திருவாரூரிலிருந்து ஒரு பேருந்து பயணிகளுடன் மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது மயிலாடுதுறை அருகே முடிகொண்டான் என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் இருந்த திருமலைராயனாறு ஆற்றில் கவிழ்ந்தது.
இதில் பஸ் நீரில் மூழ்கியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ் ஆற்றில் பாய்ந்ததைப் பார்த்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ஆற்றில் குதித்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்த 30 பேர் திருவாரூர் மற்றும் நன்னிலம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1 கருத்து:
தாங்களின் வலைப்பதிவுக்கு நன்றி, திஸ் ஈஸ் கிரேட்.
திருவாரூர்
கருத்துரையிடுக