22
கொழும்பு வந்த சங்கிலிக்கு வசந்தனைக் கொலை செய்ய வேண்டியதன் அவசியத்தை உமாமகேஸவரன் உணர்த்தினர். இந்தக் கொலையை மிகவும் இரகசியமாக செய்ய வேண்டும் என்றும் நுவரெலியாவில் தப்பவிட்டது போல் விடக்கூடாது எனவும் இக்கொலையை புலிகள்தான் செய்தார்கள் என்று நம்ப வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மாநாடு வில்பத்து காட்டிலுள்ள (மன்னார் மாவட்டம்) வனவிலங்கு சரணாலய கட்டிடத்தில் நடைபெற இருந்தது. இந்தக் கட்டடத்தில் முன்பு ஒரு சிறிய இராணுவ முகாம் இருந்தது. இது மாலைதீவு சதிப்புரட்சிக்கு முன்னர் புளொட்டினால் தாக்கப்பட்டது. ஏறக்குறைய 10 மைல் சுற்றுவட்டாரத்திற்கு குடிமனைகளே இல்லாத இந்தக் காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளும், புளொட்டினருமே நடமாடுவது உண்டு.
இந்திய இராணுவம் கூட அந்தப்பகுதிக்குச் சென்றதில்லை. மாநாட்டுக்கு முன் அப்பகுதி பாதுகாப்பு நிலைபற்றி அறிந்துவர வசந்தனையும், ENDLFவுடன் தொடர்பு வைத்திருந்த மூவரையும் அனுப்புவதென்றும் அதற்கு முன் சங்கிலி தனக்கு நம்பிக்கையானவர்களுடன் அங்கு சென்று காத்திருந்து அவர்கள் எதிர்பார்க்காத விதத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றுவிட்டு அத்தாக்குதலை விடுதலைப் புலிகள் செய்ததாக சொல்வதென்று முடிவு செய்து கொண்டு முள்ளிக்குளத்திற்குப் புறப்பட்டனர்.
ஆனால் அவர்கள் முள்ளிக்குளத்திற்கு போய்ச் சேர்நத போது நிலைமை வேறுவிதமாக இருந்தது. தேர்தலுக்கு முன் கிளம்பி தேர்தலுக்குப்பின் அடங்கிப் போயிருந்த மாணிக்கதாசனின் பாலியல் விவகாரம் கீழ்மட்ட உறுப்பினர்கள் மத்தியில் மீண்டும் சூடுபிடித்திருந்தது. மலையகத் தேர்தல் விவகாரம் மலையகத்தில் இரகசிய இராணுவ அமைப்பு கட்டப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு, இந்தியாவிடம் ஒத்துப் போய் அவர்கள் சொல்லியபடி நடந்து அவர்களிடம் ஆயுதங்கள் வாங்க வேண்டும் என்ற கோரிக்கை போன்ற பல விடயங்கள் அங்கு காராசாரமாக விவாதிக்கப்பட்டது. வசந்தனும் தன்னுடைய ஆட்கள் மூலமாக வெகு தந்திரமாக இந்த விவகாரங்களை அங்கு கிளப்பிவிட்டான்;.
அதைவிட மிக முக்கியமாக உமாமகேஸ்வரனை விட இந்தியாவுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தகுதி பாலபுத்தருக்குத்தான் உண்டு என்று சொல்லி போராட்டத்தில் நீண்ட அனுபவமோ, அல்லது போராட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்து ஏற்பட்ட கஸ்ரங்களை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்ட தகுதியோ இல்லாத லண்டன் கனவானான பாலபுத்தர் அவரது பிறப்பின் தகுதியின் அடிப்படையில் வசந்தன் குழுவினரால் முன்னணிக்கு கொண்டுவரப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
புளொட்டில் எஞ்சியிருந்த சாதிமான்களுக்கு இவரது முன்னிலைப்படுத்த எந்த நேரமும் உடைத்தவிடக்கூடிய இத்துப்போன பழைய தோணியில் கடலில் பயணம் செய்ய இருந்தவர்களுக்கு புத்தம்புதிய தோணி ஒன்று கிடைத்ததிற்கு ஒப்பானதாகும். புளொட்டில்லிருந்து பெரும்பாலான யாழ்ப்பாண சாதியக்கனவான்களுக்கும் பயில்வான்களுக்கும் உமாமகேஸ்வரனது தலைமை என்பது வயதாகிவிட்ட வேகமாக ஓடமுடியாத பந்தயக் குதிரையின் நிலையைப் போன்றதாக இருந்தது.
எவ்வாறு நன்றாக ஓடமுடியாத குதிரையை நம்பி எவரும் பணம் கட்டமாட்டார்களோ, எவ்வாறு குதிரையை பந்தயக்காரர்கள் அதனைத் தொடர்ந்து பந்தயக் குதிரையாக வைத்திருக்க மாட்டார்களோ அவ்வாறே இவர்களும் உமாமகேஸ்வரனைத் தொடர்ந்தும் தலைவராக ஏற்றுக் கொள்ளவும் அவர் பின்னால் செல்வதற்கும் தயாராக இருக்கவி;ல்லை.
உமாமகேஸ்வரனை வைத்துக் கொண்டு தங்களது நலன்களைப் பாதுகாப்பது என்பது தொடர்ந்து முடியாத காரியம் என்று அவர்கள் நம்பினார்கள். இத்தகைய ஒரு சூழ்நிலையில் வசந்தன் கொலையுணண்டு போனால் அவன் தியாகியாக்கப்பட்டு விடுவதோடு அவன் உருவாக்கிவிட்டுள்ள புரளிகளும் கருத்துக்களும் நியாயப்படுத்தப்பட்டுவிடும் என்று சங்கிலிக்குத் தோன்றியது. மாநாடு முடிந்து புதிய நிர்வாகம் ஒன்று தெரிவு செய்யப்படும்வரை அவனைக் கொலை செய்யக்கூடாது என சங்கிலி நினைத்தான். இந்த விடயத்தை அவன் உடனடியாக கொழும்பிலுள்ள உமாமகேஸ்வரனுக்குத் தெரிவித்தான்.
வசந்தன் விலாங்கு மீனைப் போலவும் அவனைக் கொல்ல தான் எடுக்கின்ற எல்லா முயற்சிகளிலும் அவன் தப்பி நழுவிச் செல்வது உமாமகேஸ்வரனுக்கு எரிச்சலை உண்டாக்கியது. அத்துடன் தற்போது பாலபுத்தரை முன்னிறுத்தி அவன் தன் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அவருக்குப் புதிய சந்தேகம் ஒன்றையும் ஏற்படுத்தியது. வசந்தன் இதுவரைகாலமும் ENDLFஇன் தூண்டுதலிலேயே தன்னைக் கொல்ல முயல்வதாக நினைத்துக் கொண்டிருந்தார். தற்போது பாலபுத்தரை அவன் தூக்கிப் பிடிப்பதன் மூலமும் இது றோவின் வேலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் அவருக்கு வந்தது.
பாலபுத்தரை றோவின் தொடர்பாளராக நியமித்தது உமாமகேஸ்வரன்தான். ஆனால் அந்தத் தொடர்பின் மூலம் றோவுடன் அவர் கொண்ட அளவுக்கு அதிகமான நெருக்கம் றோவின் மூளையாய் இயங்கும் EPRLR ENDLF TELO அமைப்புக்களுடன் கூட்டுச் சேர வேண்டும் என்று சொல்லி அவற்றுக்கு வக்காலத்து வாங்கிவந்த விதம் இதெல்லாம் ரோவின் மூளைச்சலவை குழுசையை அவர் விழுங்கிவிட்டார் என்ற சந்தேகத்தை உமாமகேஸ்வரனுக்கு உண்டாக்கியிருந்தது.
போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் அதற்குத் தலைமை தாங்குவதில் உமாமகேஸ்வரன் நிறைய தவறுகளை விட்டிருந்தாலும் றோவுக்காக செய்யப்பட்ட மாலைதீவுத் தாக்குதல் ஜே.ஆருடன் பேச்சுவார்த்தை, அத்துலத்முதலியுடன் கூட்டு என்று பல சந்தர்ப்பவாதப் போக்குகளை கடைப்பிடித்திருந்தாலும் புலிகளை எதிர்ப்பது என்ற விடயத்தில் EPRLR ENDLF TELO குழுக்களைப் போல் காட்டிக் கொடுக்கும் நிலைக்குப் போகவில்லை. அதுபோலவே அந்த மூன்று இயக்கங்களுடனும கூட்டுச் சேரவும் அவர் தயாராக இருக்கவில்லை.
புலிகள் தங்கள் ஆயுத பலத்தைக் கொண்டு தொடர்ந்து போராடியபடியால்தான் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தமிழர்களுடைய பிரதிநிதி அவர்கள் தான் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
அவர்களைக் காட்டிக்கொடுக்கும் அல்லது அவர்களை அழிக்க நினைக்கும் முயற்சிக்குத் துணை போவது தமிழ் மக்களுடைய போராட்டத்தையும் தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவத்தையும் அழிப்பதற்கு துணை போவதாகும் என்று புலிகளுக்கு எதிராக மற்றைய இயக்கங்களுடன் கூட்டுச் சேர வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்ட இயக்கத்தின் எல்லா மத்தியகுழு கூட்டங்களிலும் “நீங்கள் ஏன் மற்றைய இயக்கங்களுடன் சேரக்கூடாது” என்ற கேள்வி எழுப்பிய எல்லா உள்நாட்டு வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கும் உமாமகேஸ்வரன் தொடர்ந்து இந்தக் கருத்தைக் கூறி வந்திருக்கின்றார்.
அவர் ஜே.ஆருடனும், பிரேமதாசாவுடனும் பேச்சுவர்த்தைக்குச் சென்ற காலத்தில் கூட புலிகள் பலமான நிலையில் இருக்கின்றபடியால்தான் இன்றைக்கு எங்களை சரிசமமாக இருந்து பேசக் கூப்பிடுகின்றார்கள். அவர்கள் பலமிழந்துவிட்டால் எங்களைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஒரே நாளில் எங்களை நசுக்கி அழித்துவிடுவார்கள் என்று சொல்லியிருக்கின்றார்.
பாலபுத்தரை பொறுத்தவரை பேச்சுவார்த்தையின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று நினைப்பது பாராளுமன்றத்தில் எம.;பி. ஆக இருப்பது, மாகாணசபையில் முதலமைச்சராக இருப்பது அல்லது அமைச்சராக இருப்பது பேச்சுவார்த்தை மேடையின் அமைப்பின் தலைமைப் பிரதிநிதியாய் இருப்பது என்ற அவரது பாரம்பரிய வட்டத்துக்கு அப்பால் அவரால் வரமுடியாது. அவரால் எப்போதும் யாரையாவது சார்ந்திருந்துதான் செயற்படமுடியுமே தவிர அரசுக்கெதிரான ஆயுதப் போராட்டத்தை நடத்துவதற்கோ அல்லது அதற்கு தலைமை தாங்குவதற்கோ முடியாதவர் என்பது உமாமகேஸ்வரனின் கணிப்பு.
1989 பொதுத்தேர்தல் முடிந்ததும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நுPடுகுஇற்கு விழுந்த குறைந்தளவு வாக்குகள் (10800) பாலபுத்தரை சோர்வடையச் செய்திருந்தது. நாங்கள் தேர்தலில் போட்டியிட்டும் இந்தியாவில் நிற்கிறோம் என்று மூக்குடைபட்டதை விட போட்டியிடாமல் விட்டிருக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
இதைக் கேள்விபட்டதும் உமாமகேஸ்வரன் “யாழ்ப்பாணத்தில் எங்களுக்கு இவ்வளவு வாக்குகள் விழுந்ததே பெரிய விசயம், உவையால அதை நினைத்துப் பார்க்க முடியல்லை. உவையின்ர கவலையெல்லாம் எம்.பி.பதவி கிடைக்கேல்லை” என்பது தான் என்று சாடியிருந்தார். மொத்தத்தில் உமாமகேஸ்வரனைப் பெறுத்தவரையில் பாலபுத்தரால் தனது தலைமைத்துவத்திற்கு போட்டியாக வரமுடியும் என அவர் நம்பவில்லை. ஆனால் அவரையிட்டு வேறொரு விடயத்தில் அவர் பயந்தார்
கொழும்பு வந்த சங்கிலிக்கு வசந்தனைக் கொலை செய்ய வேண்டியதன் அவசியத்தை உமாமகேஸவரன் உணர்த்தினர். இந்தக் கொலையை மிகவும் இரகசியமாக செய்ய வேண்டும் என்றும் நுவரெலியாவில் தப்பவிட்டது போல் விடக்கூடாது எனவும் இக்கொலையை புலிகள்தான் செய்தார்கள் என்று நம்ப வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மாநாடு வில்பத்து காட்டிலுள்ள (மன்னார் மாவட்டம்) வனவிலங்கு சரணாலய கட்டிடத்தில் நடைபெற இருந்தது. இந்தக் கட்டடத்தில் முன்பு ஒரு சிறிய இராணுவ முகாம் இருந்தது. இது மாலைதீவு சதிப்புரட்சிக்கு முன்னர் புளொட்டினால் தாக்கப்பட்டது. ஏறக்குறைய 10 மைல் சுற்றுவட்டாரத்திற்கு குடிமனைகளே இல்லாத இந்தக் காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளும், புளொட்டினருமே நடமாடுவது உண்டு.
இந்திய இராணுவம் கூட அந்தப்பகுதிக்குச் சென்றதில்லை. மாநாட்டுக்கு முன் அப்பகுதி பாதுகாப்பு நிலைபற்றி அறிந்துவர வசந்தனையும், ENDLFவுடன் தொடர்பு வைத்திருந்த மூவரையும் அனுப்புவதென்றும் அதற்கு முன் சங்கிலி தனக்கு நம்பிக்கையானவர்களுடன் அங்கு சென்று காத்திருந்து அவர்கள் எதிர்பார்க்காத விதத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றுவிட்டு அத்தாக்குதலை விடுதலைப் புலிகள் செய்ததாக சொல்வதென்று முடிவு செய்து கொண்டு முள்ளிக்குளத்திற்குப் புறப்பட்டனர்.
ஆனால் அவர்கள் முள்ளிக்குளத்திற்கு போய்ச் சேர்நத போது நிலைமை வேறுவிதமாக இருந்தது. தேர்தலுக்கு முன் கிளம்பி தேர்தலுக்குப்பின் அடங்கிப் போயிருந்த மாணிக்கதாசனின் பாலியல் விவகாரம் கீழ்மட்ட உறுப்பினர்கள் மத்தியில் மீண்டும் சூடுபிடித்திருந்தது. மலையகத் தேர்தல் விவகாரம் மலையகத்தில் இரகசிய இராணுவ அமைப்பு கட்டப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு, இந்தியாவிடம் ஒத்துப் போய் அவர்கள் சொல்லியபடி நடந்து அவர்களிடம் ஆயுதங்கள் வாங்க வேண்டும் என்ற கோரிக்கை போன்ற பல விடயங்கள் அங்கு காராசாரமாக விவாதிக்கப்பட்டது. வசந்தனும் தன்னுடைய ஆட்கள் மூலமாக வெகு தந்திரமாக இந்த விவகாரங்களை அங்கு கிளப்பிவிட்டான்;.
அதைவிட மிக முக்கியமாக உமாமகேஸ்வரனை விட இந்தியாவுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தகுதி பாலபுத்தருக்குத்தான் உண்டு என்று சொல்லி போராட்டத்தில் நீண்ட அனுபவமோ, அல்லது போராட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்து ஏற்பட்ட கஸ்ரங்களை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்ட தகுதியோ இல்லாத லண்டன் கனவானான பாலபுத்தர் அவரது பிறப்பின் தகுதியின் அடிப்படையில் வசந்தன் குழுவினரால் முன்னணிக்கு கொண்டுவரப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
புளொட்டில் எஞ்சியிருந்த சாதிமான்களுக்கு இவரது முன்னிலைப்படுத்த எந்த நேரமும் உடைத்தவிடக்கூடிய இத்துப்போன பழைய தோணியில் கடலில் பயணம் செய்ய இருந்தவர்களுக்கு புத்தம்புதிய தோணி ஒன்று கிடைத்ததிற்கு ஒப்பானதாகும். புளொட்டில்லிருந்து பெரும்பாலான யாழ்ப்பாண சாதியக்கனவான்களுக்கும் பயில்வான்களுக்கும் உமாமகேஸ்வரனது தலைமை என்பது வயதாகிவிட்ட வேகமாக ஓடமுடியாத பந்தயக் குதிரையின் நிலையைப் போன்றதாக இருந்தது.
எவ்வாறு நன்றாக ஓடமுடியாத குதிரையை நம்பி எவரும் பணம் கட்டமாட்டார்களோ, எவ்வாறு குதிரையை பந்தயக்காரர்கள் அதனைத் தொடர்ந்து பந்தயக் குதிரையாக வைத்திருக்க மாட்டார்களோ அவ்வாறே இவர்களும் உமாமகேஸ்வரனைத் தொடர்ந்தும் தலைவராக ஏற்றுக் கொள்ளவும் அவர் பின்னால் செல்வதற்கும் தயாராக இருக்கவி;ல்லை.
உமாமகேஸ்வரனை வைத்துக் கொண்டு தங்களது நலன்களைப் பாதுகாப்பது என்பது தொடர்ந்து முடியாத காரியம் என்று அவர்கள் நம்பினார்கள். இத்தகைய ஒரு சூழ்நிலையில் வசந்தன் கொலையுணண்டு போனால் அவன் தியாகியாக்கப்பட்டு விடுவதோடு அவன் உருவாக்கிவிட்டுள்ள புரளிகளும் கருத்துக்களும் நியாயப்படுத்தப்பட்டுவிடும் என்று சங்கிலிக்குத் தோன்றியது. மாநாடு முடிந்து புதிய நிர்வாகம் ஒன்று தெரிவு செய்யப்படும்வரை அவனைக் கொலை செய்யக்கூடாது என சங்கிலி நினைத்தான். இந்த விடயத்தை அவன் உடனடியாக கொழும்பிலுள்ள உமாமகேஸ்வரனுக்குத் தெரிவித்தான்.
வசந்தன் விலாங்கு மீனைப் போலவும் அவனைக் கொல்ல தான் எடுக்கின்ற எல்லா முயற்சிகளிலும் அவன் தப்பி நழுவிச் செல்வது உமாமகேஸ்வரனுக்கு எரிச்சலை உண்டாக்கியது. அத்துடன் தற்போது பாலபுத்தரை முன்னிறுத்தி அவன் தன் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அவருக்குப் புதிய சந்தேகம் ஒன்றையும் ஏற்படுத்தியது. வசந்தன் இதுவரைகாலமும் ENDLFஇன் தூண்டுதலிலேயே தன்னைக் கொல்ல முயல்வதாக நினைத்துக் கொண்டிருந்தார். தற்போது பாலபுத்தரை அவன் தூக்கிப் பிடிப்பதன் மூலமும் இது றோவின் வேலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் அவருக்கு வந்தது.
பாலபுத்தரை றோவின் தொடர்பாளராக நியமித்தது உமாமகேஸ்வரன்தான். ஆனால் அந்தத் தொடர்பின் மூலம் றோவுடன் அவர் கொண்ட அளவுக்கு அதிகமான நெருக்கம் றோவின் மூளையாய் இயங்கும் EPRLR ENDLF TELO அமைப்புக்களுடன் கூட்டுச் சேர வேண்டும் என்று சொல்லி அவற்றுக்கு வக்காலத்து வாங்கிவந்த விதம் இதெல்லாம் ரோவின் மூளைச்சலவை குழுசையை அவர் விழுங்கிவிட்டார் என்ற சந்தேகத்தை உமாமகேஸ்வரனுக்கு உண்டாக்கியிருந்தது.
போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் அதற்குத் தலைமை தாங்குவதில் உமாமகேஸ்வரன் நிறைய தவறுகளை விட்டிருந்தாலும் றோவுக்காக செய்யப்பட்ட மாலைதீவுத் தாக்குதல் ஜே.ஆருடன் பேச்சுவார்த்தை, அத்துலத்முதலியுடன் கூட்டு என்று பல சந்தர்ப்பவாதப் போக்குகளை கடைப்பிடித்திருந்தாலும் புலிகளை எதிர்ப்பது என்ற விடயத்தில் EPRLR ENDLF TELO குழுக்களைப் போல் காட்டிக் கொடுக்கும் நிலைக்குப் போகவில்லை. அதுபோலவே அந்த மூன்று இயக்கங்களுடனும கூட்டுச் சேரவும் அவர் தயாராக இருக்கவில்லை.
புலிகள் தங்கள் ஆயுத பலத்தைக் கொண்டு தொடர்ந்து போராடியபடியால்தான் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தமிழர்களுடைய பிரதிநிதி அவர்கள் தான் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
அவர்களைக் காட்டிக்கொடுக்கும் அல்லது அவர்களை அழிக்க நினைக்கும் முயற்சிக்குத் துணை போவது தமிழ் மக்களுடைய போராட்டத்தையும் தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவத்தையும் அழிப்பதற்கு துணை போவதாகும் என்று புலிகளுக்கு எதிராக மற்றைய இயக்கங்களுடன் கூட்டுச் சேர வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்ட இயக்கத்தின் எல்லா மத்தியகுழு கூட்டங்களிலும் “நீங்கள் ஏன் மற்றைய இயக்கங்களுடன் சேரக்கூடாது” என்ற கேள்வி எழுப்பிய எல்லா உள்நாட்டு வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கும் உமாமகேஸ்வரன் தொடர்ந்து இந்தக் கருத்தைக் கூறி வந்திருக்கின்றார்.
அவர் ஜே.ஆருடனும், பிரேமதாசாவுடனும் பேச்சுவர்த்தைக்குச் சென்ற காலத்தில் கூட புலிகள் பலமான நிலையில் இருக்கின்றபடியால்தான் இன்றைக்கு எங்களை சரிசமமாக இருந்து பேசக் கூப்பிடுகின்றார்கள். அவர்கள் பலமிழந்துவிட்டால் எங்களைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஒரே நாளில் எங்களை நசுக்கி அழித்துவிடுவார்கள் என்று சொல்லியிருக்கின்றார்.
பாலபுத்தரை பொறுத்தவரை பேச்சுவார்த்தையின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று நினைப்பது பாராளுமன்றத்தில் எம.;பி. ஆக இருப்பது, மாகாணசபையில் முதலமைச்சராக இருப்பது அல்லது அமைச்சராக இருப்பது பேச்சுவார்த்தை மேடையின் அமைப்பின் தலைமைப் பிரதிநிதியாய் இருப்பது என்ற அவரது பாரம்பரிய வட்டத்துக்கு அப்பால் அவரால் வரமுடியாது. அவரால் எப்போதும் யாரையாவது சார்ந்திருந்துதான் செயற்படமுடியுமே தவிர அரசுக்கெதிரான ஆயுதப் போராட்டத்தை நடத்துவதற்கோ அல்லது அதற்கு தலைமை தாங்குவதற்கோ முடியாதவர் என்பது உமாமகேஸ்வரனின் கணிப்பு.
1989 பொதுத்தேர்தல் முடிந்ததும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நுPடுகுஇற்கு விழுந்த குறைந்தளவு வாக்குகள் (10800) பாலபுத்தரை சோர்வடையச் செய்திருந்தது. நாங்கள் தேர்தலில் போட்டியிட்டும் இந்தியாவில் நிற்கிறோம் என்று மூக்குடைபட்டதை விட போட்டியிடாமல் விட்டிருக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
இதைக் கேள்விபட்டதும் உமாமகேஸ்வரன் “யாழ்ப்பாணத்தில் எங்களுக்கு இவ்வளவு வாக்குகள் விழுந்ததே பெரிய விசயம், உவையால அதை நினைத்துப் பார்க்க முடியல்லை. உவையின்ர கவலையெல்லாம் எம்.பி.பதவி கிடைக்கேல்லை” என்பது தான் என்று சாடியிருந்தார். மொத்தத்தில் உமாமகேஸ்வரனைப் பெறுத்தவரையில் பாலபுத்தரால் தனது தலைமைத்துவத்திற்கு போட்டியாக வரமுடியும் என அவர் நம்பவில்லை. ஆனால் அவரையிட்டு வேறொரு விடயத்தில் அவர் பயந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக