29
அடக்குமுறைக்கு உள்ளாகின்ற ஒரு இனம் தனது விடுதலைக்காக போராடுகின்ற போது அதற்கு ஆதரவு வழங்குவதென்பதும் . ஒரு சர்வதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் தமது உரிமைகளுக்காக போராடுகின்ற போது அதற்கு ஆதரவு வழங்குவதென்பதும். விடுதலையை விரும்புகின்ற அனைவரினதும் தார்மீக கடமை.
இதில் தனி மனிதர்கள், அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், விடுதலை இயக்கங்கள், அரசாங்கங்கள் என்று அனைத்துத் தரப்பினரும் அத்தகைய ஆதரவைத் தொடர்ந்து விடுதலைக்காகப் போராடுகின்ற மக்களுக்கும் இயக்கங்களுக்கும் வழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
தார்மீக அடிப்படையில் வழங்கப்படுகின்ற இந்த ஆதரவை எந்தச் சர்வதேசச் சட்டமும் தடை செய்யவில்லை. ஆனாலும் ஒடுக்குமுறை அதிகரிக்கின்ற கட்டத்தில் இராணுவ ரீதியான ஆதரவு, இராணுவ ரீதியான தலையீடு என்பது நிகழ்கின்ற போது அதுகூட விமர்சனத்திற்குரிய ஒன்றாகத்தான் இருக்கின்றது.
தன்னுடைய நாட்டின் விடுதலைக்காக மக்களின் விடுதலைக்காகப் போராடுகின்ற ஒரு விடுதலை இயக்கம், இன்னொரு நாட்டிலே இருக்கக்கூடிய தன்னைப் போன்ற விடுதலை இயக்கத்திற்கு உதவி வழங்குவது இயல்பு. அந்த உதவி இராணுவ உதவியாக இருந்தால் கூட அதை சர்வதேசச் சட்டங்கள் தடை செய்தாலும் அதில் நியாயம் இருப்பதாக ஏற்றுக்கொள்ளலாம்.
ஒரு சில தனிப்பட்ட நபர்களின் நலனுக்காக, இன்னொரு நாட்டின் உளவுப் பிரிவின் தேவைகளுக்காக ஒரு நாட்டின் ஆட்சியைக் கவிழ்க்க இன்னொரு நாட்டின் விடுதலை இயக்கம் துணை போவதென்பதை எந்த வகையிலும் ஒரு புரட்சிகர நடவடிக்கை என்று ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையில் ஒரு விடுதலை இயக்கம் அப்படி ஒரு ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதிமுயற்சிக்கு துணைபோகுமாக இருந்தால் அது ஒரு விடுதலை இயக்கம் என்ற தகுதியை இழந்துவிடும்.
உண்மையில் புளொட் இயக்கம் தான் செய்த உட்கொலைகள் காரணமாகவும் கெரில்லாப் போராட்டத்தை நிராகரித்த ஒரேயடியான இறுதி யுத்தம் என்கின்ற தவறான யுத்த தந்திரோபாயத்தாலும் விடுதலை இயக்கம் என்ற அங்கீகாரத்தை 99வீதம் ஏற்கனவே இழந்திருந்தது.
றோவின் தேவைக்காக மாலைதீவு அப்துல் ஹயுமின் ஆட்சியைக் கவிழ்க்க முனைந்ததன் மூலம் நூற்றுக்கு நூறு வீதம் அது விடுதலை இயக்கம் என்ற தகுதியை இழந்து தான் ஒரு கூலிப்படை என்பதை நிருபித்துவிட்டது புளொட்டின் மாலைதீவு நடவடிக்கை எந்த விதத்தில், எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் அது புரட்சிகர நடவடிக்கை என்று ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதாலும் இனி எத்தகைய நடவடிக்கைகள் மூலமும் ஒரு கூலிப்படையை புரட்சிகர விடுதலை இயக்கமாக மாற்ற முடியாது என்று தீர்மானித்ததாலுமே புளொட்டில் எஞ்சியிருந்த முன்னணி உறுப்பினர்கள் பலர் அதிலிருந்து வெளியேறினார்கள்;
ஆனால் றோ பாலபுத்தரை முன்னிறுத்தி சிறிலங்கா அரசியலில் தன்னுடைய காய் நகர்த்தலுக்குப் பயன்படுத்தக் கூடிய தலையாட்டி அமைப்பாக புளொட்டைப் பயன்படுத்த விரும்பியது. மறுபுறத்தில் சிறிலங்கா இராணுவம் புளொட்டை தங்களது கைக்கூலி அமைப்பாக உருவாக்குவதன் மூலமும் புலிகளின் பெயரால் புளொட்டைக் கொண்டு தமிழ் நாட்டில் சில காரியங்களைச் செய்விக்க விரும்பியதாகச் சொல்லப்படுகின்றது.
தமிழ் நாட்டில் புலிகளுக்கிருந்த ஆதரவு சிறிலங்கா இராணுவத்திற்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. வடமராட்சி லிபிரேசன் ஒப்பரேசன் மூலம் தாங்கள் அடைந்த வெற்றியை தோல்வியாக மாற்றிய ராஜீவ்காந்தியின் நடவடிக்கை அவர்களைப் பொறுத்தவரை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. ராஜீவ்காந்தியின் நடவடிக்கையை இந்திய இராணுவத்தை திருப்பித் தாக்கியதன் மூலம் புலிகள் எதிர்த்தால்கூட சிறிலங்கா இராணுவம் அதையிட்டு அதையிட்டுப் பெரிதாக சந்தோசப்படவில்லை.
புலிகளை இந்திய இராணுவத்தால் வெல்ல முடியாது என்று அவர்கள் நம்பினார்கள். புலிகளின் பெரிய பலமே தமிழ்நாடுதான். அங்கிருந்து தான் ஆயுதங்கள், உணவுப் பொருட்களை எல்லாம் கொண்டு வருகிறார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். தமிழ்நாட்டு ஆதரவு இருக்கும்வரை இந்தியா நிச்சயமாக தங்களது விவகாரத்தில் தலையிட்டுக்கொண்டுதான் இருக்கும் என்று அவர்கள் கணக்குப் போட்டார்கள்.
இலங்கையில் ஏற்படும் நெருக்கடிகளால் இந்திய இராணுவம் திருப்பி அழைக்கப்பட்டால்கூட லிபரேசன் ஒப்பரேசன் போல் தாங்கள் மேற்கொள்ளக்கூடிய எந்தவொரு பெரிய இராணுவ நடவடிக்கைக்கு எதிராகவும் இந்தியா தலையீடு செய்யும் என்று அவர்கள் கணித்தார்கள்.
எனவே புலிகளுக்கும் இந்தியாவுக்குமுள்ள முரண்பாட்டைப் பயன்படுத்தி புளொட் மூலம் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் சில சீரழிவு வேலைகளை செய்விப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மனதில் புலிகள் மேல் வெறுப்பை உருவாக்க சிறிலங்கா இராணுவம் திட்டமிட்டது
எனவே புலிகளுக்கும் இந்தியாவுக்குமுள்ள முரண்பாட்டைப் பயன்படுத்தி புளொட் மூலம் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் சில சீரழிவு வேலைகளை செய்விப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மனதில் புலிகள் மேல் வெறுப்பை உருவாக்க சிறிலங்கா இராணுவம் திட்டமிட்டது
அதாவது முக்கியமான நபர்களை கொலை செய்வது, கொள்ளைகள் அடிப்பது, பொதுமக்களுக்கு எதிரான மோதல்களை உருவாக்கி அப்பாவி மக்களைச் சுட்டுக் கொல்வது இப்படியான சம்பவங்களையெல்லாம் புலிகள்தான் செய்தார்கள் என மக்கள் நம்பும்படி புளொட்டைக் கொண்டு செய்விப்பதன் மூலம் தமிழ் நாட்டு மக்களுக்கு புலிகள் மேல் கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று வெறுப்பு ஏற்படும்படி செய்ய வேண்டும் என சிறிலங்கா இராணுவம் திட்டமிட்டது.இதன்மூலம் எதிர்காலத்தில் தமிழீழப்பிரதேசத்தில் தாங்கள் மேற்கொள்ளும் எந்தப் பெரிய இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்தும் தமிழ்நாட்டு மக்கள் பெரிதாக அக்கறை கொண்டு கிளர்ந்தெழுந்தபடி செய்ய வேண்டும் என்றும் விரும்பியது.
பொதுவாகத் தமிழ் நாட்டின் கிராமபபுறத்து மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு PLOT, EPRLF, ENDLF, TELO என்று இலங்கை இயக்கங்களை வேறுபடுத்திப் பார்க்கத்தெரியாது அவர்களைப் பொறுத்தவரை எல்லோருமே விடுதலைப் புலிகள் தான. புளொட் மோட்டார் சைக்கிளை கடத்தினாலும், சங்கிலி அறுத்தாலும், அதை விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என்று சொல்கின்ற மக்களும் அங்கே இருக்கின்றார்கள். ரெலோவோ ஈ.பி.ஆர்.எல்.எப்.போ அல்லது இயக்கத்தைவிட்டு ஒதுங்கிய ஆயுதக்குழுக்களோ செய்யும் கொள்ளைகள், கொலைகள், ஆள்கடத்தல்கள் கூட விடுதலைப்புலிகள்தான் செய்தார்கள் என்று நினைக்கின்ற பாமரத்தம் இன்னமும் தமிழ்நாட்டு கிராமங்களிலும் நகரங்களிலும் இருககின்றது. இதையெல்லாம் செய்பவர்கள் யார் என்ற உண்மை தெரிந்தும் கூட அதெல்லாம் விடுதலைப்புலிகளின் வேலை என்று பொதுப்படையாகச் சொல்லி மக்களை திசைதிருப்பி விடுவதற்கென்று பார்பனப் பத்திரிகைகள் வேறு இருக்கின்றன.
எனவே இதையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் சிறிலங்கா இராணுவத்தின் கூலிப்படையாக வேலை செய்வதற்கென்று வவுனியாவில் நவீன புளொட்டுக்கான முதல் கட்ட ஆயுத விநியோகமும் வவுனியா செட்டிகுளத்தில் வைத்து சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகின்றது
எனவே இதையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் சிறிலங்கா இராணுவத்தின் கூலிப்படையாக வேலை செய்வதற்கென்று வவுனியாவில் நவீன புளொட்டுக்கான முதல் கட்ட ஆயுத விநியோகமும் வவுனியா செட்டிகுளத்தில் வைத்து சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகின்றது
