21
1989 பொதுத் தேர்தல் முடிந்த போது டி.பி.எல்.எப் கட்சிக்கு யாழ் மாவட்டத்தில் விழுந்த வாக்குகளை விட நுவரெலியா மாவட்டத்தில் விழுந்த வாக்குகள் அதிகம். தனிப்பட்ட முறையில் அங்கு சந்திரசேகரனுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்தாலும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் அவரால் வெற்றிபெற முடியவில்லை. ஆனாலும் அவருக்கு விழுந்த வாக்குகள் மாற்றம் வேண்டும் என்பதற்கு விழுந்த வாக்குகளாகக் கருதப்பட்டன.
உமாமகேஸ்வரனைப் பொறுத்தவரை அவர் இந்தத் தேர்தலை தன்னை பாதுகாத்துக் கொண்டு தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த இந்தியாவைப் பழிவாங்க ஒரு தடுப்புக் கவசமாக பயன்படுத்தியிருந்தார். அதாவது தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் பிரேமதாசாவுடனான உறவைப் பலப்படுத்திக் கொண்டு மறுபுறத்தில் இரகசியமாக இந்தியப்படை இலங்கையைவிட்டு வெளியேற வேண்டும் என்ற கோசத்தை முன்வைத்து கிளர்ச்சி செய்யும் ஜே.வி.பி.க்கு பயிற்சி கொடுத்து அவர்களது போராட்டத்திற்கு உத்வேகம் அளிப்பதன் மூலம் வடக்கு கிழக்கில் புலிகளும் தெற்கில் ஜே.வி.பி.யுமாக எல்லாத் தரப்பிலிருந்தும் நெருக்குதல் கொடுத்து இந்தியப்படையை இலங்கையைவிட்டு அனுப்ப முயல வேண்டும் என்று அவர் நினைத்தார்.
மலையகத்தில் சந்திரசேகரனுக்கு இருந்த அதரவு அவருககு புதிய தென்பைத் தந்தது.
புளொட் அமைப்பை முற்றாக கலைத்துவிட்டு மலையகத்தில் புலிகள் அமைப்பைப் போல் உறுதியும் கட்டுப்பாடும் மிகுந்த இராணுவ அமைப்பு ஒன்றை உருவாக்குவதுஎன்ற தனது முன்னைய முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்க அவர் முனைந்தார்.
இதற்கென முள்ளிக்குளத்தில் மாநாடு ஒன்று கூட்டத் தீர்மானிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் புளொட்டினது தவறுகள், செயற்பாடுகள் அனைத்தும் விமர்சிக்கப்பட்டு புதிய அமைப்பு வடிவம் ஒன்று உருவாக்குவது தொடர்பாகவும் அந்த அமைப்பிற்கான உறுதியான கட்டுப்பாடுகளை வரையறை செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. புதிய அமைப்புக் கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்ட பின் அதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்கச் சம்மதிப்பவர்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களை அமைப்பை விட்டு வெளியே அனுப்பிவிடுவது என்பது உமாமகேஸ்வரனது எண்ணம்.
மாநாட்டின் அறிவிப்பு வெளி வந்து அவரது அந்த எண்ணமும் பேச்சுவாக்கில் வெளியே தெரிய வர தங்களை எப்போதும் உமாமகேஸ்வரனினதும் புளொட்டினதும் பிரதிநிதிகளாகவும், பேச்சாளர்களாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டு உலா வந்த சாதிமான்களுக்கு இது அச்சத்தைத் தந்தது.
ஏற்கனவே மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாமல் செய்ததன் மூலம் வரதராசப்பெருமாளுக்கும் மற்றவர்களுக்கும் கிடைத்த முதலமைச்சர், அமைச்சர் பதவிகள் தங்களுக்கு கிடைக்காமல் செய்ததையிட்டும் நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலிலாவது இந்தியாவுடன் சேர்ந்திருந்து போட்டியிட்டு எம்பி பதவியாவது கிடைக்க வழி செய்யாமல் போனதையிட்டும் அவர்கள் உமாமகேஸ்வரன் மீது அதிருப்தி கொண்டிருந்தார்கள்.
அவர் மாநாடு அது இது என்று வைத்து அமைப்புக் கட்டுப்பாடு ஒழுங்கு விதி என்று ஏதாவதைக் கொண்டு வந்து தாக்குதல் போராட்டம் என்று தொடங்கிவிட்டால் அது தங்களுடைய சாதிய பிரதேச நலன்களையும் தங்களுடைய இந்திய இலங்கை அரசியல் தொடர்புகளையும் போராட்டத்தை வைத்து பதவிகளையும் (எம்.பி. அமைச்சர் பதவி) சலுகைகளையும் பெறுவது என்ற தங்களது குறிக்கோளையும் பாதித்துவிடுவது மட்டுமில்லாமல் தங்களையும் சிக்கலில் மாட்டிவைத்து விடுமென்று அவர்கள் பயந்தார்கள். எனவே அவர்களில் ஒருசாரார் மாநாட்டில் பங்கெடுக்காமல் ஒதுங்கிக் கொண்வதென்றும் இன்னொரு சாரார் மாநாட்டில் பங்கெடுத்து தங்களுடைய பேச்சு சாதுரியத்தின் மூலம் அடிமட்ட உறுப்பினர்களை தம்வசப்படுத்தி உமாமகேஸ்வரனது நோக்கம் நிறைவேறாமல் தடுத்துவிடவும் முடிவு செய்தனர்.
மாநாட்டில் கலந்து கொள்ளாது ஒதுங்குவதென்று முடிவு செய்தவர்கள் உமாமகேஸ்வரன் அமைப்புக் கட்டுப்பாடு என்ற பெயரில் பேச்சுச் சுதந்திரத்தை பறிக்கப் போகிறார். தவறுகளை விமர்சிக்கும் உரிமையைப் பறிக்கப் போகிறார். தவறுகளை தட்டி கேட்டபவர்களை தட்டப் போகின்றார் என்றெல்லாம் அதற்கு இரகசியமாக வியாக்கியானமும் கொடுத்தார்கள்.
இந்தக் குழுவில் முக்கியமானவர் வாரம் தவறாது கொழும்பிலுள்ள இந்தியத் து+தரகத்திற்குச் சென்று தமிழீழ இராணுவஅரசியல் நடப்புக்களை இந்திய அதிகாரிகளுக்கு (சுயுறு) ஆலோசனை நடத்தி வந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் இன்னொருவர் உமாமகேஸ்வரனது பேச்சாளர் என்று சொல்லிக் கொண்டிருந்த இளையான் குடியார். இவரது கதை கொஞ்சம் வேடிக்கையானது.
இயக்கத்தின் கொழும்பு அலுவலக வீட்டுக்கு சொந்தக்காரப் பெண்ணுக்கு மலையகத்தின் கீழ்பகுதியில் ஒரு தோட்டம் (எஸ்டேட்) இருந்தது. அந்தப் பெண்ணுக்கு நன்கு அறிமுகமான இளையான், குடியார் அமைப்புக்காக அல்லாமல் தனிப்பட்ட தேவைக்காக எஜ்டேட்டை பராமரிக்கும் பொறுப்பை எடுத்துவிட்டார். இது உமாமகேஸ்வரனுக்குத் தெரிய வந்த போது இயக்கத்தினால் கிடைத்த அறிமுகத்தை பயன்படுத்தி சொந்த நலனுக்காக அதைச் செய்தது தவறு என்று அவர் கண்டித்துவிட்டார். இதை இளையான் குடியார் எதிர்பார்க்கவில்லை. கொழும்பு அலுவலக வீட்டை வாடகைக்கு எடுத்ததே நான்தான், எனக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த அந்தப் பெண்ணின் அறிமுகத்தைத்தான் நான் இயக்கத் தொடர்பாக மாற்றினேன் என்பது அவரது வாதம்.
மாநாட்டில் கலந்து கொண்டு உமாமகேஸ்வரனது நோக்கம் நிறைவேறாமல் தடுக்க வேண்டும் என்ற குழுவுக்கு சூத்திரதாரி வசந்தன், உமாமகேஸ்வரனைக் கொல்வதற்கு தான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைந்து வரும் நிலையில் அவர் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து நடவடிக்கைகளை இறுக்கிவிட்டால் தன்னுடைய நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்று அவன் பயந்தான். எனவே தன்னுடைய நோக்கம் நிறைவேற வேண்டுமானால் இயக்கம் தொடர்ந்து தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற சீரழிவு நிலையிலேயே இருக்க வேண்டுமென்று அவன் விரும்பினான். அதற்கு உமாமகேஸ்வரனுக்கு அரசியல் ரீதியாக ஆலோசனை வழங்கும் எவரையும் புதிதாக தெரிவு செய்யப்படப் போகிற நிர்வாக அமைப்புக்குள் வந்து விடாமல் பார்த்துக்கொண்டு தங்களுடைய நலன்களைப் பிரதிபலிக்கக்கூடியவர்களையே அதற்கு தெரிய வேண்டும் என்பது அவன் திட்டம்.
குறிப்பாக மலையகப் பொறுப்பாளரை ஓரங்கட்ட வேண்டும் என்பது அவனது பிரதான பகுதியாக இருந்தது. அவர் மலையகத்தில் உருவாக்க முனைகின்ற அமைப்பு தங்களது நலன்களுக்கு அச்சுறுத்தலாக வரும் என்பது அதற்கு ஒரு காரணமாக இருந்தாலும் உண்மையில் இயக்கத்திற்கு சம்மந்தமே இல்லாமல் இயக்கத்தின் பெயரால் தமிழகத்தில் வசந்தன் தனிப்பட்ட முறையில் நடத்திய கொள்ளைகள் (சங்கிலி அறுப்பு) தாலிக்கொடி (அறுப்பு) வாகனக் கடத்தல்கள் பற்றி உமாமகேஸ்வரன் இலங்கைக்கு வந்தபின் தமிழகத்தில் தங்கியிருந்தகதிரவன் அவருக்குத் தெரியப்படுத்திவிட்டதே பிரதான காரணமாகும்.
எனவே வசந்தன் தனிப்பட்ட முறையில் கதிரவன் உட்பட உமாமகேஸ்வரனுக்கு நெருக்கமாபன 4 பேருக்கு எதிராக இரகசிய பிரச்சாரத்தை கீழ்மட்ட உறுப்பினர்கள் மத்தியில் முடுக்கிவிட்டான். அதாவது இந்த நால்வரும் இந்திய எதிர்ப்பென்ற பெயரில் இந்தியாவுடன் சேர்ந்து அவர்கள் சொற்படி நடந்து அவர்களிடம் ஆயுதம் வாங்க விடாமல் தடுக்கிறார்கள் என்றும் நாங்கள் (முகாம் உறுப்பினர்கள்) புலிகளைப் போல் வசதிகள் எதையும் அனுபவிக்காமல் (அவர்களது கண்ணோடடடத்தில் புலிகள் நவீன ஆயுதங்கள் கொண்டு தரிவது மக்கள் மத்தியில் வீரர்களாக மதிக்கப்படுவது வசதியானது) காடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதற்கு புலிகளை எதிர்க்கக் கூடாது என்றெல்லாம் கொள்கை கோட்பாடு பேசும் இவர்கள் தான் காரணம் என்றும் நாங்கள் போராட வேண்டிய இடம் இங்கே இருக்க (வடக்கு கிழக்கு) மலையகத்தில் எதற்காக போராட வேண்டும். சந்திரசேகரன் தேர்தலில் நிற்க எங்களுடைய பணத்தை நாங்கள் ஏன் செலவு செய்ய வேண்டும் என்றெல்லாம் பிரசாசரம் செய்யப்பட்டது.
முள்ளிக்குளத்தில் வசந்தனது நடவடிக்கை இவ்வாறு இருக்க கொழும்பில் உமாமகேஸ்வரன் மகாநாடு தொட்குவதற்கு முன்பே அதாவது தான் மாநாட்டிற்கு முள்ளிக்குளத்திற்கு வருவதற்கு முன்பே தன்னுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் வசந்தனைக் கொன்றுவிடத் தீர்மானித்தார். அவனது கொலையை புலிகள் செய்தது போல் மற்றவர்கள் நம்பும்படி செய்ய வேண்டும் என்பது அவரது திட்டம். அதற்காக மலையகத்திலிருந்த சங்கிலியை உடனடியாக கொழும்பு வரும்படி அறிவித்திருந்தார்
1989 பொதுத் தேர்தல் முடிந்த போது டி.பி.எல்.எப் கட்சிக்கு யாழ் மாவட்டத்தில் விழுந்த வாக்குகளை விட நுவரெலியா மாவட்டத்தில் விழுந்த வாக்குகள் அதிகம். தனிப்பட்ட முறையில் அங்கு சந்திரசேகரனுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்தாலும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் அவரால் வெற்றிபெற முடியவில்லை. ஆனாலும் அவருக்கு விழுந்த வாக்குகள் மாற்றம் வேண்டும் என்பதற்கு விழுந்த வாக்குகளாகக் கருதப்பட்டன.
உமாமகேஸ்வரனைப் பொறுத்தவரை அவர் இந்தத் தேர்தலை தன்னை பாதுகாத்துக் கொண்டு தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த இந்தியாவைப் பழிவாங்க ஒரு தடுப்புக் கவசமாக பயன்படுத்தியிருந்தார். அதாவது தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் பிரேமதாசாவுடனான உறவைப் பலப்படுத்திக் கொண்டு மறுபுறத்தில் இரகசியமாக இந்தியப்படை இலங்கையைவிட்டு வெளியேற வேண்டும் என்ற கோசத்தை முன்வைத்து கிளர்ச்சி செய்யும் ஜே.வி.பி.க்கு பயிற்சி கொடுத்து அவர்களது போராட்டத்திற்கு உத்வேகம் அளிப்பதன் மூலம் வடக்கு கிழக்கில் புலிகளும் தெற்கில் ஜே.வி.பி.யுமாக எல்லாத் தரப்பிலிருந்தும் நெருக்குதல் கொடுத்து இந்தியப்படையை இலங்கையைவிட்டு அனுப்ப முயல வேண்டும் என்று அவர் நினைத்தார்.
மலையகத்தில் சந்திரசேகரனுக்கு இருந்த அதரவு அவருககு புதிய தென்பைத் தந்தது.
புளொட் அமைப்பை முற்றாக கலைத்துவிட்டு மலையகத்தில் புலிகள் அமைப்பைப் போல் உறுதியும் கட்டுப்பாடும் மிகுந்த இராணுவ அமைப்பு ஒன்றை உருவாக்குவதுஎன்ற தனது முன்னைய முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்க அவர் முனைந்தார்.
இதற்கென முள்ளிக்குளத்தில் மாநாடு ஒன்று கூட்டத் தீர்மானிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் புளொட்டினது தவறுகள், செயற்பாடுகள் அனைத்தும் விமர்சிக்கப்பட்டு புதிய அமைப்பு வடிவம் ஒன்று உருவாக்குவது தொடர்பாகவும் அந்த அமைப்பிற்கான உறுதியான கட்டுப்பாடுகளை வரையறை செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. புதிய அமைப்புக் கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்ட பின் அதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்கச் சம்மதிப்பவர்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களை அமைப்பை விட்டு வெளியே அனுப்பிவிடுவது என்பது உமாமகேஸ்வரனது எண்ணம்.
மாநாட்டின் அறிவிப்பு வெளி வந்து அவரது அந்த எண்ணமும் பேச்சுவாக்கில் வெளியே தெரிய வர தங்களை எப்போதும் உமாமகேஸ்வரனினதும் புளொட்டினதும் பிரதிநிதிகளாகவும், பேச்சாளர்களாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டு உலா வந்த சாதிமான்களுக்கு இது அச்சத்தைத் தந்தது.
ஏற்கனவே மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாமல் செய்ததன் மூலம் வரதராசப்பெருமாளுக்கும் மற்றவர்களுக்கும் கிடைத்த முதலமைச்சர், அமைச்சர் பதவிகள் தங்களுக்கு கிடைக்காமல் செய்ததையிட்டும் நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலிலாவது இந்தியாவுடன் சேர்ந்திருந்து போட்டியிட்டு எம்பி பதவியாவது கிடைக்க வழி செய்யாமல் போனதையிட்டும் அவர்கள் உமாமகேஸ்வரன் மீது அதிருப்தி கொண்டிருந்தார்கள்.
அவர் மாநாடு அது இது என்று வைத்து அமைப்புக் கட்டுப்பாடு ஒழுங்கு விதி என்று ஏதாவதைக் கொண்டு வந்து தாக்குதல் போராட்டம் என்று தொடங்கிவிட்டால் அது தங்களுடைய சாதிய பிரதேச நலன்களையும் தங்களுடைய இந்திய இலங்கை அரசியல் தொடர்புகளையும் போராட்டத்தை வைத்து பதவிகளையும் (எம்.பி. அமைச்சர் பதவி) சலுகைகளையும் பெறுவது என்ற தங்களது குறிக்கோளையும் பாதித்துவிடுவது மட்டுமில்லாமல் தங்களையும் சிக்கலில் மாட்டிவைத்து விடுமென்று அவர்கள் பயந்தார்கள். எனவே அவர்களில் ஒருசாரார் மாநாட்டில் பங்கெடுக்காமல் ஒதுங்கிக் கொண்வதென்றும் இன்னொரு சாரார் மாநாட்டில் பங்கெடுத்து தங்களுடைய பேச்சு சாதுரியத்தின் மூலம் அடிமட்ட உறுப்பினர்களை தம்வசப்படுத்தி உமாமகேஸ்வரனது நோக்கம் நிறைவேறாமல் தடுத்துவிடவும் முடிவு செய்தனர்.
மாநாட்டில் கலந்து கொள்ளாது ஒதுங்குவதென்று முடிவு செய்தவர்கள் உமாமகேஸ்வரன் அமைப்புக் கட்டுப்பாடு என்ற பெயரில் பேச்சுச் சுதந்திரத்தை பறிக்கப் போகிறார். தவறுகளை விமர்சிக்கும் உரிமையைப் பறிக்கப் போகிறார். தவறுகளை தட்டி கேட்டபவர்களை தட்டப் போகின்றார் என்றெல்லாம் அதற்கு இரகசியமாக வியாக்கியானமும் கொடுத்தார்கள்.
இந்தக் குழுவில் முக்கியமானவர் வாரம் தவறாது கொழும்பிலுள்ள இந்தியத் து+தரகத்திற்குச் சென்று தமிழீழ இராணுவஅரசியல் நடப்புக்களை இந்திய அதிகாரிகளுக்கு (சுயுறு) ஆலோசனை நடத்தி வந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் இன்னொருவர் உமாமகேஸ்வரனது பேச்சாளர் என்று சொல்லிக் கொண்டிருந்த இளையான் குடியார். இவரது கதை கொஞ்சம் வேடிக்கையானது.
இயக்கத்தின் கொழும்பு அலுவலக வீட்டுக்கு சொந்தக்காரப் பெண்ணுக்கு மலையகத்தின் கீழ்பகுதியில் ஒரு தோட்டம் (எஸ்டேட்) இருந்தது. அந்தப் பெண்ணுக்கு நன்கு அறிமுகமான இளையான், குடியார் அமைப்புக்காக அல்லாமல் தனிப்பட்ட தேவைக்காக எஜ்டேட்டை பராமரிக்கும் பொறுப்பை எடுத்துவிட்டார். இது உமாமகேஸ்வரனுக்குத் தெரிய வந்த போது இயக்கத்தினால் கிடைத்த அறிமுகத்தை பயன்படுத்தி சொந்த நலனுக்காக அதைச் செய்தது தவறு என்று அவர் கண்டித்துவிட்டார். இதை இளையான் குடியார் எதிர்பார்க்கவில்லை. கொழும்பு அலுவலக வீட்டை வாடகைக்கு எடுத்ததே நான்தான், எனக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த அந்தப் பெண்ணின் அறிமுகத்தைத்தான் நான் இயக்கத் தொடர்பாக மாற்றினேன் என்பது அவரது வாதம்.
மாநாட்டில் கலந்து கொண்டு உமாமகேஸ்வரனது நோக்கம் நிறைவேறாமல் தடுக்க வேண்டும் என்ற குழுவுக்கு சூத்திரதாரி வசந்தன், உமாமகேஸ்வரனைக் கொல்வதற்கு தான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைந்து வரும் நிலையில் அவர் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து நடவடிக்கைகளை இறுக்கிவிட்டால் தன்னுடைய நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்று அவன் பயந்தான். எனவே தன்னுடைய நோக்கம் நிறைவேற வேண்டுமானால் இயக்கம் தொடர்ந்து தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற சீரழிவு நிலையிலேயே இருக்க வேண்டுமென்று அவன் விரும்பினான். அதற்கு உமாமகேஸ்வரனுக்கு அரசியல் ரீதியாக ஆலோசனை வழங்கும் எவரையும் புதிதாக தெரிவு செய்யப்படப் போகிற நிர்வாக அமைப்புக்குள் வந்து விடாமல் பார்த்துக்கொண்டு தங்களுடைய நலன்களைப் பிரதிபலிக்கக்கூடியவர்களையே அதற்கு தெரிய வேண்டும் என்பது அவன் திட்டம்.
குறிப்பாக மலையகப் பொறுப்பாளரை ஓரங்கட்ட வேண்டும் என்பது அவனது பிரதான பகுதியாக இருந்தது. அவர் மலையகத்தில் உருவாக்க முனைகின்ற அமைப்பு தங்களது நலன்களுக்கு அச்சுறுத்தலாக வரும் என்பது அதற்கு ஒரு காரணமாக இருந்தாலும் உண்மையில் இயக்கத்திற்கு சம்மந்தமே இல்லாமல் இயக்கத்தின் பெயரால் தமிழகத்தில் வசந்தன் தனிப்பட்ட முறையில் நடத்திய கொள்ளைகள் (சங்கிலி அறுப்பு) தாலிக்கொடி (அறுப்பு) வாகனக் கடத்தல்கள் பற்றி உமாமகேஸ்வரன் இலங்கைக்கு வந்தபின் தமிழகத்தில் தங்கியிருந்தகதிரவன் அவருக்குத் தெரியப்படுத்திவிட்டதே பிரதான காரணமாகும்.
எனவே வசந்தன் தனிப்பட்ட முறையில் கதிரவன் உட்பட உமாமகேஸ்வரனுக்கு நெருக்கமாபன 4 பேருக்கு எதிராக இரகசிய பிரச்சாரத்தை கீழ்மட்ட உறுப்பினர்கள் மத்தியில் முடுக்கிவிட்டான். அதாவது இந்த நால்வரும் இந்திய எதிர்ப்பென்ற பெயரில் இந்தியாவுடன் சேர்ந்து அவர்கள் சொற்படி நடந்து அவர்களிடம் ஆயுதம் வாங்க விடாமல் தடுக்கிறார்கள் என்றும் நாங்கள் (முகாம் உறுப்பினர்கள்) புலிகளைப் போல் வசதிகள் எதையும் அனுபவிக்காமல் (அவர்களது கண்ணோடடடத்தில் புலிகள் நவீன ஆயுதங்கள் கொண்டு தரிவது மக்கள் மத்தியில் வீரர்களாக மதிக்கப்படுவது வசதியானது) காடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதற்கு புலிகளை எதிர்க்கக் கூடாது என்றெல்லாம் கொள்கை கோட்பாடு பேசும் இவர்கள் தான் காரணம் என்றும் நாங்கள் போராட வேண்டிய இடம் இங்கே இருக்க (வடக்கு கிழக்கு) மலையகத்தில் எதற்காக போராட வேண்டும். சந்திரசேகரன் தேர்தலில் நிற்க எங்களுடைய பணத்தை நாங்கள் ஏன் செலவு செய்ய வேண்டும் என்றெல்லாம் பிரசாசரம் செய்யப்பட்டது.
முள்ளிக்குளத்தில் வசந்தனது நடவடிக்கை இவ்வாறு இருக்க கொழும்பில் உமாமகேஸ்வரன் மகாநாடு தொட்குவதற்கு முன்பே அதாவது தான் மாநாட்டிற்கு முள்ளிக்குளத்திற்கு வருவதற்கு முன்பே தன்னுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் வசந்தனைக் கொன்றுவிடத் தீர்மானித்தார். அவனது கொலையை புலிகள் செய்தது போல் மற்றவர்கள் நம்பும்படி செய்ய வேண்டும் என்பது அவரது திட்டம். அதற்காக மலையகத்திலிருந்த சங்கிலியை உடனடியாக கொழும்பு வரும்படி அறிவித்திருந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக