சமச்சீர் பாடப்புத்தகங்களை ஆராய தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் 8 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்த குழுவில் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய முன்னாள் இயக்குனர் பாலகிருஷ்ணன், சென்னை லேடி ஆண்டாள் மெட்ரிக் பள்ளி முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி, கோபாலபுரம் ஏடிபி பள்ளி நிறுவனர் சி.ஜெயதேவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவன பேராசிரியர் பி.கே.திரிபாதி, பத்மா சேஷாத்ரி பள்ளி இயக்குனர் ஒய்.ஜி.பார்த்தசாரதி, பேராசிரியர் அனில் சேத்தி, பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வசுந்தரா தேவி ஆகியோரும் குழுவில் உள்ளனர்.
இந்த குழு சமச்சீர் பாடப்புத்தகத்தை ஆராயந்து 3 வாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இதையடுத்து சமச்சீர் கல்வியை தொடர்வது பற்றி சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கிறது.
இதையடுத்து ஒரு வாரத்திற்குள் விசாரணை முடித்து சமச்சீர் கல்வியை தொடர்வது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
http://tamil.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக