கனிமொழி தவிர கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத் குமார் ரெட்டியும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இவரது மனு மீதும் அன்றே தீர்ப்பளிக்கப்படுகிறது.
ஜூன் 4ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. எனவே 3ம் தேதியே கனிமொழி, சரத்குமார் மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகள் யாருக்குமே ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த ஜாமீன் மனுக்களையும் டெல்லி உயர்நீதிமன்றம்தான் தள்ளுபடி செய்திருந்தது. எனவே கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக