப்படுவதை,பயன்படுத்தப் படுவதைப்போலத்தான் மனிதனால் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளும் செயற்பாடுகளும் நினைவுகள் அல்லது வாழ்க்கையின் அனுபவத் தொகுப்பு என்ற வகையில் நிலைத்திருக்கின்றன. மற்றப்படி மனிதன் இறந்த பின்னர் மனம் உயிர்வாழ்ந்து இன்னொரு உடலில் புகுந்து கொள்வதில்லை.
மறுபிறப்புக் கதைகள் பொய்யா?
சிலபேர் தங்களுக்கு தங்களது முற்பிறப்பின் ஞாபகம் இருக்கிறது என்று கதைவிடுவதை நீங்கள் கேட்டிருக்கக் கூடும்.சமூகப் பொறுப்பில்லாத சில ஊடகங்கள் விற்பனையை மட்டும் குறியாக வைத்து, இதெல்லாம் அறிவு பூர்வமான உண்மை, என்று பரபரப்புச் செய்தியோ அல்லது கட்டுரையோ வெளியிட்டிருக்கக்கூடும்.தங்களது செய்திக்கு அல்லது கட்டுரைக்கு ஆதாரமாக தன்னம்பிக்கையற்ற புத்தகப் பூச்சிகளான சில அறிவுசீவிகளை (அறிவை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள்) துணைக்கழைத்து ஆய்வும் செய்திருப்பார்கள்.இதை எல்லாம் படிக்கும் உங்களுக்கு பெரிய கல்விமான்கள் எல்லாம் சொல்லியிருக்கிறார்கள், அதனால் இது உண்மையாக இருக்கும் என்ற சார்புத் தன்மையுடன் கூடிய நம்பிக்கை ஏற்படும்.இந்த நம்பிக்கை உங்கள் மூளையின் அறிவியல் தளத்தை செயற்பட விடாமல் அமுக்கிவிடும்.உண்மையில் ஸ்ரீலங்காவிலே பிரபலமான இரண்டு மறுபிறப்புக் கதைகள் ஊடகங்களிலே பரபரப்பாகப் பேசப்பட்டன.ஓன்று கதிர்காம அழகு ராணி மன்னம் பேரியினுடையது. மற்றது ஸ்ரீலங்கா ஜனாதிபதி சந்தரிகா குமாரதுங்காவின் கணவர் விஜய குமாரதுங்கா வினுடையது மக்கள் மத்தியில் எற்கணவே பிரபலமாகியிருந்த இந்த இருவரும் மறு பிறப்பு எடுத்திருப்பதாக கதை விடப்பட்டது.ஸ்ரீலங்காவின் வௌ;வேறு பிரதேசங்களில் பிறந்த இரண்டு குழந்தைகள் இவர்களில் மறு பிறப்புக்கள் என்று சிங்கள ஊடகங்கள் எல்லாம் பரபரப்பாக செய்தி வெளியிட்டன.இவை எல்லாம் நடந்து இப்போது ஒரு 15 அல்லது 20 வருடங்களாவது இருக்கும்;. அப்போது மறுபிறப்புக்களாக இருந்த அந்தக் குழந்தைகள் இப்போது பெரியவர்களாகியிருப்பார்கள்.இப்போது அவர்கள் மன்னம்பரி ஆகவோ விஜய குமாரதுங்கவாகவோ இல்லாமல் அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள் என்பதே உண்மை.அப்படி என்றால் இந்தக் கதைகள் எல்லாம் பொய்யா? இவை எப்படி உருவாக்கப்படுகின்றன? இந்தக் கேள்விகள் உங்கள் மனதில் நிச்சயமாக எழக்கூடும்!உண்மையில் ஒரு குழந்தை தாயின் கருவில் உருவாகி அதன் மூளை வளர்ச்சியடைய ஆரம்பிக்கும் போதே தன்னைச் சூழவுள்ள விடயங்களை கிரகிக்க ஆரம்பிக்கிறது.தாயின் சுக துக்கங்கள் சிந்தனைகள் அபிலாசைகள் எல்லாமே குழந்தைகளைப் பாதிக்கின்றன என்பதை மருத்துவ உலகம் இன்று விஞ்ஞான பூர்வமாக நிரூபித்திருக்கிறது.
அதிலும் அபூர்வமாக சில குழந்தைகள் அவற்றின் மரபணுச் சேர்க்கையில் உள்ள சிறப்புத்தன்மைகள் காரணமாக சிந்திக்கும் கிரகிக்கும் ஆற்றல் மிக்கவையாக உருவாகின்றன.இவ்வாறான குழந்தைகள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தாயோ தந்தையோ அடிக்கடி பேசிக்கொள்ளும் ஒரு விடயத்தை கருவில் இருக்கும் பேதே கிரகித்துக் கொண்டுவிடுகின்றன.ஆவை பிறந்த பின் தமக்கே உரித்தான அறிவுக் கூர்மையுடன் எனக்கு அவரைத் தெரியும் அது இது என்று சொல்லும் போது அதற்குப் பெற்றோரும் உறவினர்களும் கண்காது மூக்கெல்லாம் வைத்து மறுபிறப்புக் கதையை கட்டிவிடுகின்றார்கள் .பின்பு ஊடகங்கள் இதற்கு மெருகூட்டி நம்பத் தக்க ஒரு சான்றாக இதைக் கட்டமைத்து விடுகின்றன.அதுசரி பிரபமானவர்கள் மட்டும்தான் இப்படிமறுபிறப்பு பிறந்வந் கதைப்பது ஏன் என்ற சிந்தித்துப் பாருங்கள் இதெல்லாம் அப்பட்டமான சுத்துமாத்து என்று உங்களுக்குப் புரியும்
பேயாடுவது என்பது என்ன ?
நமது கிராமங்களில் பல இடங்களில் பேயாடும், பேயோட்டும் நிகழ்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பேய் பிடித்தவர்களும் பேயோட்டுபவர்களும் கூட சில வேளை உங்களுக்குத் தெரிந்தவர்களாக இருந்திருப்பார்கள.; உண்மையில் பேய் பிடிப்பது என்பது என்ன? எப்படி இந்த பேயை விரட்டு கின்றார்கள்? பேய் பிடிப்பது என்பது அதிகமான பயத்தினால் வருகின்ற ஒரு விதமான மன நோயாகும். இதற்கு முதற்காரணம் அதிர்ச்சி. ஒருவர் ஏதோ ஒரு பயங்கரமான சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடையும் போது அவர் ஒருவிதமான பரபரப்புக்கும் பதட்டத்துக்கும் உள்ளாகின்றார். இதையே அவருடன் கூட இருப்பவர்களுக்கும் உறவினர்களுக்கும் அவருக்குப் பேய் பிடித்து விட்டது பிசாசுபிடித்து விட்டது என்று கூறி அவரை மனநேயாளியாக்கி விடுகின்றார்கள். அந்த நபர் தனக்கு பேய் பிடித்து விட்டது என்ற பயத்தினாலே மனச்சிதைவு நோய்க்கு உள்ளாகி இருட்டை கண்டு பயப்படுவது சத்தத்தை கேட்டு உருவெடுத்து ஆடுவது முதலான செயல்களில் ஈடுபடுகின்றார். ஆவரது ஆள் மனதில் பதியப்பட்டுள்ள பேய் பிசாசு பற்றிய கற்பனைகள் அவர் உருவந்து ஆடும் போது “டேய் உன்னை என்னசெய்கிறேன் பார் இரத்தக்காட்டேரி வந்திருக்கிறேன்டா சுடலைதாடன் வந்திருக்கிறேன்டா” என்றெல்லாம் பிதற்றவைக்கிறது பேயை விரட்டுவதாக சொல்லிக்கொள்ளும் புசாரிகள் பேயோட்டிகள் ஒரு மனோதத்துவ மருத்துவர் செய்யும் வேலையை மந்திர தந்திர மடை கழிப்பு என்ற பெயரில் செய்கின்றார்கள் பேயோட்டும் சடங்குகளைப்பார்த்தால் எல்லாமே இரவில் தான் செய்யப்படும் உடுக்கடி சாம்பிராணிப்புகை படையல் என்று பேய் பிடித்தவரையும் அவருக்கு பேய் பிடித்துவிட்டது என்று சொல்லி கொள்பவர்களையும் பேய் வந்து விட்டது என்ற ஒரு பயங்கர நிலைக்கு பேயோட்டி கொண்டு வருகின்றார்;.பேய் பிடித்த நபரை சவுக்கால் அடித்தோ வேப்பிலையால் அடித்தோ “டேய் போகப்போறியா இல்லையா” என்று மிரட்டுகின்றார் இந்த மிரட்டலில் உச்சக்கட்டத்தில் “நான் போகிறேன் போகிறேன்” என்று பேய் பிடித்தவரை சொல்ல வைக்கிறார். இதில் மெஸ்மரிசம் எனப்படும் தன்வயப்படுத்தும் விளையாட்டும் அடங்கியிருக்கிறது கடைசியில் கோழி அல்லது ஆட்டை பலியிட்டு சந்தியில் கொண்டுபோய் படையல் படைத்து, கழிப்பு கழித்து ஆலமரத்தில் அல்லது புளிய மரத்தில் ஆணிஅடித்து பேய் பிடித்தவரின் கையில் நூல் அல்லது அச்சரக்கூட்டில் வைக்கக்கூடியதாக இயந்திரம் அல்லது தகடு ஒன்றைக்கட்டியவுடன் இந்தப் பேயோட்டும் சடங்கு முடிந்துவிடும். பேய் பிடித்தவர்களுக்கு தன்னை பிடித்த பேய் ஓடிவிட்டது என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. அவரது உறவினருக்கும் இதே எண்ணம் ஏற்பட பேய் ஓடியே போய்விடுகிறது .இந்த நம்பிக்கைதான் என்பதுதான் அந்த பேய் பிடித்த நபரை குணப்படுத்துகிறது.
செய்வினை பில்லி சூனியம் என்றால் என்ன ?
நமது கிராமங்களில் அடிக்கடி பில்லி சூனியம் வைத்துவிட்டதைப்பற்றியும் செய்வினை செய்வதைப்பற்றியும் கதைப்பதைக் கேட்டிருப்பீர்கள். இந்தச்செய்வினை பில்லி சூனியம் என்பவற்றை எடுப்பதற்கென்று சில மாயாவிகள் திரிந்து கொன்டிருப்பதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள.; இந்த செய்வினை பில்லி சூனியம் என்பவற்றில் ஒரு தகடு தலைமுடி எலும்பு போன்ற பொருட்களை நிலத்துக்குள் புதைத்த நிலையில் எடுப்பதையும் நீங்;கள் பார்த்திருக்கலாம்உண்மையில் பில்லி சூனியம் செய்வினை என்பது என்ன ? இவை கூட ஒரு வகை மனோ வியாதியுடன் சம்மந்தப்பட்ட மூடநம்பிக்கையாகும். எதிராளி ஒருவரின் காலடி மண் தலைமுடி அவர் பாவித்த உடை அல்லது ஏதாவது ஒரு பொருளை எடுத்து மடை செய்து கெட்ட ஆவிகளை அவற்றின் மேல் ஏவிவிட்டால் அவரை அழித்து விட்டால் என்பது இந்த பில்லி சூனியம் செய்வினை என்பவற்றின் சாராம்சமாகும் நல்ல செழிப்புடன் இருந்த ஒரு குடும்பம் திடீரென்று நெடிந்து போய்விட்டால் அல்லது ஒரு குடும்பத்தில் திடகாத்திடமாக இருந்த ஒருவர் திடீரென்று இறந்து விட்டால்அல்லது தீராத நோய் வாய்ப்பட்டால் இதெல்லாம் பில்லி சூனியம் செய்வினை செய்த வேலை என்று கதைகட்டி விடுவார்கள் இன்று நல்ல நிலையில் ஓஹோவென்று கோடிக்கணக்கான இலாபத்துடன் இயங்கும் கம்பனிகள்அவற்றின் பங்குச்சந்தை சரிந்து விட்டால் பாரிய நட்டத்தை சந்தித்து மூடப்படும் நிலைக்கு ஆளாகி விடுகின்றன சாள்ஸ் நோய் போன்ற நோய்கள் திடீரென பரவி எதிர்பாராத விதமாக பலர் இறந்து போவதை நாங்கள் பார்க்கின்றோம்
இதேபோல தான் ஒருவர் வியாபாரத்தில் நொடிந்து போவதும் நோயில் இறப்பதும் ஏன் என்று விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தால் அதற்கு நம்பத்தக்க காரணங்கள் இருக்கும். ஆனால் சமூகத்தில் இருக்கும் ஏமாற்றும் பேர்வழிகள் இதெல்லாம் செய்வினைகள் பில்லி சூனியம் என்று சொல்லி பிழைப்பு நடத்துகின்றார்கள் பெரும்பாலும் இந்த பிழைப்புவாதிகள் தாங்களே கொண்டுபோய் தகடுகளையும் எலும்புகளையும் தலைமுடியையும் சம்மந்தப்பட்டவர்கள் வீடுகளில் புதைத்துவிட்டு அவர்கள் வீட்டில் செய்வினை இருப்பதாகவும் பில்லி சூனியம் வைக்கப்பட்டிருப்பதாகவும் கதைகட்டி விடுகின்றார்கள்.தந்திர வித்தை தெரிந்த சில மாயாவிகள் கண்முன்னாலேயே சில தந்திரங்களை நிகழ்த்திக் காட்டுவதுண்டு.நடைமுறையில் இது சாத்தியம் என்றால் இராணுவ முகாம்களை அழிப்பதற்கு நூற்றக்கணக்கான போராளிகளை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லையே!ஒரு சில மந்திரவாதிகளை அனுப்பினால் போதுமே!
நூல்கட்டுவது தாயத்துக் கட்டுவது நல்லதா?
பல பேர் கோவில் பூசையில் வைக்கப்பட்ட சக்திவாய்ந்த நூல் அல்லது தாயத்து என்று சொல்லி அவற்றை கையில் அல்லது கழுத்தில் கட்டியிப்பதையும் கண்டிருப்பீர்கள்.(சிலர் அரைநாண் கொடியில் கட்டுவதுண்டு) சில வேளைகளில் நீங்கள் கூட அவற்றைக் கட்டியிருக்கலாம். இவற்றைக் கட்டினால் கெட்ட ஆவிகள் அணுகாது, நோய்கள் வராது. ஆபத்துக் களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம், முக்கியமாக உயிருக்கு ஆபத்து வரும் போது இவற்றின் சக்தியால் அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று இவற்றைக் கட்டுபவர்கள் நம்புகின்றார்கள்.நடைமுறையில் ஒரு எறிகணை, ஒரு விமானக் குண்டு,அல்லது ஒரு கைக்கண்டு உங்களுக்கு அருகில் விழுந்து வெடிக்கும் போது,நான் நூல் கட்டியிருக்கிறேன் தாயத்துக் கட்டியிருக்கிறேன் “எனக்கு ஒன்றும் நடக்காது” என்று சொல்லிக் கொண்டு நீங்கள் அதன் அருகே போய் நின்றால் சிதறிப் போய் விடுவீர்கள்.இதுதான் யதார்;த்தம். இதிலிருந்து தப்புவதற்கு ஓடிச்சென்று தற்காப்பு நிலை எடுப்பது தான் அறிவு பூர்வமான செயற்பாடு.மற்றப்படி நூல் தாயத்து என்பதெல்லாம் வெறும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவையே.முற்காலத்தில் பயமும் மூடநம்பிக்கைகளும் நம்மவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது.இதை போக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு ஏற்பாடு தான் இந்த நூல் கட்டுவது, தாயத்துக் கட்டுவது என்பதெல்லாம்;.ஒரு இடத்தில் பேய் பிசாசு இருக்கிறது என்று கதை பரவிவிட்டால் அந்த இடத்திற்கு ஒருவரும் போக மாட்டார்கள்.எனவே மக்களை அங்கே போக வைப்பதற்கு இப்படி நூல் தாயத்து மகிமைகளைச் சொல்லி அனுப்பி வைத்தார்கள்.கோளைகளாகவும் பயந்த சுபவம் உள்ளவர்களாகவும் இருந்த சிலரை தாயத்துக் கட்டடினால் வீரம் வரும் என்று சொல்லி அவர்களிடமிருந்த தாழ்வு மனப்பான்மையைப் போக்கிய பல கதைகளை நமது புராணங்களில் நீங்கள் படித்திருக்லாம்.ஆனால் அன்று நம்பி;க்கையை வளர்ப்பற்கு அறிமுகப்படுத்தப் பட்ட இந்தப் பழக்கம் இப்போது மூடநம்பிக்கையின் அடையாளமாகிவிட்டது.
சம்பிரதாயங்களும் சடங்குகளின் வகைகளும்
நமது சமூகத்தில் இருக்கக் கூடிய சடங்குகளை பொதுவாக மகிழ்வுச் சடங்குகள் அல்லது மங்கலச் சடங்குகள்,துயரச் சடங்குகள் அல்லது அமங்கலச் சடங்குகள் என்று இரண்டு வகைப்படுத்ததலாம். திருமணம்,குழந்தை பிறப்பு, வீடு கட்டுதல் குடி போதல்,தொழில் தொடங்குதல் முதலானவை தொடர்பாகச் செய்யப்படும் சடங்குகள் மகிழ்வுச் சடங்குகளாகவும்,மரணம், மற்றும் மரணத்தின் பின்னான மறு உலக வாழ்க்கை தொடர்பாகச்; செய்யப்படும் சடங்குகள், அமங்கலச் சடங்கு களாகவும் கருதப்படுகின்றன.
சடங்குகள் உருவானது எப்படி?
நாடோடிகளாகத் திரிந்த மனிதர்கள் இயற்கையை வென்று தங்களது தனித்துவத்தை நிலைநாட்டத் தெரியாமல் தங்களுக்கு அச்சத்தரக்கூடியது என நம்பிய விடயங்களில் இருந்த தப்பிப்பதற்காக சில செயல்களைச் செய்தார்கள். உதாரணமாக பலி கொடுப்பது. அதாவது கடவுளின் அல்லது தேவதையின் அல்லது ஒரு கெட்ட ஆவியின் சீற்றத்தை தணிப்பதற்காக வேள்வி நடத்துவது,படையல் வைப்பது என்பவற்றைக் குறிப்பிடலாம்;. பின்னர் இயற்கையை வெல்லப் பழகி நிலத்தை தங்களது உடமையாக்கி,சிறு சிறு கிராமங்கள் என்ற அடிப்படையில் குழுக்களாக வாழ ஆரம்பித்த போது அப்போது அரசு அல்லது அரசாங்கம் என்ற ஒன்று இருக்கவில்லை. அவ்வாறு அரசு தோன்றாத நிலையில் மக்களுடைய இருப்பை ஒழுங்கு படுத்துவதற்கான சட்டங்களும் இருக்கவில்லை.எனவே தங்களது நாடோடி வாழ்வுக்காலத்தில் நிலவிய பழக்க வழக்கங்களை ஒருங்கிணைத்து அதை தங்களது குழு அல்லது சமூக நடைமுறையாகக் கொண்டு வந்தார்கள்.குழுத் தலைவர்கள் அல்லது குழுத்தலைவியால் கடைப்பிடிக்கப்பட்ட இத்தகைய நடைமுறைகள் பின்னர் அரசு தோன்றிய போது பண்பாண்டுக் கூறுகள் என்ற புதிய வடிவத்தை எடுத்து நிலைபெற்றவிட்டன.
மங்கலச் சடங்குகள்
தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் மங்கலச் சடங்குகள் என்று பார்த்தால் குழந்தை பிறப்பு ,சாமத்தியச் சடங்கு,திருமணச் சடங்கு, தொழில் சடங்கு என்பவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம்.பொதுவாக இந்தச் சடங்குகளின் நோக்கம் தாங்கள் நடத்த இருக்கும் செயற்பாடுகள் அல்லது தங்களுக்கு இயற்கையாக நடைபெறும் செயற்பாடுகள் தடங்கலின்றி நடைபெறவேண்டும். தங்களுக்கும் தங்களைச் சேர்ந்தவர்களுக்கும் எந்தவித கேடுகளும் நேர்ந்துவிடக்கூடாது என்பதாகும்.கெட்ட ஆவிகள், தீமை செய்யும் தேவதைகள் போன்றவை தங்களது மங்கள நிகழ்வுகளை கெடுத்துவிடும், என்கின்ற பயம் ஆரம்ப காலம் தொட்டே மனிதர்களிடம் இருந்து வருகிறது.நமது கிராமங்களில் எந்தவிதமான மங்கள நிகழ்வுகள் நடந்தாலும் மாட்டுச்சாணத்தை ஒரு கைபிடி அளவுக்குப் பிடித்து அதில் ஒரு அறுகம் புல்லை வைத்து ,அதை பிள்ளையார் என்று உருவகப்படுத்தி, அதற்குப் பூசை செய்துவிட்டே அடுத்த நிகழ்வை ஆரம்பிப்பதைப் பார்க்கலாம்.விக்கினங்களை தீர்ப்பவர் விநாயகர் அதாவது பிள்ளையாரை வைத்துப் பூசை செய்துவிட்டு செயலை தொடங்கினால் அவர் அந்தச் செயலுக்கு இடையூறு வராமல் காப்பாற்றுவார் என்பது மக்கள் மத்தியிலே காலாகாலமாக பதிந்து போயுள்ள ஒரு நம்பிக்கையாகும்.இப்போது நாங்கள் ஒரு நிகழ்வை நடத்தும் போது அந்த நிகழ்வில் கலந்து கௌ;பவர்களின் முக்கியத்வத்தைப் பொறுத்து, அந்த நிகழ்வுக்கு எப்படிப் பாதுகாப்பு வழங்குவது என்பது பற்றித் தீர்மானிக்கிறோம்.அதற்குரிய ஆட்களை அதற்குரிய கருவிகளுடன் அவர்கள் எங்கே இருக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்த இடத்துக்கு அனுப்புகிறோம்;.இதிலேயும் நாங்கள் அனுப்புகின்ற ஆட்கள் அந்த நிகழ்வுக்கு இடையூறு வராமல் பாதுகாப்பார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.இதே வேலையைத் தான் மாட்டுச் சாணத்தில் உருவாக்கிய பிள்ளையாரும் செய்கிறார்;.அதாவது அவர் செய்வார் என்று மக்கள்; மனதிலே ஏற்படுகின்ற நம்பிக்கை, தாங்கள் செய்கின்ற நிகழ்வுக்கு ஏதாவது கெடுதல் நடந்துவிடுமோ என்ற பயத்தைப் போக்கிவிடுகிறது.அதற்காக நமது தேசியத் தலைவர் கலந்து கொள்கின்ற ஒரு பொது நிகழ்வுக்கு மாட்டுச் சாணத்தில் ஒரு பிள்ளையாரை பிடித்து வைத்து விட்டு எல்லா பாதுகாப்பையும் அவர் கவனித்துக் கொள்வார் என்று இருந்துவிட முடியாது.சடங்குகள் எல்லாமே நம்பிக்கையை பெரும்பாலும் மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
வளைகாப்பு
இது கருவுற்றிருக்கும் பெண்களுக்கு எட்டாவது மாதத்தில் செய்யப்படும் ஒரு சடங்காகும்.தமிழகத்தில் பொது வழக்கமாக இருக்கும் இது, நமது தாயகத்திலும் பல இடங்களில் வழக்கில் இருந்தது.குறிப்பாக இறுக்கமான இந்துத்துவக் கட்டமைப்பு உள்ள இடங்களில் இந்தச் சடங்கு இடம்பெற்றவந்தது.இப்போது பெரும்பாலும் இது அருகிக் கொண்டு வருகிறது.கருவுற்ற பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டி புதுப்புடவை கட்டுவித்து,வீட்டின் நடுக்கூடத்தில் அல்லது பொது இடத்தில் இருத்தி, உறவினர்கள் எல்லாம் சேர்ந்து கை நிறை காப்பு அணிவித்து பல்வேறு விதமான தின்பண்டங்களை வைத்துப் படைத்து ஊட்டிவிடும் இது ஒரு பெரிய சடங்காகும்.இந்தச் சடங்கைச் செய்தால் தாயின் வயிற்றில் உள்ள குழந்தை நல்ல ஆரேக்கியமாக வளரும்,பிரசவம் சுபப் பிரசவமாகும் என்றெல்லாம் இதை செய்யும் மக்கள் நம்புகிறார்கள்;.இதைச் செய்யாவிட்டால் தாய்க்கும் சேய்க்கும் கேடு நிகழ்ந்துவிடும் என்ற பயமும் மக்களுக்கு ஊட்டப்பட்டிருக்கிறது.விஞ்ஞானமும் மருத்துவமும் வளராத அந்தக் காலத்தில் பிரசவம் என்பது பெண்களைப் பொறுத்தவரை ஒரு மறுபிறப்பு மாதிரியே இருந்தது.அதாவது ஒரு பெண் சுகமாக குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் மறுபிறப்பு பிறந்ததற்கு சமம் என்று கருப்பட்டது. ஏனெனில் அந்தக்காலத்தில் அந்தளவுக்கு பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழப்பது அதிகமாக இருந்தது. பிரசவத்தின் போது தான் இறந்து விடுவேனோ? இந்தக் குழந்தையை எப்படிப் பெற்றெடுக்கப் போகிறேன்? ஏன்கின்ற பயம் பொதுவாக எல்லா கர்ப்பிணிப் பெண்களிடமும் இருந்தது.ஏனெனில் பல கர்ப்பிணிகள் பிரசவத்தின் போது இறந்ததை அவள் பார்த்திப்பாள் அல்லது உறவினர்கள் சொல்லக் கேட்டிருப்பாள்.இந்தப் பயம் அந்தப் பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதித்து அவளையும் நோயாளியாக்கிவிடுகிறது. இதைப் போக்கி அந்தப் பெண்ணின் மனதில் தன்நம்பிக்கையை வளர்ப்பது தான் இந்தச் சடங்கின் முக்கிய நோக்கமாகும்.மருத்துவமும் அறிவியலும் அதிவேகமாக வளர்ந்துவிட்ட இந்தக்காலத்தில் இந்தக்hலத்தில் இந்தச் சடங்கு செல்வச் செருக்கையும் போலிக் கௌரவத்தையும் வெளிக்காட்டுவதற்கான ஒரு பகட்டுச் சடங்காக மாறிவிட்டது.
ஏணைத் துடக்கு அல்லது தொட்டில் துடக்கு
ஒரு குழந்தை பிறந்து அதை ஏணையில் அல்லது தொட்டிலில் போடும் வரையுள்ள காலத்தை துடக்குக் காலம் என்று சொல்வார்கள்;.சதாரண மக்களுக்கு இது 31 நாட்களாகவும் சில ஆளும் வர்கத்தினருக்கு 15 நாளாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.இந்தக் காலத்தில் குழந்தையின் இரத்த உறவினர்கள் மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் கோவில்களுக்கச் செல்வதும் தடுக்கப்பட்டிருக்கிறது.மற்றவர்களும் இந்த துடக்கு வீட்டுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டு;ம் என்றும் அவ்வாறு தவர்க்க முடியாத காரணங்களால் செல்பவர்கள் வீட்டுக்கு வந்ததும் குளித்து முழுகிவிட்டுத்தான் வீட்டுக்குள் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டது.இப்போது இந்த துடக்கு சம்மந்தமான கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றின் செயற்பாட்டுத் தன்மையை இழந்துவருகின்றன.உண்மையில் மருத்துவ வசதிகள் மிகவும் குறைவாக இருந்த அந்தக் காலத்தில் சின்னம்மை பெரியம்மை வயிற்றோட்டம், கொள்ளைநோய்(பிளேக்) போன்ற தொற்று நோய்களும் அதிமாக இருந்தன. இவற்றுக்கான தடுப்பு மருந்துகளும் அப்போது பெரிய அளவுக்கு இருக்கவில்லை.பிறந்த குழந்தையை வெளியில் கொண்டு செல்வதும், குழந்தையின் இரத்த உறவினர்கள் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களுக்குச் சென்றுவிட்டு வந்து குழந்தையுடன் இருப்பதும்,வெளியாட்கள் அதிகளவுக்கு குழந்தை பிறந்த வீட்டுக்குச் செல்வதும் நோய் தொற்றுக்கு வழிவகுக்கும் என்பதனாலேயே இந்த நடைமுறை ஆரம்ப காலத்தில் கொண்டுவரப்பட்டது.ஆனால் பிற்காலத்தில் மதவாதிகளும் அதிகார வர்க்கமும் இதை ஒரு வரட்டுச் சம்பிரதாயமாக்கி தீட்டு என்ற தீண்டாமை வட்டத்துக்குள் இதை தள்ளிவிட்டதால் இது ஆரம்பகால சமூக நோக்கிலிருந்து வழுவிட்டது.
(தெடரும்)