முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரபல வழக்கறிஞர் ''தடா'' சந்திரசேகர் இந்த மனுக்களை இன்று தாக்கல் செய்தார். அப்போது, மனுக்கள் மீது அவசரம் கருதி உடனே விசாரணை நடத்த வேண்டும் என்று சந்திரசேகர் கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பால்.வசந்தகுமார், நாளை விசாரணை தொடங்கும் என்று அறிவித்தார்.
இதையடுத்து இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளை முதல் உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இதில் பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடுகிறார்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் சார்பில் மும்பையை சேர்ந்த பிரபல வழக்கறிஞர்கள் யுக்முகுக் வாகித் சவுத்திரி, காலின் கான்சிலிஸ் ஆகிய வாதாடுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக