19
சந்திரசேகரன் கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்ட மினி பஸ்கள், வான்கள், கார்கள் சகிதம் பெரும் ஆரவாரத்துடன் தலாவாக்கலயிலிருந்து நுவரெலியா கச்சேரிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய புறப்பட்டுச் சென்ற பின்பு ஒரு அரை மணி நேரம் கழித்து கார் ஒன்றில் ஜே.வி.பி.சகாக்கள் சகிதம் அவ்வழியால் சென்ற சங்கிலி தற்செயலாக நானுஓயா புகையிரத நிலையத்திற்கு முன்பாக இருந்த கடையில் சிகரட் வாங்க நிறுத்திய போது அங்கே நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது அவனுக்ககுச் சந்தேகம் வந்தது.
அவன் தான் சங்கிலி என்று அவர்கள் அறியா விட்டாலும் அவனது வாட்டசாட்டமான தோற்றத்தைப் பார்த்துவிட்டு மெதுவாக அங்கிருந்து நழுவ முயற்சித்தனர். உடனேயே சங்கிலி அவர்களை மடக்கிப் பிடித்து எத்தனிக்க அவாகள்; தங்கிளிடமிருந்த பிஸ்டலை எடுத்து அவனைச் சுட்டுவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்தனர். அதற்குள் உசாரான சங்கிலியும் அவர்களைவிட வேகமாக தன்னுடைய பிஸ்டலை எடுத்து லோட் பண்ணி அவர்களை சுட்டுவிட தீர்மானிக்க அங்கே ஒரு துப்பாக்கிச் சமரே நடக்க இருந்தது. நல்ல வேளையாக காரிலிருந்த ஜே.வி.பி காரர்கள் பாயந்து வந்து அவர்கள் இருவரையும் துப்பாக்கி முனையில் மடக்கி இழுத்துச் சென்று காரில் ஏற்றிவிட்டனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு நடந்த இந்தச் சம்பவம், அங்கிருந்த மக்களுக்கு திகில் நிறைந்த சினிமா படக்காட்சி ஒன்றைப் போலவே இருந்தது. அதிலும் இந்தச் சம்பவம் நடந்த இடத்திலிருந்து நானுஓயா பொலிஸ் நிலையம் 300 மீட்டர் தொலைவிலேயே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பின்பு அவர்கள் இருவரையும் கண்களைக் கட்டி ஜே.வி.பி.யினரின் மறைவிடம் ஒன்றுக்குக் கொண்டு சென்று விசாரித்ததில் முதலில் தாங்கள் சந்திரசேகரனைக் கொல்வதற்காக இ.தொ.கா.வைச் சேர்ந்த கந்தசாமி நாயுடுவால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் எனச் சொன்னார்கள். பின்பு கொஞ்சம் கவனித்து விசாரித்த போது தாங்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்திரசேகரனுக்கும், இ.தொ.க.வுக்கும் உள்ள முரண்பாட்டைப் பயன்படுத்தி சந்திரசேகரனை கொலை செய்வதன் மூலம் இ.தொ.க. உடைக்க அவர்கள் மட்டக்களப்பிலிருந்து அவர்களது தலைமையால் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக உண்மையைச் சொன்னார்கள்.
இதற்கிடையில் உமாமகேஸ்வரனுக்கு யாழ்ப்பாணம் போசவதாகச் சொல்லிவிட்டு தமிழகம் சென்றிருந்த வசந்தன் அங்கே சென்று ஈ.என்.டி.எல்.எவ் பிரமுகர்களைச் சந்தித்து உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்காக ஆலோசனையும், நிதி உதவியும் பெற்றுக் கொண்டு கொழும்புக்கு திரும்பி வந்து கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள அஜந்தா ஹோட்டலில் தங்கியிருந்தான்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்கனவே தமிழகத்தில் பேசியதன்படி ஈ.என்டி.எல்.எப். காரர்கள் 9 மி.மீ பிஸ்டல் ஒன்றைக் கொண்டு வந்து வசந்தனுக்குக் கொடுத்ததாகச் கொல்லப்படுகின்றது.
ஆயுதம் கைக்கு வந்து சேர்ந்ததும் அவன் வவுனியாவில் தங்கியிருந்து பிரசார வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தனது சகாவான சந்திரனை இரகசியமாக கொழும்புக்கு வரவழைத்து உமாமகேஸ்வரனது நடமாட்டங்களை கண்காணிக்கச் செய்தான். கொழும்பில் உமாமகேஸ்வரனுக்கு காவலாக அவரது நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர்களான ராபின், ஆச்சிராசன், சக்திவேல் ஆகியோர் ஒரு கவசம் போலட இருந்ததால் அவர் மலையகத்திற்குச் செல்லும் போது அதை அறிந்து பின் தொடர்ந்து சென்று வழியில் வைத்தோ அல்லது மலையகத்தில் வைத்தோ அவரைக் கொலை செய்வது என்று முடிவு செய்தனர்.
இது இவ்வாறு இருக்க யாழ்குடா நாட்டில் னுPடுகுன் சார்பில் தேர்தலில் போட்டியிட கரவை கந்தசாமியைத் தவிர வேறு எவரும் முன்வராத காரணத்தால் இயக்க உறுப்பினர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அதிலும் குடாநாட்டில் தேர்தல் பிரசாரம் எதுவும் செய்ய முடியாத நிலையில் மலையகத்திலேயே தேர்தல் வேலைகளுக்கும், தேர்தல் பிரசாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க உமாமகேஸ்வரன் தீர்மானித்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வரும் அனைத்து மினி பஸ்களும், சுழற்சி முறையில் தோட்டப் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மினிபஸ் ஓட்டுனர்களோ, உரிமையாளர்களோ புளொட்டின் மீதான அபிமானத்தின் காரணமாக அங்கு செல்ல முன்வரவில்லை. வவுனியாவிலுள்ள புளொட் தடைமுகாமைத் தாண்டி யாழ்ப்பாணம் சென்றுவர வேண்டுமே என்ற பயத்தின் காரணமாகவே மலையகத்திற்கு வந்திருந்தனர்.
தேர்தல் வாக்களிப்பு தினத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போது உமாமகேஸ்வரன் மலையகத்திற்கு வந்திருந்தார். அவருக்கும் சந்திரசேகரனுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கென தனக்கு நம்பிக்கையான சிலரை சங்கிலி மலையகத்திற்கு அழைத்திருந்தான்.
இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தாங்களும் தேர்தல் வேலை செய்ய வவுனியாவில் உள்ளவர்களால் அனுப்பி வைக்கப்பட்டதாகச் சொல்லிக் கொண்டு சந்திரனும், வசந்தனும் கூட மலையகம் வந்தனர்.
அவர்களுக்கு மலையகம் என்பது, புதிய இடம், சந்திரசேகரனுக்கு இருந்த இளைஞர் ஆதரவும் எழுச்சியும் அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று. தலவாக்கல நகரத்தில் மினிபஸ்சில் வந்து அவர்கள் இறங்கியதைத் தெரிந்து கொண்ட சங்கிலி உடனேயே உமாமகேஸ்வரனுக்கு அதை அறிவித்தான்.
அவர்கள் அங்கு எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட உமாமகேஸ்வரன் உடனடியாக அவர்களை அழைத்துச் சென்று ஜே.வி.பி.யினருக்குப் பயிற்சி வழங்கும் பகுதியில் வைத்துக் கொலை செய்துவிடும்படி உத்தரவிட்டார்.
தான் அதைப் பார்த்துக் கொள்வதாக உமாமகேஸ்வரனுக்குச் சொன்ன சங்கிலி நீங்கள் இங்கே இருக்க வேண்டாம் ஒருத்தருக்கும் தெரியாமல் கொழும்புக்கு உடனே போய்விடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டான். உமாமகேஸ்வரனுக்கும் அவன் சொன்;னது சரி என்று படவே உடனடியாக அன்றிரவே யாருக்கும் தெரியாமல் கொழும்பு திரும்பினார்.
இது தெரியாமல் அவர் அங்கு தான் தங்கியிருப்பதாக நம்பிக் கொண்டிருந்த வசந்தனையும் சந்திரனையும் தனது நம்பிக்கைக்குரியவர்கள் போலப் பேசி தலவாக்கல, ஹட்டன் பகதியில் நடந்த இரண்டு கூட்டங்களை கண்காணிக்கும் பொறுப்பை அவர்களுக்கே கொடுத்தான். அடுத்தபடியாக ஜே.வி.பி.பகுதிக்கு அவர்களை தந்திரமாக அழைத்துச் சென்று அங்கே வைத்து அவர்களைக் கைது செய்து கொலை செய்து விடுவதென்பது சங்கிலியின் திட்டம்.
வசந்தனதும் சந்திரனதும் எண்ணம் வேறு விதமாக இருந்தது. அன்றிரவே உமாமகேஸ்வரனை அங்கேயே வைத்து கொலை செய்துவிட்டு தேவைப்பட்டால் சங்கிலியையும் கூடக் கொலை செய்துவிட்டு வாகனமொன்றைக் கடத்திக் கொண்டு தப்பிச் செல்ல அவர்கள் தீர்மானித்தனர்.
சந்திரசேகரன் கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்ட மினி பஸ்கள், வான்கள், கார்கள் சகிதம் பெரும் ஆரவாரத்துடன் தலாவாக்கலயிலிருந்து நுவரெலியா கச்சேரிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய புறப்பட்டுச் சென்ற பின்பு ஒரு அரை மணி நேரம் கழித்து கார் ஒன்றில் ஜே.வி.பி.சகாக்கள் சகிதம் அவ்வழியால் சென்ற சங்கிலி தற்செயலாக நானுஓயா புகையிரத நிலையத்திற்கு முன்பாக இருந்த கடையில் சிகரட் வாங்க நிறுத்திய போது அங்கே நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது அவனுக்ககுச் சந்தேகம் வந்தது.
அவன் தான் சங்கிலி என்று அவர்கள் அறியா விட்டாலும் அவனது வாட்டசாட்டமான தோற்றத்தைப் பார்த்துவிட்டு மெதுவாக அங்கிருந்து நழுவ முயற்சித்தனர். உடனேயே சங்கிலி அவர்களை மடக்கிப் பிடித்து எத்தனிக்க அவாகள்; தங்கிளிடமிருந்த பிஸ்டலை எடுத்து அவனைச் சுட்டுவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்தனர். அதற்குள் உசாரான சங்கிலியும் அவர்களைவிட வேகமாக தன்னுடைய பிஸ்டலை எடுத்து லோட் பண்ணி அவர்களை சுட்டுவிட தீர்மானிக்க அங்கே ஒரு துப்பாக்கிச் சமரே நடக்க இருந்தது. நல்ல வேளையாக காரிலிருந்த ஜே.வி.பி காரர்கள் பாயந்து வந்து அவர்கள் இருவரையும் துப்பாக்கி முனையில் மடக்கி இழுத்துச் சென்று காரில் ஏற்றிவிட்டனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு நடந்த இந்தச் சம்பவம், அங்கிருந்த மக்களுக்கு திகில் நிறைந்த சினிமா படக்காட்சி ஒன்றைப் போலவே இருந்தது. அதிலும் இந்தச் சம்பவம் நடந்த இடத்திலிருந்து நானுஓயா பொலிஸ் நிலையம் 300 மீட்டர் தொலைவிலேயே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பின்பு அவர்கள் இருவரையும் கண்களைக் கட்டி ஜே.வி.பி.யினரின் மறைவிடம் ஒன்றுக்குக் கொண்டு சென்று விசாரித்ததில் முதலில் தாங்கள் சந்திரசேகரனைக் கொல்வதற்காக இ.தொ.கா.வைச் சேர்ந்த கந்தசாமி நாயுடுவால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் எனச் சொன்னார்கள். பின்பு கொஞ்சம் கவனித்து விசாரித்த போது தாங்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்திரசேகரனுக்கும், இ.தொ.க.வுக்கும் உள்ள முரண்பாட்டைப் பயன்படுத்தி சந்திரசேகரனை கொலை செய்வதன் மூலம் இ.தொ.க. உடைக்க அவர்கள் மட்டக்களப்பிலிருந்து அவர்களது தலைமையால் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக உண்மையைச் சொன்னார்கள்.
இதற்கிடையில் உமாமகேஸ்வரனுக்கு யாழ்ப்பாணம் போசவதாகச் சொல்லிவிட்டு தமிழகம் சென்றிருந்த வசந்தன் அங்கே சென்று ஈ.என்.டி.எல்.எவ் பிரமுகர்களைச் சந்தித்து உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்காக ஆலோசனையும், நிதி உதவியும் பெற்றுக் கொண்டு கொழும்புக்கு திரும்பி வந்து கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள அஜந்தா ஹோட்டலில் தங்கியிருந்தான்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்கனவே தமிழகத்தில் பேசியதன்படி ஈ.என்டி.எல்.எப். காரர்கள் 9 மி.மீ பிஸ்டல் ஒன்றைக் கொண்டு வந்து வசந்தனுக்குக் கொடுத்ததாகச் கொல்லப்படுகின்றது.
ஆயுதம் கைக்கு வந்து சேர்ந்ததும் அவன் வவுனியாவில் தங்கியிருந்து பிரசார வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தனது சகாவான சந்திரனை இரகசியமாக கொழும்புக்கு வரவழைத்து உமாமகேஸ்வரனது நடமாட்டங்களை கண்காணிக்கச் செய்தான். கொழும்பில் உமாமகேஸ்வரனுக்கு காவலாக அவரது நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர்களான ராபின், ஆச்சிராசன், சக்திவேல் ஆகியோர் ஒரு கவசம் போலட இருந்ததால் அவர் மலையகத்திற்குச் செல்லும் போது அதை அறிந்து பின் தொடர்ந்து சென்று வழியில் வைத்தோ அல்லது மலையகத்தில் வைத்தோ அவரைக் கொலை செய்வது என்று முடிவு செய்தனர்.
இது இவ்வாறு இருக்க யாழ்குடா நாட்டில் னுPடுகுன் சார்பில் தேர்தலில் போட்டியிட கரவை கந்தசாமியைத் தவிர வேறு எவரும் முன்வராத காரணத்தால் இயக்க உறுப்பினர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அதிலும் குடாநாட்டில் தேர்தல் பிரசாரம் எதுவும் செய்ய முடியாத நிலையில் மலையகத்திலேயே தேர்தல் வேலைகளுக்கும், தேர்தல் பிரசாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க உமாமகேஸ்வரன் தீர்மானித்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வரும் அனைத்து மினி பஸ்களும், சுழற்சி முறையில் தோட்டப் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மினிபஸ் ஓட்டுனர்களோ, உரிமையாளர்களோ புளொட்டின் மீதான அபிமானத்தின் காரணமாக அங்கு செல்ல முன்வரவில்லை. வவுனியாவிலுள்ள புளொட் தடைமுகாமைத் தாண்டி யாழ்ப்பாணம் சென்றுவர வேண்டுமே என்ற பயத்தின் காரணமாகவே மலையகத்திற்கு வந்திருந்தனர்.
தேர்தல் வாக்களிப்பு தினத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போது உமாமகேஸ்வரன் மலையகத்திற்கு வந்திருந்தார். அவருக்கும் சந்திரசேகரனுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கென தனக்கு நம்பிக்கையான சிலரை சங்கிலி மலையகத்திற்கு அழைத்திருந்தான்.
இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தாங்களும் தேர்தல் வேலை செய்ய வவுனியாவில் உள்ளவர்களால் அனுப்பி வைக்கப்பட்டதாகச் சொல்லிக் கொண்டு சந்திரனும், வசந்தனும் கூட மலையகம் வந்தனர்.
அவர்களுக்கு மலையகம் என்பது, புதிய இடம், சந்திரசேகரனுக்கு இருந்த இளைஞர் ஆதரவும் எழுச்சியும் அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று. தலவாக்கல நகரத்தில் மினிபஸ்சில் வந்து அவர்கள் இறங்கியதைத் தெரிந்து கொண்ட சங்கிலி உடனேயே உமாமகேஸ்வரனுக்கு அதை அறிவித்தான்.
அவர்கள் அங்கு எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட உமாமகேஸ்வரன் உடனடியாக அவர்களை அழைத்துச் சென்று ஜே.வி.பி.யினருக்குப் பயிற்சி வழங்கும் பகுதியில் வைத்துக் கொலை செய்துவிடும்படி உத்தரவிட்டார்.
தான் அதைப் பார்த்துக் கொள்வதாக உமாமகேஸ்வரனுக்குச் சொன்ன சங்கிலி நீங்கள் இங்கே இருக்க வேண்டாம் ஒருத்தருக்கும் தெரியாமல் கொழும்புக்கு உடனே போய்விடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டான். உமாமகேஸ்வரனுக்கும் அவன் சொன்;னது சரி என்று படவே உடனடியாக அன்றிரவே யாருக்கும் தெரியாமல் கொழும்பு திரும்பினார்.
இது தெரியாமல் அவர் அங்கு தான் தங்கியிருப்பதாக நம்பிக் கொண்டிருந்த வசந்தனையும் சந்திரனையும் தனது நம்பிக்கைக்குரியவர்கள் போலப் பேசி தலவாக்கல, ஹட்டன் பகதியில் நடந்த இரண்டு கூட்டங்களை கண்காணிக்கும் பொறுப்பை அவர்களுக்கே கொடுத்தான். அடுத்தபடியாக ஜே.வி.பி.பகுதிக்கு அவர்களை தந்திரமாக அழைத்துச் சென்று அங்கே வைத்து அவர்களைக் கைது செய்து கொலை செய்து விடுவதென்பது சங்கிலியின் திட்டம்.
வசந்தனதும் சந்திரனதும் எண்ணம் வேறு விதமாக இருந்தது. அன்றிரவே உமாமகேஸ்வரனை அங்கேயே வைத்து கொலை செய்துவிட்டு தேவைப்பட்டால் சங்கிலியையும் கூடக் கொலை செய்துவிட்டு வாகனமொன்றைக் கடத்திக் கொண்டு தப்பிச் செல்ல அவர்கள் தீர்மானித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக