மூவர் உயிரைக் காப்பாற்றக்கோரி காஞ்சிபுரத்தில் 27 அகவையுடைய செங்கொடி (மக்கள் மன்றம் இயக்கத்தைச் சேர்ந்தவர்) வட்டாட்சியர் அலுவலகம் முன் தூக்குதண்டனையை இரத்து செய்யக்கோரி தீக்குளித்துள்ளார்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27). இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார்.
28.08.2011 மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார். இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி. இந்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.
21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையிட்டு தூக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம் பெண் தீக்குளித்து தன்னுயிரை தியாகம் செய்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் அளவற்ற வேதனையும் அடைந்தேன்.
முதல்வரிடம் முறையிடுவது, நீதி மன்றத்தில் வாதாடுவது, மக்களை திரட்டிக் குரல் கொடுப்பது ஆகிய வழிகளில் நாம் இணைந்து ஒன்று பட்டுப் போராடுவதின் மூலமே மூவரின் உயிர்களை காக்க முடியும். நம்மை நாமே அழித்துக் கொள்வதின் மூலம் அதை செய்ய முடியாது என்பதை உணருமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.
3 உயிர்களை காக்கத் தொடர்ந்து போராடுவதற்கு பதில் நமது உயிர்களை அழித்துக் கொள்வது என்பது நமது நோக்கத்திற்கே முரணானதாகும். இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன்.
000003 பேரின் தூக்கை ரத்து செய்யக் கோரி கோவையில் இரயில் மறியல் 660 பேர் கைது
பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி கோவையில் நடந்த இரயில் மறியலில் 660 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 பேருக்கு வரும் 9ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் இரயில் மறியல் மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு வகையில் நடைபெற்று வருகின்றன.
கோவையில் இன்று நடந்த இரயில் மறியல் போராட்டத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் பெரியார் திராவிடர் கழகம் நாம் தமிழர் இயக்கம் ம.தி.மு.க. உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த இரயில் மறியலில் ஈடுபட்ட 660 பேர் கைது செய்யப்பட்டனர்.
0000
4 வது நாளாக பெண் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னையில் 4வது நாளாக பெண் வழக்கறிஞர்கள் 3 பேர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் ஆகியோர் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இன்று 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
0000
யாரும் உயிரை மாய்க்க வேண்டாம் - பழ.நெடுமாறன்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று உயிர்களைக் காக்க வேண்டும் என்பதற்காக யாரும் முரணான செயலில் ஈடுபட வேண்டாம் என்று 3 தமிழர் உயிர்காப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம்பெண் தீக்குளித்து தன்னுயிரைத் தியாகம் செய்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் அளவற்ற வேதனையும் அடைந்தேன்.
முதலமைச்சரிடம் முறையிடுவது, நீதிமன்றத்தில் வாதாடுவது, மக்களைத் திரட்டிக் குரல் கொடுப்பது ஆகிய வழிகளில் நாம் இணைந்து ஒன்றுபட்டுப் போராடுவதின் மூலமே மூவரின் உயிர்களைக் காக்க முடியும்.
நாம்மை நாமே அழித்துக் கொள்வதின் மூலம் அதைச் செய்ய முடியாது என்பதை உணருமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். 3 உயிர்களைக் காக்க தொடர்ந்து போராடுவதற்குப் பதில் நமது உயிர்களை அழித்துக் கொள்வது என்பது நமது நோக்கத்திற்கே முரணானதாகும். இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென பழ.நெடுமாறன் வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார்.
0000
சென்னையைத் தொடர்ந்து சேலத்திலும் நான்கு பெண் வக்கீல்கள் உண்ணாவிரதத்தில் குதித்தனர்
சேலம்: சென்னையைத் தொடர்ந்து சேலத்திலும் பெண் வக்கீல்கள் நான்கு பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் பரபரப்பு மேலும் கூடியுள்ளது.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கில் போடக் கூடாது என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் கயல் என்கிற அங்கயற்கண்ணி, சுஜாதா மற்றும் வடிவாம்பாள் ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்பேட்டில் உள்ள தனியார் இடத்தில் இவர்கள் மூன்று பேரும் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களுடன் மேலும் சிலரும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலத்தில் நான்கு பெண் வக்கீல்கள் இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். வக்கீல்கள் தமயந்தி, கீதா, அறிவுமதி, பிரபா ஆகியோர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். இதனால் சேலத்தில் பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள், மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் சிலர் உள்ளே நுழைய முயன்றனர்.இதையடுத்து போலீஸார் கேட்டை மூ்டினர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதட்ட நிலை உருவானது.
இந்த நிலையில் செப்டம்பர் 9ம் தேதி முதல் காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தஞ்சை மாவட்ட வக்கீல்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கில் போடக் கூடாது என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் கயல் என்கிற அங்கயற்கண்ணி, சுஜாதா மற்றும் வடிவாம்பாள் ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்பேட்டில் உள்ள தனியார் இடத்தில் இவர்கள் மூன்று பேரும் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களுடன் மேலும் சிலரும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலத்தில் நான்கு பெண் வக்கீல்கள் இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். வக்கீல்கள் தமயந்தி, கீதா, அறிவுமதி, பிரபா ஆகியோர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். இதனால் சேலத்தில் பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள், மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் சிலர் உள்ளே நுழைய முயன்றனர்.இதையடுத்து போலீஸார் கேட்டை மூ்டினர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதட்ட நிலை உருவானது.
இந்த நிலையில் செப்டம்பர் 9ம் தேதி முதல் காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தஞ்சை மாவட்ட வக்கீல்கள் சங்கம் அறிவித்துள்ளது.
0000
மூன்று தமிழர்களை விடுவிக்க டெல்லி ஜந்தர்மந்தரில்10 பேர் சாகும் வரை உண்ணாவிரதம்
டெல்லி: வேலூர் சிறையில் தூக்குக் கயிற்றின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள மூவரைக் காப்பாற்றக் கோரி டெல்லியில், தூக்குத் தண்டனைக்கான மாணவர் அமைப்பு சார்பில் 10 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்த இவர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட யாரையும் தூக்கில் போடக் கூடாது. தூக்குத் தண்டனையை இந்தியாவிலிருந்து ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்த திடீர் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல்-அண்ணா சாலை ஸ்தம்பிப்பு
இதற்கிடையே, சென்னையில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இன்று அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் பெரும் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு இன்று காலை மாணவ, மாணவியர் பெரும் திரளாக கூடினர். அங்கிருந்து ஊர்ர்வலமாக ஆளுநர் மாளிகைக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். ஊர்வலம் போகக் கூடாது என்று அவர்கள் மாணவ, மாணவியரை தடுத்து நிறுத்தினர். ஆனால்அதை மீறி அவர்கள் செல்ல முயன்றதால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் அப்படியே அண்ணா சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
இதநால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்த இவர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட யாரையும் தூக்கில் போடக் கூடாது. தூக்குத் தண்டனையை இந்தியாவிலிருந்து ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்த திடீர் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல்-அண்ணா சாலை ஸ்தம்பிப்பு
இதற்கிடையே, சென்னையில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இன்று அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் பெரும் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு இன்று காலை மாணவ, மாணவியர் பெரும் திரளாக கூடினர். அங்கிருந்து ஊர்ர்வலமாக ஆளுநர் மாளிகைக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். ஊர்வலம் போகக் கூடாது என்று அவர்கள் மாணவ, மாணவியரை தடுத்து நிறுத்தினர். ஆனால்அதை மீறி அவர்கள் செல்ல முயன்றதால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் அப்படியே அண்ணா சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
இதநால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
0000
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக