27
முள்ளிக்குள தாக்குதல் முடிந்த பின்பு றோ கூப்பிட்டும் அவர்களிடம் பேசி ஆயுதம் வாங்கி புலிகளைத் திருப்பித் தாக்க மறுத்ததன் மூலம் உமாமகேஸ்வரன் தங்களை ஏமாற்றிவட்டார். இறந்த தங்களது தோழர்களுக்கு துரோகம் செய்து விட்டார். தங்களைய நடுத்தெருவில் விட்டுவிட்டார். என்கின்ற அதிருப்தி மனப்பான்மை அந்தத்தாக்குதலில் பலியானவர்கள் போக எஞ்சியிருந்த புளொட் உறுப்பினர்களுக்கு ஏற்பட்டது.
இந்த அதிருப்தியை மேலும் தூண்டிவிடுவதில் கொழும்பில் தங்கியிருந்த மாணிக்கதாசனும் பாலபுத்தரின் ஆதரவாளர்களும் பெரும் பங்காற்றினர்.
எங்களுடைய தோழர்கள் அநியாயமாகச் செத்துப் போனார்கள். எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. புலிகளைத் தாக்க மாட்டன், இந்தியாவிட்டை போகமாட்டன் என்று உவருக்கென்ன (உமா) கொள்கை வேண்டிக் கிடக்கு. என்று இவர்கள் அதிருப்தி கொண்டிருந்த உறுப்பினர்களைத் தூண்டிவிட்டனர்.
உமாமகேஸ்வரனைப் பொறுத்தவரை றோ தங்களை வந்து சந்திக்கும்படி சொன்ன செய்தி கிடைத்த உடனேயே அவர்களின் சதித்திட்டம் அவருக்குப் புரிந்துவிட்டது. முன்பு ராஜனை வைத்து தன்னை வீழ்த்த சதி செய்தது போல் தற்போது பாலபுத்தரை வைத்து தன்னை ஒழித்துக்ட்ட அவர்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்பதை அவர் உறுதியாக நம்பினார். கீழ்மட்ட உறுப்பினர்களை அழைத்து றோவிற்காகத் தான் மாலைதீவுத் தாக்குதலை நடத்தினேன் என்று உண்மையைச் சொல்ல அவர் பயந்தார். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது.
இந்திய எதிர்ப்பு அது இது என்று கொள்கை பேசிக் கொண்டு EPRLF ENDLF TELO இயக்கங்கள் போல் இந்திய இராணுவத்துடன் ஒட்டி உறவாடி வசதிகளையும் சலுகைகளையும் அனுபவிப்பதை துரோகத்தனம் என்று சொல்லிவிட்டு திரைமறைவில் தான் றோ வின் கையாளாக செயற்பட்டேன் என்று சொன்னால் கீழ்மட்ட உறுப்பினர்கள் தன்னுடைய தலைமையை சந்தர்ப்பவாத தலைமையாக நினைத்து வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று அவர் பயந்தது முதலாவது காரணம்.
அடுத்தது மாலைதீவு தாக்குதல் தோல்வியில் முடிந்த காலத்திலும் மகாநாடு நடந்த போதும் உண்மையைச் சொல்லாமல் இருந்துவிட்டு நெருக்கடி வந்தவுடன் உண்மையைச் சொன்னால் மற்றவர்கள் அதை பொய் என்றும் றோவைச் சந்திக்க மறுப்பதற்கு தான் சொல்லும் கட்டுக்கதை என்றும் நினைத்துவிடுவார்கள் என்று எண்ணியது இரண்டாவது காரணமாகும்.
இதனால் பலவீனமான நிலையில் அமைப்பை வைத்துக் கொண்டு புலிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் இயங்க அவர் விரும்பவில்லை. புளொட்டைக் கலைக்க வேண்டும் என்ற முடிவில் அவர் உறுதியாக இருந்தார். அவ்வாறு புளொட் கலைக்கப்பட்டால் வெளிநாட்டுக்குப் போக வசதியுள்ளவர்கள்; போக வசதி இல்லாதவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிப் போக முடியாத வறிய உறுப்பினர்களை அவர்கள் விரும்பும் பட்சத்தில் புளொட்டிற்கென வெளிநாடுகளில் இருந்த நிதியை பயன்படுத்தி அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப அவர் திட்டமிட்டிருந்தார்.
வெளிநாட்டுக்குப் போக விருப்பமில்லாமல் தொடர்ந்து போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்ய விரும்புபவர்களை மலையகத்திற்கு அனுப்பிவைக்க அவர் தீர்மானித்தார்.
அதோடு தான் தொடர்ந்து கொழும்பில் தங்கியிருப்பதும் பாதுகாப்பற்றது என்று அவர் நினைத்தார். எனவே தனது இருப்பிடத்தை கண்டிக்கு அல்லது மாத்தறைக்கு மாற்ற முடிவு செய்தார்.
இது விடயமாக மலையகத்திலிருந்த கதிரவனிடம் தொடர்பு கொண்டு JVPயினர் மூலமாக கண்டியிலும், மாத்தறையிலும் தான் தங்குவதற்கு ஒரு வீடு பார்க்கும்படியும் இந்தவிடயத்தை மிக இரகசியமாக வைத்திருக்கும் படியும் சொன்னார். அதேநேரம் தான் முன்பு கராச்சிக்கு தனது இருப்பிடத்தை மாற்ற விரும்பிய போது சிங்கப்பூருக்குப் போகப் போவதாக வெளியே வதந்தி ஒன்றை பரவ விட்டது போல தற்போதும் தான் சிங்கப்பூருக்கு போகப் போவதாக ஒரு வதந்தியைப் பரப்பி விட்டார்.
அவர் தானே உருவாக்கிவட்ட இந்த வதந்தியே அவரது உயிருக்கு உலை வைக்கும் என அவர் அப்போது நினைக்கவில்லை. இந்த வதந்தி வெளியே பரவியவுடனேயே உமாமகேஸ்வரனை ஒழித்து பாலபுத்தரை தலைமைப் பதவிக்கு கொண்டுவர காத்திருந்தவர்கள் அதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
சிங்கப்பூரில் போயிருந்து கொண்டு இயக்க நடமவடிக்கைகளை கவனிக்கப் போவதாக உமாமகேஸ்வரன் வெளியிட்ட இந்தத் தகவலை இவர்கள் அவர் இயக்கச் சொத்துக்களுடன் மனைவியையும் கூட்டிக் கொண்டு சிங்கப்பூருக்கு தப்பி ஓடப் போகிறார். அதற்கு முன் பாலபுத்தர், மாணிக்கதாசன்; உட்பட பத்துப் பேரை கொலை செய்யப் போகின்றார் என்று கயிறு திரித்துவிட்டார்கள்.
சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் சிங்கப்பூர் செல்வதற்கு உமாமகேஸ்வரன் தங்களிடம் உதவி கேட்டதாகவும், தங்களுக்கிருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி தாங்கள் இரகசியமாக அந்த ஏற்பாட்டை செய்து கொடுக்க ஒத்துக்கொண்டிருப்பதாகவும் கேட்பவர்களுக்கு அவர்கள் நம்பும்படியாக அதி உயர் இரகசியம் ஒன்றை சொல்வது போல் கதை விட்டார்கள்.
உண்மையில் உமாமகேஸ்வரன் ஒரு போதும் சிங்கப்பூரில் சென்று தங்கியிருக்க விரும்பவில்லை. முன்பு இந்தியாவில் பிடிபட்ட ஆயுதங்களைச் சிங்கப்பூரில் வைத்து கப்பலில் ஏற்றியது தொடர்பாகவும் புளொட்டின் பேரில் நடந்த தூள் கடத்தல், அந்நியச்செலாவணி, விவகாரங்கள் தொடர்பாகவும் அவர் சிங்கப்பூர் பொலிசாரால் விசாரிக்கப்பட வேண்டிய ஒரு நபராக இருந்தார். சிறிலங்கா பொலிசைவிட சிங்கப்பூர் பொலிஸ் ஆபத்து மிகுந்தது என்பதும் அவருக்குத் தெரியும். அதனால்தான் சிங்கப்பூர் போவதாக மற்றவர்களை நம்பவைத்துவிட்டு குறிப்பாக சிறிலங்கா அரசாங்கத்தைக் கூட நம்ப வைத்துவிட்டு கண்டியில் அல்லது மாத்தறையில் ஜே.வி.பி.யினரது ஆதரவுடன் ஒரு முஸ்லீம் வியாபாரி போல தங்கியிருக்க விரும்பினார்.
ஆனால் றோவினால் சாவி கொடுத்துவிடப்பட்ட பாலபுத்தரின் ஆதரவாளர்கள் இந்தவிடயத்தில் செய்த கயிறு திரிப்புக்களும் கிளப்பிவிட்ட கதைகளும் உமாமகேஸ்வரனுக்கு மிகவும் விசுவாசமாக இருந்த ராபின், ஆச்சி, ராஜன் போன்றவர்களைக்கூட அவரைக் கொலை செய்யும் அளவிற்கு ஆத்திரப்பட வைத்தது.
இந்த ஆத்திரத்தை தங்களது இலக்கை நோக்கி (உமாவைக் கொல்ல) திருப்பிவிட திட்டமிடப்பட கயிறுதிரிப்பாளர் குழு, முதலில் மலையகப் பொறுப்பாளர் கதிரவனை(திவாகரனை) கொலை செய்யத் திட்டமிட்டது.
ஆனால் மலையகத்திற்குச் சென்று அங்கே வைத்து அவரைக் கொலை செய்ய அவர்களுக்கத் துணிவிருக்கவில்லை. ஜே.வி.பி.யின் பயமிருந்தது. எனவே கொழும்புக்கு அவரை வரவழைத்து அங்கு வைத்து அவரைக் கொல்வதற்கு அவர்கள் காத்திருந்தனர்.
இதற்கிடையில் உமாமகேஸ்வரன் கேட்டுக் கொண்டபடி ஜே.வி.பி.யினரிடம் நடந்த விடயங்களைச் சொல்லி அவருக்குக் கண்டியிலும், மாத்தறையிலும் வீடுகள் பார்த்து எல்லா ஒழுங்குகளையும் செய்து முடித்துவிட்டு இந்தவிடயம் பற்றி உமாமகேஸ்வரனுடன் நேரடியாக கதைப்பதற்காக கதிரவன் நுவரேலியாவிலிருந்து கொழும்புக்கு வந்து கொண்டிருக்கும் போது ரந்தனிகல நீர்த்தேக்கத்துக்கு அண்மையில் அவர் வந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி அவரது காலும், கையும் உடைந்துவிட்டன. இது நடந்தத 1989ம் ஆண்டு யூலை மாதம் 12ம் திகதி.
1989 யூலை மாதம் 16ம் திகதி இரவு தெகிவளையில் உமாமகேஸ்வரன் தங்கியிருந்த வீட்டுக்குள் சிறிலங்கா இராணுவம் புகுந்தது. உமாமகேஸ்வரன் பின்பக்க மதிலால் ஏறிக் குதித்து தப்பி ஒடிவிட்டார். மற்றவர்களைப் போல் மனம் மாறாமல் உமாமகேஸ்வரன் மேல் நம்பிக்கையோடு இருந்த அவரது மெய்க்காப்பளர்களில் ஒருவரான சக்திவேலை மட்டும் இராணுவத்தினர் கைது செய்து சென்றுவிட்டனர்.
இது ஒரு காட்டிக் கொடுப்பு நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இதில் எவ்வளவு உண்மையுள்ளது என்பது தெரியாது.
மதில் பாய்ந்து ஓடிய உமாமகேஸ்வரன் ஆச்சி ராஜன் மற்றும் ராபின் துணையோடு பம்பலப்பிட்டி தொடர்மாடிக் கட்டிடத்திலிருந்த அவருக்கு வேண்டிய ஒருவர் வீட்டில் சென்று தங்கியிருந்தார்.
மறுநாள் 17ம் திகதி காலை தாங்கள் பாதுகாப்பு நிலைமைகளை அறிந்து வருவதாக சொல்லிவட்டு ஆச்சி ராஜனும், ராபினும் வெளியே சென்றனர்.
அன்று மதியம் ஆச்சி ராஜன் மட்டும் திரும்பி வந்து சாப்பிடப் போக வரும்படி உமாமகேஸ்வரனை அழைத்தான்.
அவர் அவனுடன் வெளியே வந்ததும் அந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தின் முன்பிருந்த காலிவீதியால் செல்வது ஆபத்தானது என்றும் பின்புறமாக கடற்கரையோரம் உள்ள வீதி வழியாக செல்லலாம் என்றும் சொல்லி அவரை அழைத்துச் சென்றான்.
அவர்கள் இருவரும் அந்த வீதியில் சிறிது தூரம் சென்ற போது ராபின் உட்பட 5 பேர் அங்கே ஓரிடத்தில் இருந்தார்கள்.
அதைக்கண்ட உமாமகேஸ்வரன் இந்த சனியன்கள் இதில ஏன் நிற்குதுகள் உதுகளுக்குச் சொன்னாலும் விளங்காது என்று பேசிக் கொண்டு அவர்களைக் கடந்து அப்பால் சென்றார்.
ஒரு பத்து மீட்டர் தூரம் அவர் சென்றிருக்கமாட்டார் அதற்குள் முதல்வெடி அவரது முதுகைத் துளைத்தது. ஐயோ என்று அவர் அலற அடுத்தடுத்த வெடிகள் அவரது உடலைத் துளைத்தன. அவர் நிலத்தில் சுருண்டு வீழ்ந்தார். அந்த இடத்திலேயே அவர் கதை முடிந்தது.
பார் தமிழ் தமிழ் என்று பம்மாத்து விட்ட உவன் சாகிற போதும் அம்மா என்று கூப்பிடவில்லை. ஐயோ என்று தான் சொன்னான் என்று அவரை சுட்ட ஒருவன் கத்தினான்
முள்ளிக்குள தாக்குதல் முடிந்த பின்பு றோ கூப்பிட்டும் அவர்களிடம் பேசி ஆயுதம் வாங்கி புலிகளைத் திருப்பித் தாக்க மறுத்ததன் மூலம் உமாமகேஸ்வரன் தங்களை ஏமாற்றிவட்டார். இறந்த தங்களது தோழர்களுக்கு துரோகம் செய்து விட்டார். தங்களைய நடுத்தெருவில் விட்டுவிட்டார். என்கின்ற அதிருப்தி மனப்பான்மை அந்தத்தாக்குதலில் பலியானவர்கள் போக எஞ்சியிருந்த புளொட் உறுப்பினர்களுக்கு ஏற்பட்டது.
இந்த அதிருப்தியை மேலும் தூண்டிவிடுவதில் கொழும்பில் தங்கியிருந்த மாணிக்கதாசனும் பாலபுத்தரின் ஆதரவாளர்களும் பெரும் பங்காற்றினர்.
எங்களுடைய தோழர்கள் அநியாயமாகச் செத்துப் போனார்கள். எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. புலிகளைத் தாக்க மாட்டன், இந்தியாவிட்டை போகமாட்டன் என்று உவருக்கென்ன (உமா) கொள்கை வேண்டிக் கிடக்கு. என்று இவர்கள் அதிருப்தி கொண்டிருந்த உறுப்பினர்களைத் தூண்டிவிட்டனர்.
உமாமகேஸ்வரனைப் பொறுத்தவரை றோ தங்களை வந்து சந்திக்கும்படி சொன்ன செய்தி கிடைத்த உடனேயே அவர்களின் சதித்திட்டம் அவருக்குப் புரிந்துவிட்டது. முன்பு ராஜனை வைத்து தன்னை வீழ்த்த சதி செய்தது போல் தற்போது பாலபுத்தரை வைத்து தன்னை ஒழித்துக்ட்ட அவர்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்பதை அவர் உறுதியாக நம்பினார். கீழ்மட்ட உறுப்பினர்களை அழைத்து றோவிற்காகத் தான் மாலைதீவுத் தாக்குதலை நடத்தினேன் என்று உண்மையைச் சொல்ல அவர் பயந்தார். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது.
இந்திய எதிர்ப்பு அது இது என்று கொள்கை பேசிக் கொண்டு EPRLF ENDLF TELO இயக்கங்கள் போல் இந்திய இராணுவத்துடன் ஒட்டி உறவாடி வசதிகளையும் சலுகைகளையும் அனுபவிப்பதை துரோகத்தனம் என்று சொல்லிவிட்டு திரைமறைவில் தான் றோ வின் கையாளாக செயற்பட்டேன் என்று சொன்னால் கீழ்மட்ட உறுப்பினர்கள் தன்னுடைய தலைமையை சந்தர்ப்பவாத தலைமையாக நினைத்து வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று அவர் பயந்தது முதலாவது காரணம்.
அடுத்தது மாலைதீவு தாக்குதல் தோல்வியில் முடிந்த காலத்திலும் மகாநாடு நடந்த போதும் உண்மையைச் சொல்லாமல் இருந்துவிட்டு நெருக்கடி வந்தவுடன் உண்மையைச் சொன்னால் மற்றவர்கள் அதை பொய் என்றும் றோவைச் சந்திக்க மறுப்பதற்கு தான் சொல்லும் கட்டுக்கதை என்றும் நினைத்துவிடுவார்கள் என்று எண்ணியது இரண்டாவது காரணமாகும்.
இதனால் பலவீனமான நிலையில் அமைப்பை வைத்துக் கொண்டு புலிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் இயங்க அவர் விரும்பவில்லை. புளொட்டைக் கலைக்க வேண்டும் என்ற முடிவில் அவர் உறுதியாக இருந்தார். அவ்வாறு புளொட் கலைக்கப்பட்டால் வெளிநாட்டுக்குப் போக வசதியுள்ளவர்கள்; போக வசதி இல்லாதவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிப் போக முடியாத வறிய உறுப்பினர்களை அவர்கள் விரும்பும் பட்சத்தில் புளொட்டிற்கென வெளிநாடுகளில் இருந்த நிதியை பயன்படுத்தி அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப அவர் திட்டமிட்டிருந்தார்.
வெளிநாட்டுக்குப் போக விருப்பமில்லாமல் தொடர்ந்து போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்ய விரும்புபவர்களை மலையகத்திற்கு அனுப்பிவைக்க அவர் தீர்மானித்தார்.
அதோடு தான் தொடர்ந்து கொழும்பில் தங்கியிருப்பதும் பாதுகாப்பற்றது என்று அவர் நினைத்தார். எனவே தனது இருப்பிடத்தை கண்டிக்கு அல்லது மாத்தறைக்கு மாற்ற முடிவு செய்தார்.
இது விடயமாக மலையகத்திலிருந்த கதிரவனிடம் தொடர்பு கொண்டு JVPயினர் மூலமாக கண்டியிலும், மாத்தறையிலும் தான் தங்குவதற்கு ஒரு வீடு பார்க்கும்படியும் இந்தவிடயத்தை மிக இரகசியமாக வைத்திருக்கும் படியும் சொன்னார். அதேநேரம் தான் முன்பு கராச்சிக்கு தனது இருப்பிடத்தை மாற்ற விரும்பிய போது சிங்கப்பூருக்குப் போகப் போவதாக வெளியே வதந்தி ஒன்றை பரவ விட்டது போல தற்போதும் தான் சிங்கப்பூருக்கு போகப் போவதாக ஒரு வதந்தியைப் பரப்பி விட்டார்.
அவர் தானே உருவாக்கிவட்ட இந்த வதந்தியே அவரது உயிருக்கு உலை வைக்கும் என அவர் அப்போது நினைக்கவில்லை. இந்த வதந்தி வெளியே பரவியவுடனேயே உமாமகேஸ்வரனை ஒழித்து பாலபுத்தரை தலைமைப் பதவிக்கு கொண்டுவர காத்திருந்தவர்கள் அதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
சிங்கப்பூரில் போயிருந்து கொண்டு இயக்க நடமவடிக்கைகளை கவனிக்கப் போவதாக உமாமகேஸ்வரன் வெளியிட்ட இந்தத் தகவலை இவர்கள் அவர் இயக்கச் சொத்துக்களுடன் மனைவியையும் கூட்டிக் கொண்டு சிங்கப்பூருக்கு தப்பி ஓடப் போகிறார். அதற்கு முன் பாலபுத்தர், மாணிக்கதாசன்; உட்பட பத்துப் பேரை கொலை செய்யப் போகின்றார் என்று கயிறு திரித்துவிட்டார்கள்.
சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் சிங்கப்பூர் செல்வதற்கு உமாமகேஸ்வரன் தங்களிடம் உதவி கேட்டதாகவும், தங்களுக்கிருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி தாங்கள் இரகசியமாக அந்த ஏற்பாட்டை செய்து கொடுக்க ஒத்துக்கொண்டிருப்பதாகவும் கேட்பவர்களுக்கு அவர்கள் நம்பும்படியாக அதி உயர் இரகசியம் ஒன்றை சொல்வது போல் கதை விட்டார்கள்.
உண்மையில் உமாமகேஸ்வரன் ஒரு போதும் சிங்கப்பூரில் சென்று தங்கியிருக்க விரும்பவில்லை. முன்பு இந்தியாவில் பிடிபட்ட ஆயுதங்களைச் சிங்கப்பூரில் வைத்து கப்பலில் ஏற்றியது தொடர்பாகவும் புளொட்டின் பேரில் நடந்த தூள் கடத்தல், அந்நியச்செலாவணி, விவகாரங்கள் தொடர்பாகவும் அவர் சிங்கப்பூர் பொலிசாரால் விசாரிக்கப்பட வேண்டிய ஒரு நபராக இருந்தார். சிறிலங்கா பொலிசைவிட சிங்கப்பூர் பொலிஸ் ஆபத்து மிகுந்தது என்பதும் அவருக்குத் தெரியும். அதனால்தான் சிங்கப்பூர் போவதாக மற்றவர்களை நம்பவைத்துவிட்டு குறிப்பாக சிறிலங்கா அரசாங்கத்தைக் கூட நம்ப வைத்துவிட்டு கண்டியில் அல்லது மாத்தறையில் ஜே.வி.பி.யினரது ஆதரவுடன் ஒரு முஸ்லீம் வியாபாரி போல தங்கியிருக்க விரும்பினார்.
ஆனால் றோவினால் சாவி கொடுத்துவிடப்பட்ட பாலபுத்தரின் ஆதரவாளர்கள் இந்தவிடயத்தில் செய்த கயிறு திரிப்புக்களும் கிளப்பிவிட்ட கதைகளும் உமாமகேஸ்வரனுக்கு மிகவும் விசுவாசமாக இருந்த ராபின், ஆச்சி, ராஜன் போன்றவர்களைக்கூட அவரைக் கொலை செய்யும் அளவிற்கு ஆத்திரப்பட வைத்தது.
இந்த ஆத்திரத்தை தங்களது இலக்கை நோக்கி (உமாவைக் கொல்ல) திருப்பிவிட திட்டமிடப்பட கயிறுதிரிப்பாளர் குழு, முதலில் மலையகப் பொறுப்பாளர் கதிரவனை(திவாகரனை) கொலை செய்யத் திட்டமிட்டது.
ஆனால் மலையகத்திற்குச் சென்று அங்கே வைத்து அவரைக் கொலை செய்ய அவர்களுக்கத் துணிவிருக்கவில்லை. ஜே.வி.பி.யின் பயமிருந்தது. எனவே கொழும்புக்கு அவரை வரவழைத்து அங்கு வைத்து அவரைக் கொல்வதற்கு அவர்கள் காத்திருந்தனர்.
இதற்கிடையில் உமாமகேஸ்வரன் கேட்டுக் கொண்டபடி ஜே.வி.பி.யினரிடம் நடந்த விடயங்களைச் சொல்லி அவருக்குக் கண்டியிலும், மாத்தறையிலும் வீடுகள் பார்த்து எல்லா ஒழுங்குகளையும் செய்து முடித்துவிட்டு இந்தவிடயம் பற்றி உமாமகேஸ்வரனுடன் நேரடியாக கதைப்பதற்காக கதிரவன் நுவரேலியாவிலிருந்து கொழும்புக்கு வந்து கொண்டிருக்கும் போது ரந்தனிகல நீர்த்தேக்கத்துக்கு அண்மையில் அவர் வந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி அவரது காலும், கையும் உடைந்துவிட்டன. இது நடந்தத 1989ம் ஆண்டு யூலை மாதம் 12ம் திகதி.
1989 யூலை மாதம் 16ம் திகதி இரவு தெகிவளையில் உமாமகேஸ்வரன் தங்கியிருந்த வீட்டுக்குள் சிறிலங்கா இராணுவம் புகுந்தது. உமாமகேஸ்வரன் பின்பக்க மதிலால் ஏறிக் குதித்து தப்பி ஒடிவிட்டார். மற்றவர்களைப் போல் மனம் மாறாமல் உமாமகேஸ்வரன் மேல் நம்பிக்கையோடு இருந்த அவரது மெய்க்காப்பளர்களில் ஒருவரான சக்திவேலை மட்டும் இராணுவத்தினர் கைது செய்து சென்றுவிட்டனர்.
இது ஒரு காட்டிக் கொடுப்பு நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இதில் எவ்வளவு உண்மையுள்ளது என்பது தெரியாது.
மதில் பாய்ந்து ஓடிய உமாமகேஸ்வரன் ஆச்சி ராஜன் மற்றும் ராபின் துணையோடு பம்பலப்பிட்டி தொடர்மாடிக் கட்டிடத்திலிருந்த அவருக்கு வேண்டிய ஒருவர் வீட்டில் சென்று தங்கியிருந்தார்.
மறுநாள் 17ம் திகதி காலை தாங்கள் பாதுகாப்பு நிலைமைகளை அறிந்து வருவதாக சொல்லிவட்டு ஆச்சி ராஜனும், ராபினும் வெளியே சென்றனர்.
அன்று மதியம் ஆச்சி ராஜன் மட்டும் திரும்பி வந்து சாப்பிடப் போக வரும்படி உமாமகேஸ்வரனை அழைத்தான்.
அவர் அவனுடன் வெளியே வந்ததும் அந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தின் முன்பிருந்த காலிவீதியால் செல்வது ஆபத்தானது என்றும் பின்புறமாக கடற்கரையோரம் உள்ள வீதி வழியாக செல்லலாம் என்றும் சொல்லி அவரை அழைத்துச் சென்றான்.
அவர்கள் இருவரும் அந்த வீதியில் சிறிது தூரம் சென்ற போது ராபின் உட்பட 5 பேர் அங்கே ஓரிடத்தில் இருந்தார்கள்.
அதைக்கண்ட உமாமகேஸ்வரன் இந்த சனியன்கள் இதில ஏன் நிற்குதுகள் உதுகளுக்குச் சொன்னாலும் விளங்காது என்று பேசிக் கொண்டு அவர்களைக் கடந்து அப்பால் சென்றார்.
ஒரு பத்து மீட்டர் தூரம் அவர் சென்றிருக்கமாட்டார் அதற்குள் முதல்வெடி அவரது முதுகைத் துளைத்தது. ஐயோ என்று அவர் அலற அடுத்தடுத்த வெடிகள் அவரது உடலைத் துளைத்தன. அவர் நிலத்தில் சுருண்டு வீழ்ந்தார். அந்த இடத்திலேயே அவர் கதை முடிந்தது.
பார் தமிழ் தமிழ் என்று பம்மாத்து விட்ட உவன் சாகிற போதும் அம்மா என்று கூப்பிடவில்லை. ஐயோ என்று தான் சொன்னான் என்று அவரை சுட்ட ஒருவன் கத்தினான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக