17
புளொட்டின் ஜாதியக் கனவான்களுக்கிடையிலான பலப்பரீட்சையில் உமாமகேஸ்வரன் அமைப்பின் தலைவர் என்ற வகையில் உறுதியான போக்கை கடைபிடித்து அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பதில், அவர் ஒரு பார்வையாளர் என்ற வகையிலேயே இந்த விடயத்தில் நடந்து கொண்டார்.
சிகரெட் பிடித்தது குற்றம் என்று சொல்லி முகாமிலிருந்த சாதாரண உறுப்பினர் ஒருவனுக்குத் தண்டனை கொடுத்த பொறுப்பாளர் ஒருவர் தான் சிகரட் பிடித்துக் கொண்டே அந்தத் தண்டனை வழங்கியதையும், ஒருபுறம் முகாமுக்குச் சென்று தோழர்களே பிரச்சினையை தட்டிக் கேளுங்கள், நாங்கள் அடக்குமுறைக்கு பணிந்துவிடக்கூடாது என்றெல்லாம் வீரமுழக்கம் செய்துவிட்டு தன்னிடத்தில் (உமா) வந்து நல்;ல பிள்ளைகளாக வேசம் போட்டவர்களையும் அவர் ஒருபோதும் கணக்கிலெடுக்கவே இல்லை.
6 மாதம் பயிற்சி, அது முடிந்தபின் கையில் ஆளுக்கொரு ஆயுதம் என்று நம்பிக் கொண்டு பின்தளம் சென்ற இளைஞர்கள் பயிற்சியுமின்றி, சாப்பாடுமின்றி, நல்ல உடுப்புக்கூட இன்றி பஞ்சப் பரதேசிகள் போல அனுபவித்த துன்பத்தை வார்த்தையில் சொல்வது கஸ்டம். பசிக் கொடுமையில் நாய்களையும், இலைகுழைகளையும் அவர்கள் சாப்பிட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. வாழ வேண்டிய வயதில் வாழ்க்கைக்கான தொழில்களைக் கற்றுக் கொள்ள வேண்டிய வயதில் அவையெல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு இனவிடுதலைக்கு பங்கெடுக்க வந்த அவர்களது விடுதலை உணர்வு ஓரத்து நாடு புதுக்கோட்டை, தேனி சவுக்குத் தோப்புக்குள்ளும், மலைகளுக்குள்ளும் முடக்கப்பட்டதும், மழுங்கடிக்கப்பட்டதும் தற்செயலாக நடந்த- தலைமைத்துவத்தின் இயலாமையினால் நடந்த விடயமாக எனக்குத் தோன்றவில்லை.
ஈழப்போராட்டத்தின் மகத்தான இளைஞர் சக்தி போராட்டத்திற்கு கிடைக்கக் கூடிய பொருளாதார உதவி, இது இரண்டையும் திட்டமிட்டு முடக்க வேண்டும், திசை திருப்ப வேண்டும், சீரழிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தின் அடிப்படையில் தெரிந்துகொண்டே செய்த ஒரு பெரிய துரோகத்தனம் என்று தான் இதைச் சொல்ல வேண்டும். இதற்கு உமாமகேஸ்வரன் மட்டும் தான் காரணம் என்று யாராவது சொன்னால் அது சுத்தப் பம்மாத்து.
உமாமகேஸ்வரனின் பெயரைச் சொல்லி இந்தியப் பயிற்சியின் பெயரைச் சொல்லி புளொட்டுக்கு ஆள் சேர்த்த அனைவரும் இதற்குப் பொறுப்பு. புளொட்டினது அமைப்பாளர்கள் அனைவருமே ஜாதியக் கனவான்கள் என்பதும், போராட்டம் கூர்மையடைந்தால் அல்லது போராட்டத்தை கூர்மையடைச் செய்யக்கூடிய புலிகள் போன்ற அமைப்புக்கு இளைஞர்கள் சென்றால், அது யாழ் குடாநாட்டின் சாதிய அமைப்பையும், சாதிய ஒடுக்குமுறையையும் தகர்த்து தங்களது சாதிய தர்பார் ஒழிந்து போகச் செய்துவிடும் என்று இவர்களுக்குத் தெரியும். மக்கள் மீது தாக்குதல் நடத்தி வந்த இராணுவத்தை எதிர்த்து புலிகள் நடத்திய கெரில்லா தாக்குதலை இவர்கள் நையாண்டி செய்து நடைமுறைக்குச் சாத்தியமில்லாத மக்கள் போராட்டம் பற்றிப் பேசியதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.
புளொட்டிலிருந்த பலசாலிகளினதும், மூளைசாலிகளினதும் மோதலினாலும், உமாமகேஸ்வரனது தவறான தலைமைத்துவத்தாலும் புளொட் உடைந்து சிதைந்து போனது என்பதைவிட இந்த அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவாக இருந்த சமூக நோக்கம் ஒன்றுக்காகவே இது நிகழ்ந்ததாகச் சொல்லலாம்.
அதாவது இளைஞர் சக்தியை தேக்கிவைத்து அவர்களை மோசமான அதிருப்திக்கு உள்ளாக்கி தேவைப்பட்ட போது புதைகுழிக்கும் அனுப்பி அவர்களது உணர்வுகளைச் சிதறடித்து இனி அவர்கள் போராட்டத்தின் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவிடாமல் செய்துவிட்ட நிகழ்வு, தனி ஒர் தரப்பினருக்கு மட்டும் பொதுவானதல்ல. ஒரு அமைப்பு தவறென்றால் அல்லது அமைப்பின் தலைமை தவறென்றால அதை எதிர்த்து நடக்கின்ற உட்கட்சிப் போராட்டம் அந்த அமைப்பை திருத்துவதாக, தலைமையை திருத்துவதாக அல்லது மாற்றுவதாக இருக்க வேண்டும். இவை ஒன்றுமே சரியில்லாது போனால், ஒரு சரியான அமைப்பை நோக்கி பிழையான அமைப்பிலுள்ள உண்மையான உணர்வுள்ள போராளிகளை வரவழைப்பதுதான் ஒர் சரியான உட்கட்சிப் போராட்டத்தின் கடமை. அதைவிடுத்து போராளிகளை போராட்டத்தை விட்டு ஒதுங்கிவிடும்படி சிதறடித்ததும் உள்ளதைவிட இன்னொரு மோசமான அமைப்பில் (நுNனுடுகு) போய் சேர்ந்து, இந்திய நலனுக்காக உழைக்கும்படி செய்ததும் தான் புளொட்டின் உட்கட்சிப் போராட்டக் கனவான்கள் செய்த வேலை.
உடைந்து, சிதைந்தது போக புளொட்டில் எஞ்சியிருந்த பிரிவு அமைப்பைவிட்டு வெளியே போனால் ஒன்றுமே செய்யமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருந்த பின் தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்களையும், மிகவும் ஏழைப்பட்ட வெளிநாட்டுக்குச் செல்ல வசதியில்லாத குடாநாட்டவர்களையும், உடல் பலத்தின் மூலம் அதிகாரம் செய்து பழக்கப்பட்ட சாதியப் பயில்வான்களையும் மட்டும் கொண்டதாக இருந்தது. இது ஒரு அமைப்பு என்ற நிலையில் இருந்தது என்பதைவிட ஒரு கொள்ளைக் கோஸ்டி என்ற நிலையில் தான் இருந்தது. இயக்கத்துக்காக தாலி அறுப்பது, சங்கிலி பறிப்பது, வீடு புகுந்து கொள்ளையடிப்பது, ஆட்களை கடத்தி வைத்து பணம் பறிப்பது, மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வான்களை கடத்தி வந்து நிறத்தையும் இலக்கத்தகடுகளையும் மாற்றி விற்பது இவைதான் 1985ற்குப் பின் எஞ்சியிருந்த புளொட்டின் போராட்ட நடவடிக்கைகளாக இருந்தன. தமிழகப் பொலிசாரின் கணக்கின்படி 1985 டிசம்பரில் இருந்து 1987 மார்ச் மாதம் வரை 32 தாலி, சங்கிலி அறுப்க்கள், 16 வீடு புகுந்து கொள்ளைகள், 4 ஆள் கடத்தல்கள் 63 வாகனக்கடத்தல்கள் புளொட்டினால் மட்டும் தமிழகத்தில் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் இதில் ஒரு 7 அல்ல 8 சம்பவங்களைத் தவிர மிகுதி உமாமகேஸ்வரனுக்குத் தெரியாமல் நடந்தவை. ஆனால் இயக்கத்தின் பெயரால் இயக்கத்துக்காக நடந்தவை.
1988 கேரளாவில் தங்கியிருந்த கதிரவனை இலங்கைக்குத் திரும்பி வரும்படி அழைத்த உமாமகேஸ்வரன் அவரை வவுனியாவிற்குச் சென்று அங்குள்ள கிராமங்களில் அமைப்பை உருவாக்கும்படி கேட்டுக் கொண்டார். சீரழிந்து போன அமைப்புக்காக பொய் சொல்லி ஏமாற்றி மக்களைத்அணி திரட்டவும் அப்பாவி இளைஞர்களை விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் குழுக்களாக பிரிந்திருந்து கொண்டு தங்களது வீரதீர பராக்கிரமங்களுக்காக கொள்ளையும், கொலையும், ஆள் கடத்தலும் செய்து கொண்டிருக்கும் சாதியப் பயில்வான்களின் கூலிகளாக்க கதிரவன் மறுத்துவிட்டார்.
சீரழிந்து போய்க்கிடக்கும் புளொட் அமைப்புக்கு புத்துயிர் அளிப்பதென்பது கருகிப் போன பயிருக்கு தண்ணீரும் உரமும் போடுவதைப் போன்றது. அங்கே பயிருக்காக போடப்படும் உரத்தையும், தண்ணீரையும் பயிர்களைப் போல தோற்றமளிக்கும் களைகள் தான் உறிஞ்சிக் கொண்டு செழித்து வளர்ந்து பயிர் நிலத்தையெ பாழாக்கிவிடும். அதைப்போலவெ புளொட்டுக்கு புத்துயிர் அழிக்கும் போது அதிலுள்ள பிரதேச சாதி குழு நலன்கள் மிகுந்த சீரழிவாதிகள் தான் பயன்பெற்று இனத்தையே சீரழித்துவிடுவார்கள். பட்டம் பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும், பணத்திற்காகவும் இவர்கள் அப்பாவி இளைஞர்களை விலை பேசியே விற்றுவிடுவார்கள். என்று கதிரவன் உமாமகேஸ்வரனுக்கு எடுத்துச் சொன்னார்.
உமாமகேஸ்வரன் மற்ற விடயங்களில் எதிர்மாறாக இருந்தாலும் அரசியல் விடயங்களில் கதிரவனுடைய ஆலோசனையைக் கேட்பதுண்டு. புளொட்டினால் ஒரு போதும் தமிழீழ விடுதலையை வென்றெடுக்க முடியாது. தமிழீழம் என்று சொல்லிக் கொண்டு பவனி வரும் அதன் பிரதேச மாவட்டத் தலைவர்கள் எல்லோருமே பிழைப்பு வாதிகள் தான். குறைந்தபட்சம் இனவிடுதலையை வென்றெடுக்காவிட்டாலும் போராட்டத்திற்கு துரோகம் செய்யாமலாவது இருக்க வேண்டும். உண்மையில் நாங்கள் என்ன செய்கின்றோம். புலிகளை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் அரசாங்கத்துக்குத்தான் நாம் உதவி செய்து கொண்டிருக்கின்றோம் புலிகள் போராடுகின்றபடியால் தான் அரசாங்கம் எங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்கின்றது. புலிகள் அழ்க்கப்பட்டால் நாங்களும் அழிக்கப்பட்டுவிடுவோம் மனச்சாட்சியின்படி நாங்கள் சிந்தித்துப்பார்த்தால் எங்களுடைய ஆட்களது புலி எதிர்ப்பு என்பது அவர்களது சாதிய பிரதேச நலன்கள் புலிகளின் போராட்டத்தால் பாதிக்கப்படுவதால் ஏற்பட்ட வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது என்றும்,
புலிகள் வடக்கு கிழக்கில் போராடட்டும் அதில் நாங்கள் தலையிட வேண்டாம். எங்களுக்கு உண்மையில் இனவிடுதலையில் அக்கறை இருக்குமானால் நாங்கள் மலையகத்தில் சென்று போராடுவோம். சிறிலங்கா அரசாங்கத்தில் பொருளாதார அத்திவாரமாக இருப்பது மலையகம் தான். வடக்கு கிழக்கில் புலிகள் போராட மலையகத்தை நாம் ஆட்டம் காண வைத்தால் நிச்சயமாக சிறிலங்கா அரசாங்கத்தால் சமாளிக்க முடியாது. இது தமிழீழ போராட்டத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் உமாமகேஸ்வரனுக்கு நிலைமையை விளக்கினார் கதிரவன்.
உமாமகேஸ்வரனுக்கு அது சரியென்றுபட்டு அதுக்கு ஒத்துக்கொண்ட போது கதிரவன் சில நிபந்தனைகளை விதித்தார். முதலாவது மலையக மக்களுக்கு நாங்கள் தலைமை தாங்க முடியாது அங்கேயே அவர்களிடமிருந்தே ஒரு தலைமையை உருவாக்க வேண்டும். புளொட் என்ற அமைப்பிற்கும் மலையகத்திலே உருவாக்கப்போகின்ற அமைப்புக்கும் எந்தவித சம்பந்தமும் தொடர்பும் கூட இருக்கக்கூடாது. அந்த அமைப்பை கட்டுப்படுத்தும் அதிகாரம் புளொட்டுக்குக் கிடையாது. இந்த நிபந்தனைகளை உமாமகேஸ்வரன் ஏற்றுக் கொண்ட பின்பே கதிரவன் மலையகம் சென்றார்.
இந்தப் பின்னணியிலேயே மலையகத்தில் ;சந்திரசேகரன் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்ற நிபந்தனை முன்வைத்து டி.பி.எல்.எப்.இல் போட்டியிட முன்வந்த போது உமாமகேஸ்வரன் தடையேதும் சொல்லாமல் அதற்கும் சம்மதம் கொடுத்தார்.
ஆனால் யாழ்ப்பாண சாதிமான்கள் சும்மா இருப்பார்களா? நாங்கள் போராட வேண்டிய இடத்தை விட்டுவிட்டு தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத நபர்களுக்காக எங்களுடைய சக்தியை செலவழிக்கிறோம் என்று சீறி எழுந்தனர். அவர்களில் முதன்மையானவர் பாலபுத்தர், மலையக மக்களைப் பற்றியோ தமிழீழத்தில் அரசினதும் சாதிமான்களினதும் அடக்கு முறைகளால் மக்கள் அனுபவித்த துன்பத்தை எழுத்தில் கூட படித்திராத இந்த லண்டன் கனவான் இந்த எதிர்ப்புக்கு தலைமை தாங்கியது தற்செயலானதல்ல. புளொட்டின் சாதிய பிரதேச வெறிகொண்ட பிரிவினரின் திட்டமிட்ட நடவடிக்கைகள்தான் அது
புளொட்டின் ஜாதியக் கனவான்களுக்கிடையிலான பலப்பரீட்சையில் உமாமகேஸ்வரன் அமைப்பின் தலைவர் என்ற வகையில் உறுதியான போக்கை கடைபிடித்து அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பதில், அவர் ஒரு பார்வையாளர் என்ற வகையிலேயே இந்த விடயத்தில் நடந்து கொண்டார்.
சிகரெட் பிடித்தது குற்றம் என்று சொல்லி முகாமிலிருந்த சாதாரண உறுப்பினர் ஒருவனுக்குத் தண்டனை கொடுத்த பொறுப்பாளர் ஒருவர் தான் சிகரட் பிடித்துக் கொண்டே அந்தத் தண்டனை வழங்கியதையும், ஒருபுறம் முகாமுக்குச் சென்று தோழர்களே பிரச்சினையை தட்டிக் கேளுங்கள், நாங்கள் அடக்குமுறைக்கு பணிந்துவிடக்கூடாது என்றெல்லாம் வீரமுழக்கம் செய்துவிட்டு தன்னிடத்தில் (உமா) வந்து நல்;ல பிள்ளைகளாக வேசம் போட்டவர்களையும் அவர் ஒருபோதும் கணக்கிலெடுக்கவே இல்லை.
6 மாதம் பயிற்சி, அது முடிந்தபின் கையில் ஆளுக்கொரு ஆயுதம் என்று நம்பிக் கொண்டு பின்தளம் சென்ற இளைஞர்கள் பயிற்சியுமின்றி, சாப்பாடுமின்றி, நல்ல உடுப்புக்கூட இன்றி பஞ்சப் பரதேசிகள் போல அனுபவித்த துன்பத்தை வார்த்தையில் சொல்வது கஸ்டம். பசிக் கொடுமையில் நாய்களையும், இலைகுழைகளையும் அவர்கள் சாப்பிட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. வாழ வேண்டிய வயதில் வாழ்க்கைக்கான தொழில்களைக் கற்றுக் கொள்ள வேண்டிய வயதில் அவையெல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு இனவிடுதலைக்கு பங்கெடுக்க வந்த அவர்களது விடுதலை உணர்வு ஓரத்து நாடு புதுக்கோட்டை, தேனி சவுக்குத் தோப்புக்குள்ளும், மலைகளுக்குள்ளும் முடக்கப்பட்டதும், மழுங்கடிக்கப்பட்டதும் தற்செயலாக நடந்த- தலைமைத்துவத்தின் இயலாமையினால் நடந்த விடயமாக எனக்குத் தோன்றவில்லை.
ஈழப்போராட்டத்தின் மகத்தான இளைஞர் சக்தி போராட்டத்திற்கு கிடைக்கக் கூடிய பொருளாதார உதவி, இது இரண்டையும் திட்டமிட்டு முடக்க வேண்டும், திசை திருப்ப வேண்டும், சீரழிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தின் அடிப்படையில் தெரிந்துகொண்டே செய்த ஒரு பெரிய துரோகத்தனம் என்று தான் இதைச் சொல்ல வேண்டும். இதற்கு உமாமகேஸ்வரன் மட்டும் தான் காரணம் என்று யாராவது சொன்னால் அது சுத்தப் பம்மாத்து.
உமாமகேஸ்வரனின் பெயரைச் சொல்லி இந்தியப் பயிற்சியின் பெயரைச் சொல்லி புளொட்டுக்கு ஆள் சேர்த்த அனைவரும் இதற்குப் பொறுப்பு. புளொட்டினது அமைப்பாளர்கள் அனைவருமே ஜாதியக் கனவான்கள் என்பதும், போராட்டம் கூர்மையடைந்தால் அல்லது போராட்டத்தை கூர்மையடைச் செய்யக்கூடிய புலிகள் போன்ற அமைப்புக்கு இளைஞர்கள் சென்றால், அது யாழ் குடாநாட்டின் சாதிய அமைப்பையும், சாதிய ஒடுக்குமுறையையும் தகர்த்து தங்களது சாதிய தர்பார் ஒழிந்து போகச் செய்துவிடும் என்று இவர்களுக்குத் தெரியும். மக்கள் மீது தாக்குதல் நடத்தி வந்த இராணுவத்தை எதிர்த்து புலிகள் நடத்திய கெரில்லா தாக்குதலை இவர்கள் நையாண்டி செய்து நடைமுறைக்குச் சாத்தியமில்லாத மக்கள் போராட்டம் பற்றிப் பேசியதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.
புளொட்டிலிருந்த பலசாலிகளினதும், மூளைசாலிகளினதும் மோதலினாலும், உமாமகேஸ்வரனது தவறான தலைமைத்துவத்தாலும் புளொட் உடைந்து சிதைந்து போனது என்பதைவிட இந்த அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவாக இருந்த சமூக நோக்கம் ஒன்றுக்காகவே இது நிகழ்ந்ததாகச் சொல்லலாம்.
அதாவது இளைஞர் சக்தியை தேக்கிவைத்து அவர்களை மோசமான அதிருப்திக்கு உள்ளாக்கி தேவைப்பட்ட போது புதைகுழிக்கும் அனுப்பி அவர்களது உணர்வுகளைச் சிதறடித்து இனி அவர்கள் போராட்டத்தின் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவிடாமல் செய்துவிட்ட நிகழ்வு, தனி ஒர் தரப்பினருக்கு மட்டும் பொதுவானதல்ல. ஒரு அமைப்பு தவறென்றால் அல்லது அமைப்பின் தலைமை தவறென்றால அதை எதிர்த்து நடக்கின்ற உட்கட்சிப் போராட்டம் அந்த அமைப்பை திருத்துவதாக, தலைமையை திருத்துவதாக அல்லது மாற்றுவதாக இருக்க வேண்டும். இவை ஒன்றுமே சரியில்லாது போனால், ஒரு சரியான அமைப்பை நோக்கி பிழையான அமைப்பிலுள்ள உண்மையான உணர்வுள்ள போராளிகளை வரவழைப்பதுதான் ஒர் சரியான உட்கட்சிப் போராட்டத்தின் கடமை. அதைவிடுத்து போராளிகளை போராட்டத்தை விட்டு ஒதுங்கிவிடும்படி சிதறடித்ததும் உள்ளதைவிட இன்னொரு மோசமான அமைப்பில் (நுNனுடுகு) போய் சேர்ந்து, இந்திய நலனுக்காக உழைக்கும்படி செய்ததும் தான் புளொட்டின் உட்கட்சிப் போராட்டக் கனவான்கள் செய்த வேலை.
உடைந்து, சிதைந்தது போக புளொட்டில் எஞ்சியிருந்த பிரிவு அமைப்பைவிட்டு வெளியே போனால் ஒன்றுமே செய்யமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருந்த பின் தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்களையும், மிகவும் ஏழைப்பட்ட வெளிநாட்டுக்குச் செல்ல வசதியில்லாத குடாநாட்டவர்களையும், உடல் பலத்தின் மூலம் அதிகாரம் செய்து பழக்கப்பட்ட சாதியப் பயில்வான்களையும் மட்டும் கொண்டதாக இருந்தது. இது ஒரு அமைப்பு என்ற நிலையில் இருந்தது என்பதைவிட ஒரு கொள்ளைக் கோஸ்டி என்ற நிலையில் தான் இருந்தது. இயக்கத்துக்காக தாலி அறுப்பது, சங்கிலி பறிப்பது, வீடு புகுந்து கொள்ளையடிப்பது, ஆட்களை கடத்தி வைத்து பணம் பறிப்பது, மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வான்களை கடத்தி வந்து நிறத்தையும் இலக்கத்தகடுகளையும் மாற்றி விற்பது இவைதான் 1985ற்குப் பின் எஞ்சியிருந்த புளொட்டின் போராட்ட நடவடிக்கைகளாக இருந்தன. தமிழகப் பொலிசாரின் கணக்கின்படி 1985 டிசம்பரில் இருந்து 1987 மார்ச் மாதம் வரை 32 தாலி, சங்கிலி அறுப்க்கள், 16 வீடு புகுந்து கொள்ளைகள், 4 ஆள் கடத்தல்கள் 63 வாகனக்கடத்தல்கள் புளொட்டினால் மட்டும் தமிழகத்தில் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் இதில் ஒரு 7 அல்ல 8 சம்பவங்களைத் தவிர மிகுதி உமாமகேஸ்வரனுக்குத் தெரியாமல் நடந்தவை. ஆனால் இயக்கத்தின் பெயரால் இயக்கத்துக்காக நடந்தவை.
1988 கேரளாவில் தங்கியிருந்த கதிரவனை இலங்கைக்குத் திரும்பி வரும்படி அழைத்த உமாமகேஸ்வரன் அவரை வவுனியாவிற்குச் சென்று அங்குள்ள கிராமங்களில் அமைப்பை உருவாக்கும்படி கேட்டுக் கொண்டார். சீரழிந்து போன அமைப்புக்காக பொய் சொல்லி ஏமாற்றி மக்களைத்அணி திரட்டவும் அப்பாவி இளைஞர்களை விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் குழுக்களாக பிரிந்திருந்து கொண்டு தங்களது வீரதீர பராக்கிரமங்களுக்காக கொள்ளையும், கொலையும், ஆள் கடத்தலும் செய்து கொண்டிருக்கும் சாதியப் பயில்வான்களின் கூலிகளாக்க கதிரவன் மறுத்துவிட்டார்.
சீரழிந்து போய்க்கிடக்கும் புளொட் அமைப்புக்கு புத்துயிர் அளிப்பதென்பது கருகிப் போன பயிருக்கு தண்ணீரும் உரமும் போடுவதைப் போன்றது. அங்கே பயிருக்காக போடப்படும் உரத்தையும், தண்ணீரையும் பயிர்களைப் போல தோற்றமளிக்கும் களைகள் தான் உறிஞ்சிக் கொண்டு செழித்து வளர்ந்து பயிர் நிலத்தையெ பாழாக்கிவிடும். அதைப்போலவெ புளொட்டுக்கு புத்துயிர் அழிக்கும் போது அதிலுள்ள பிரதேச சாதி குழு நலன்கள் மிகுந்த சீரழிவாதிகள் தான் பயன்பெற்று இனத்தையே சீரழித்துவிடுவார்கள். பட்டம் பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும், பணத்திற்காகவும் இவர்கள் அப்பாவி இளைஞர்களை விலை பேசியே விற்றுவிடுவார்கள். என்று கதிரவன் உமாமகேஸ்வரனுக்கு எடுத்துச் சொன்னார்.
உமாமகேஸ்வரன் மற்ற விடயங்களில் எதிர்மாறாக இருந்தாலும் அரசியல் விடயங்களில் கதிரவனுடைய ஆலோசனையைக் கேட்பதுண்டு. புளொட்டினால் ஒரு போதும் தமிழீழ விடுதலையை வென்றெடுக்க முடியாது. தமிழீழம் என்று சொல்லிக் கொண்டு பவனி வரும் அதன் பிரதேச மாவட்டத் தலைவர்கள் எல்லோருமே பிழைப்பு வாதிகள் தான். குறைந்தபட்சம் இனவிடுதலையை வென்றெடுக்காவிட்டாலும் போராட்டத்திற்கு துரோகம் செய்யாமலாவது இருக்க வேண்டும். உண்மையில் நாங்கள் என்ன செய்கின்றோம். புலிகளை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் அரசாங்கத்துக்குத்தான் நாம் உதவி செய்து கொண்டிருக்கின்றோம் புலிகள் போராடுகின்றபடியால் தான் அரசாங்கம் எங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்கின்றது. புலிகள் அழ்க்கப்பட்டால் நாங்களும் அழிக்கப்பட்டுவிடுவோம் மனச்சாட்சியின்படி நாங்கள் சிந்தித்துப்பார்த்தால் எங்களுடைய ஆட்களது புலி எதிர்ப்பு என்பது அவர்களது சாதிய பிரதேச நலன்கள் புலிகளின் போராட்டத்தால் பாதிக்கப்படுவதால் ஏற்பட்ட வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது என்றும்,
புலிகள் வடக்கு கிழக்கில் போராடட்டும் அதில் நாங்கள் தலையிட வேண்டாம். எங்களுக்கு உண்மையில் இனவிடுதலையில் அக்கறை இருக்குமானால் நாங்கள் மலையகத்தில் சென்று போராடுவோம். சிறிலங்கா அரசாங்கத்தில் பொருளாதார அத்திவாரமாக இருப்பது மலையகம் தான். வடக்கு கிழக்கில் புலிகள் போராட மலையகத்தை நாம் ஆட்டம் காண வைத்தால் நிச்சயமாக சிறிலங்கா அரசாங்கத்தால் சமாளிக்க முடியாது. இது தமிழீழ போராட்டத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் உமாமகேஸ்வரனுக்கு நிலைமையை விளக்கினார் கதிரவன்.
உமாமகேஸ்வரனுக்கு அது சரியென்றுபட்டு அதுக்கு ஒத்துக்கொண்ட போது கதிரவன் சில நிபந்தனைகளை விதித்தார். முதலாவது மலையக மக்களுக்கு நாங்கள் தலைமை தாங்க முடியாது அங்கேயே அவர்களிடமிருந்தே ஒரு தலைமையை உருவாக்க வேண்டும். புளொட் என்ற அமைப்பிற்கும் மலையகத்திலே உருவாக்கப்போகின்ற அமைப்புக்கும் எந்தவித சம்பந்தமும் தொடர்பும் கூட இருக்கக்கூடாது. அந்த அமைப்பை கட்டுப்படுத்தும் அதிகாரம் புளொட்டுக்குக் கிடையாது. இந்த நிபந்தனைகளை உமாமகேஸ்வரன் ஏற்றுக் கொண்ட பின்பே கதிரவன் மலையகம் சென்றார்.
இந்தப் பின்னணியிலேயே மலையகத்தில் ;சந்திரசேகரன் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்ற நிபந்தனை முன்வைத்து டி.பி.எல்.எப்.இல் போட்டியிட முன்வந்த போது உமாமகேஸ்வரன் தடையேதும் சொல்லாமல் அதற்கும் சம்மதம் கொடுத்தார்.
ஆனால் யாழ்ப்பாண சாதிமான்கள் சும்மா இருப்பார்களா? நாங்கள் போராட வேண்டிய இடத்தை விட்டுவிட்டு தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத நபர்களுக்காக எங்களுடைய சக்தியை செலவழிக்கிறோம் என்று சீறி எழுந்தனர். அவர்களில் முதன்மையானவர் பாலபுத்தர், மலையக மக்களைப் பற்றியோ தமிழீழத்தில் அரசினதும் சாதிமான்களினதும் அடக்கு முறைகளால் மக்கள் அனுபவித்த துன்பத்தை எழுத்தில் கூட படித்திராத இந்த லண்டன் கனவான் இந்த எதிர்ப்புக்கு தலைமை தாங்கியது தற்செயலானதல்ல. புளொட்டின் சாதிய பிரதேச வெறிகொண்ட பிரிவினரின் திட்டமிட்ட நடவடிக்கைகள்தான் அது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக