அமெரிக்காவில் இருந்து திரும்பிய சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்றுமாலை கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை அழைத்துப் பேசியுள்ளார்.
இதன்போது விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கை தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள், புனர்வாழ்வு முகாம்களில் உள்ள வசதிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, ரஸ்யா, சீனா, அவுஸ்ரேலியா, கனடா, இந்தியா உள்ளிட்ட 30 இற்கும் அதிகமான நாடுகளின் இராஜதந்திரிகளும், ஐ.நா மற்றும் அதன் முகவர் அமைப்புகளினது பிரநிதிகளும், அனைத்துலக செஞ்சிலுவைக் குழு, புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பு, உலக சுகாதார நிறுவனம் ஆகிய அனைத்துலக அமைப்புகளினது பிரதிநிதிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் சிறிலங்கா இராணுவ புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க, முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
சிறிலங்கா அரசதரப்பு கடந்த இரண்டு வாரங்களில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்காக நடத்தியுள்ள மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.puthinappalakai.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக