வெள்ளி, 29 ஏப்ரல், 2011

ரூ.2 லட்சம் கோடி சொத்து சாய்பாபா அறக்கட்டளைக்கு ஒரு வாரத்தில் புதிய தலைவர்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்ட சத்ய சாய்பாபா கடந்த 24-ந் தேதி மரணம் அடைந்தார்.

அவர் தலைவராக இருந்த சத்யசாய் அறக்கட்டளைக்கு உலகம் முழுவதிலும் சுமார் 2 லட்சம் கோடி அளவுக்கு சொத்துக்கள் உள்ளன. தற்போது அறக்கட்டளை உறுப்பினர்களாக சென்னை தொழில் அதிபர் வேணு சீனிவாசன், பகவதி, நாகானந்த், சக்ரவர்த்தி, எஸ்.வி. கிரி, இந்துலால்ஷா மற்றும் சாய்பாபாவின் சகோதரர் மகன் ரத்னாகர் ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் ஒருவரை ஒரு வாரத்தில் சாய்பாபா அறக்கட்டளை தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சாய்பாபா சகோதரர் மகன் ரத்னாகர், தொழில் அதிபர் சீனிவாசன் ஆகியோரில் ஒருவர் அறக்கட்டளை தலைவராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சாய்பாபா ஆசிரம நிர்வாகிகள் சிலர் கூறும் போது,

சாய்பாபா அறக்கட்டளை தலைவர் ஆவதற்கு தொழில் அதிபர் வேணுசீனிவாசனுக்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது. அவருக்குதான் வெளிநாட்டு சாய்பாபா பக்தர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

இதேபோல் சாய்பாபாவுக்கு நெருக்கமான அனைவருடனும் சீனிவாசன் நெருங்கிய நட்பு வைத்துள்ளார். அவர் அறக்கட்டளை தலைவரானால் சாய்பாபா ஆசிரம முன்னேற்றத்திற்கு அரும்பாடுபடுவார். சாய்பாபாவின் போதனைகளை உலகம் முழுவதிலும் எடுத்துச் செல்வார். இதனால் அவர்தான் தலைவராவார் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.

கருத்துகள் இல்லை: