முருகன்இ சாந்தன்இ பேரறிவாளன் ஆகியோர் விடுதலையாகும் வரை போராட்டம் ஓயாது என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ள முருகன்இ சாந்தன்இ பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்த தீர்ப்பு வந்ததை அடுத்து பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில்இ மூவரின் மரண தண்டனைக்கு இடைக்காலத்தடையை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. 20 ஆண்டு காலமாக நாம் தொடர்ந்து நடத்தி வரும் இந்த நீண்ட நெடிய போராட்டத்தில் முதற்கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது.
சட்டப்பேரவையிலும் இன்று மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நாம் தொடர்ந்து மக்கள் இயக்கத்தை கட்ட வேண்டும். தொடர்ந்து போராட வேண்டும் என்று வேண்டுக் கொள்கிறேன்.
இந்த மூவரும் விடுதலையாகும் வரை நம்முடையை போராட்டம் ஓயாதுஇ ஓயாதுஇ ஓயாது என்றார் பழ.நெடுமாறன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக