ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

காந்திதேசத்தின் மறுபக்கம் 26

26
உமாமகேஸ்வரனைக் கொல்வதற்கு ENDLF இன் மூலமாக ஏற்பாடு செய்திருந்த வசந்தன் உரிய காலத்தில் அதைச் செய்து முடிக்காமல் இழுத்தடித்ததால் அவன் மீதும் ENDLF மீதும் றோ அதிகாரிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. எனவே அவர்கள் மாற்று வழி ஒன்றை தேட ஆரம்பித்தார்கள்.

இதற்கென அவர்கள் புளொட்டில் இருந்த உமாமகேஸ்வரன் அதிருப்தியாளர்கள் பலரைக் கொழும்பிலும் தமிழகத்திலும் வைத்து சந்தித்தனர். இந்த அதிருப்தியாளர்களில் பலர் முன்பு பரந்தன் ராசனை வைத்து புளொட்டை உடைத்தது போல் தற்போது பாலபுத்தரை வைத்து புளொட்டை உடைக்க முயலும்படியும் உமாமகேஸ்வரனுடைய தீவிர ஆதரவாளர்கள் மாலைதீவில் மாட்டுப்பட்டு விட்டார்கள் என்றும் தற்போது எஞ்சியிருப்பவர்களும் அதையிட்டு அதிருப்தி கொண்டிருப்பதாகவும் உமாமகேஸ்வரனது தலைமைக்கு எதிராக மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கும் போது நிச்சயமாக உமாமகேஸ்வரன் தனிமைப்பட்டுவிடுவார் என்றும் றோவிற்கு ஆலோசனை சொன்னதாக நம்பப்படுகின்றது. றோவுக்கு இது சரியான ஆலோசனை என்று படவே அவர்கள் அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.


இதற்கிடையில் இந்த விடயம் இந்திய வெளியுறுவுத்துறை அதிகாரி ஒருவர் மூலம் உமாமகேஸ்வரனுக்குத் தெரிய வந்தது. திருமதி இந்திராகாந்தியின் காலத்திலிருந்தே இந்த வெளியுறவுத்துறையில் கடமையாற்றி வந்த இந்த அதிகாரி இலங்கை விவகாரத்தில் தொடர்புள்ளவர். பெரிய அன்பளிப்புக்களைத் தொடர்ந்து வழங்கியதன் மூலம் உமாமகேஸ்வரன் அவரை தனது நண்பனாக்கியிருந்தார். இந்த அன்பளிப்புக்களுக்காகவே அவர் உமாமகேஸ்வரன் விடயத்தில் றோ எடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே பல தடலைகள் அவருக்குத் தெரிவித்திருக்கிறார். அவை ஒரு போதும் பொய்யானமாக இருந்ததில்லை.

எனவே தான் பாலபுத்தரை முன்வைத்து தன்னை அழிக்க றோ மேற்கொள்ளும் புதிய சதி முயற்சியைவிட்டு அவர் அதிக ஆத்திரமடைந்திருந்தார். றோ தன்னுடைய முயற்சியில் முந்துவதற்கு முன் தான் முந்திக் கொண்டு அவர்களை மூக்குடைபடச் செய்ய அவர் விரும்பினார். அதாவது பாலபுத்தரை உடனடியாகக் கொன்றுவிட அவர் தீர்மானித்தார்.


ஆனால் யாரைக் கொண்டு கொல்வது என்பதுதான் அவருக்குப் பிரச்சினையாக இருந்தது. தான் வழக்கமாக மற்றவர்களை கொலை செய்ய ஏவிவிடும், ஆசி ராஜன் மூலமோ இதை செய்விக்க அவர் விரும்பவில்லை. இந்தவிடயம் அரசல் புரவலாக வெளியே வந்தால்கூட அப்போதிருந்த சூழ்நிலையில் அது தனக்கு பெரும் நெருக்கடியைக் கொண்டு வந்து விடும் என்று அவர் பயந்தார். எனவே இயக்கத்துடன் சம்மந்தப்படாத ஆனால் தனக்கு நம்பிக்கைக்குரிய மூன்றாவது நபர் மூலமே இந்தக் காரியத்தை செய்ய வேண்டுமென்று நினைத்தார்.

அந்த மூன்றாவது நபர் JVP ஆக இருந்தால் பொருத்தமானதாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும் என்று அவருக்கத் தோன்றியது. அதனாலேயே அவர் கதிரவனை அழைத்து விசய்ததைச் சொல்லி இது பற்றி துஏP தலைவர்களுடன் பேசுவதற்கு சந்திப்புக்கு ஒழுங்கு செய்யும்படியும் சொன்னார்.

துஏP றோவின் மீது கடுமையான விரோத போக்கைக் கொண்டிருந்தது. பாலபுத்தரை றோவின் பிரதான ஏஜெண்டாக அவர்களுக்கு அடையாளம் காட்டி அவர் மூலம் தனக்கும் JVPக்கும் கூட ஆபத்தென்று சொல்லி அவர்களைக் கொண்டு அவரை கொழும்பில் வைத்தோ அல்லது தந்திரமாக நுவரேலியாவிற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்தோ கொன்று விடலாம் என உமாமகேஸ்வரன் திட்டமிட்டார்.

இது விடயமாக 1989ம் ஆண்டு மேமாதம் 15ம் திகதி நுவரேலியா நகரத்தின் புறநகர் பகுதியான ஹாவ எலியவிலுள்ள ஒரு சிங்கள இடதுசாரி பிரமுகரின் வீட்டில் JVP பொதுச்செயலாளர் உபதிஸ்ஸசம நாயக்காவை சந்திக்க ஏற்பாடாயிருந்தது.

அதற்கிடையில் மே மாதம் 13ம் திகதி உமாமகேஸ்வரன் கொஞ்சமும் எதிர்பார்க்காத பாரிய சம்பவம் ஒன்று முள்ளிக்குளத்தில் நடந்தது.

அன்று புளொட்டினது முள்ளிக்குள முகாம் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் சங்கிலி, வசந்தன் உட்பட தமிழ் நாட்டில் புளொட்டினது முகாம்கள் பொறுப்பாக இருந்த பல பொறுப்பாளர்களும் முன்னணி உறுப்பினர்களுமாக 33 பே;h கொல்லப்பட்டனர். இதில் உமாமகேஸ்வரனுக்கு வேண்டியவர்கள் வேண்டப்படாதவர்கள் என்று இரண்டு தரப்பினரும் அடங்கியிருந்ததால் உமாமகேஸ்வரனைப் பொறுத்தவரை இந்த இழப்புக்களால் ஏற்பட்ட தாக்கம் என்பது ஒன்றையொன்று சம்மந்தப்படுத்துவதாகவே இருந்தது. வசந்தன் உட்பட காலைச் சுற்றி கடிக்க வந்த பாம்புகள் போல் சுலபத்தில் தூக்கி எறியவோ, கை வைக்கவோ முடியாமல் உடனிருந்து தொல்லை தந்து கொண்டிருந்த பலர் இதில் கொல்லப்பட்டுவிட்டது, ஓரளவுக்கு அவருக்கு நிம்மதியைத் தந்தது. சங்கிலி உட்பட அவருக்கு விசுவாசமான சிலரது இழப்பு வருத்தத்தைத் தந்தாலும் புளொட்டைக் கலைத்து விடுவதென்ற தனது முன்னைய முடிவை இந்தச் சம்பவத்தை காரணமாக வைத்து செயற்படுத்த அவர் முடிவு செய்தார்.

ஆனால் முள்ளிக்குளத்தில் அகப்படாது குஞ்சுக்குளம், வவுனியா, கொழும்பு மட்டக்களப்புப் பகுதியில் இருந்த புளொட் உறுப்பினர்கள் மத்தியில் இத்தாக்குதல் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் உமாமகேஸ்வரனை பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள். அவர் இந்தியா கொடுத்த ஆயுதங்களை மாலைதீவில் கொண்டுபோய் முடக்கியபடியால்தான் முள்ளிக்குள முகாம் வீழ்ந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். மறுபடியும் இந்தியாவிடம் சென்று பேசி ஆயுதம் பெற்று புலிகளைப் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று அவர்கள் கொரிக்கை விடுத்தனர்.

ஆனால் உமாமகேஸ்வரனைப் பொறுத்தவரை புலிகளைத் திருப்பித் தாக்கி பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வரவில்லை. புலிகள் புளொட் முகாமை அழித்ததைத் தவறு என்று நியாயப்படுத்தும் அளவுக்கு புளொட் நேர்மையான முறையில் தமிழ் மக்களுடைய போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்ற உணர்வே அவரிடம் அக்காலகட்டத்தில் இருந்தது. நான் எற்கனவே எழுதியது போல இக்கால கட்டத்திலே அவருக்கு சுடலை ஞானம் ஏற்பட்டிருந்தத. புளொட் என்பது சீரழிந்து போன திருத்த முடியாத அமைப்பு என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.

இதற்கிடையில் இந்தத் தாக்குதல் பற்றிய செய்தியை அறிந்த றோ காயை சரியாக நகர்த்தி உமாமகேஸ்வரனை வீழ்த்தத் திட்டமிட்டது. அதன்படி உமாமகேஸ்வரன் வந்து தங்களுடன் பேசினால் தாங்கள் புளொட்டிற்கு ஆயுதம் வழங்குவோம் என்ற ஒரு எழுதப்படாத உறுதி மொழியை புளொட்டிற்குள் பரப்பிவிட்டனர். தங்களால் ஏமாற்றப்பட்ட உமாமகேஸ்வரன் ஒரு போதம் தங்களிடம் பேசுவதற்கு வரமாட்டார் என்பது அவர்களுக்கத் தெரியும். ஆனால் அப்போதிருந்த நெருக்கடியான உhலகட்டத்தில் தங்களது கோரிக்கையை அவர் தட்டிக்கழித்தால் நிச்சயமாக புளொட்டிற்குள் உள்ளவர்களே அவரை கொல்லத் துணியுமளவிற்கு நிலைமை வரும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள்.


இதற்காக அவர்கள் பாலபுத்தரை அழைத்துப் பேசியதாகவும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது பாலபுத்தரின் நண்பரான லண்டன் கனவான் ஒருவர் உடனிருந்ததாகவும் அறியப்படுகின்றது.

பாலபுத்தர் சென்னையில் பேசிக் கொண்டிருக்கும் போது முள்ளிக்குளம் தாக்குதல் அதிருப்தி கொண்ட உறுப்பினர்களது குழு ஒன்று கொழும்பில் உமாமகேஸ்வரனைச் சந்தித்து அவரை றோவுடன் சென்று பேசி ஆயுதம் வாங்க வேண்டும், புலிகளை எதிர்த்துத் தாக்க வேண்டும் என்று வற்புறுத்தியது. ஏனென்றால் சாதாரணமாக உமாமகேஸ்வரனது முடிவுகளை எதிர்த்து அவருக்கு நேருக்கு நேர் நின்று யாரும் வாதாடுவதில்லை. ஆனால் அன்றைய சந்திப்பில் உமாமகேஸ்வரனை நிர்ப்பந்திக்கும் எதிர்க்கும் குழவின் குரலும் எதிர்பும் பலமாக இருந்தது.

ஆனால் உமாமகேஸ்வரன் அந்த வற்புறுத்தல்களுக்கு பயந்து போகவில்லை. “நீங்கள் கேட்கின்றபடி றோவிடம் வந்து பேசவும் முடியாது, ஆயுதம் வாங்கவும் முடியாது என்றும் புலிகளுக்கு எதிராக பழிக்குப் பழி யுத்தம் ஒன்றை நான் நடத்த தயாரில்லை” என்றும் அவர் கண்டிப்பாகச் சொன்னார்.

“அப்படியென்றால் நீங்கள் எங்களை அநியாயமாகச் சாகச் சொல்கிறீர்களா?” என்று சந்திக்க வந்தவர்களை ஆத்திரத்தோடு கேட்டார்கள்.

நான் உங்கள் யாரையும் சாகச் சொல்லிவில்லை நான் சொல்கிறதைக் கேட்டு என்னோடு நிற்கிறவர்கள் நிற்கலாம். அவைக்கு என்னால் பாதுகாப்பு தரமுடியும் மற்றவை இயக்கத்தைவிட்டுப் போங்கோ, புளொட் கலைச்சாச்சு, புளொட் என்று சொல்லிக் கொண்டு ஒருத்தரும் திரிய வேண்டாம். என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு உமாமகேஸ்வரன் அங்கிருந்து போய்விட்டார்.

சந்திக்க வந்த அதிருப்தியாளர்களுக்கு ஆத்திரம் அடக்க முடியாமல் போய்விட்டது. உமாமகேஸ்வரனை வாய்க்கு வந்தபடி திட்டடினார்கள். மட்டக்களப்புப்பிரிவு தாங்கள் இயங்கப் போதில்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது. மற்றவர்கள் நாங்கள் பாலபுத்தரை பிடிப்பம், அவரை புளொட்டுக்கு தலைவராக்குவம், உவர் (உமா) என்ன செய்கிறார் பார்ப்பம் என்று கறுவிக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை: