ஐ.நா நிபுணர்கள் குழு தெரிவித்துள்ள பரிந்துரைகளில் சர்வதேச விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இவ்வறிக்கையை இலங்கை அரசு முற்று முழுதாக மறுத்துள்ளது. எந்த ஒரு விசாரணைக்கும் தாம் முகம் கொடுக்கத் தயார் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் அனைத்துலக விசாரணைக்கு தயாராக இருப்பதாக பிரேம் ரெஜி என்று அழைக்கப்படும் ரெஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தமிழர் தாயகத்தில் நடந்த கொடுமைகள் பதிவாக்கி வெளியிட்டமை பாராட்டத்தக்கது. தமிழ் மக்கள் மத்தியில் தமக்காக நீதி கிடைக்கும் அவையாக அனைத்துலக சமூகம்இருக்கின்றது என்ற நம்பிக்கையை உயிர்ப்பித்துள்ளது. அதே வேளை ஐக்கிய நாடுகளும் அனைத்துல சமூகமும் தாம் ஏற்கனவே விட்ட தவறுகளை மீண்டும் விடக்கூடாது என்பதே எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
ஐ. நா மற்றும் அனைத்துலக சமூகம் மீண்டும் கடந்தகாலத் தவறுகளைச் செய்யக்கூடாது போரின் இறுதிக்கட்டங்களில் தமிழர் தரப்பிற்குப் பெரும் அழுத்தங்களை ஐக்கிய நாடுகளும் அனைத்துலக சமூகமும் இந்தியாவும் செலுத்தின. மேலும்இ சிறிலங்கா அரசின் இனவாதப்பரப்புரைகளைச் செவி மடுத்தன. இதனால் பொதுமக்களின் உயிர் இழப்புக்களைத் தடுக்கமுடியாதநிலையில் ஐக்கிய நாடுகள் சபை இருந்தது. இதனால் பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்டனர். இதனை ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போரின் இறுதிக்கட்டங்களிலும் அதன் பின்னரும் அனைத்துலகம்இ இந்தியாஇ ஐக்கிய நாடுகள் சபைபக்கசார்பாக நடந்து கொண்டது போலத் தற்போதும் நடந்து கொள்ள மாட்டாது என எதிர்பார்க்கிறோம். சுதந்திரமானதும் பக்க சார்பில்லாததுமான அனைத்துலக விசாரணைக்குழு ஒன்றின் மூலம்விசாரணைகள் தொடங்கப்பட வேண்டியது அவசியம். அதன் மூலம் தான் தமிழர்களுக்கான நீதி கிடைப்பதுடன் எதிர்காலத்தில் தமிழர் தாயகத்தின் பாதுகாப்பிற்கும் வழிபிறக்கும்.
விடுதலைப்புலிகள் அனைத்துலக விசாரணைக்கு முகம் கொடுக்க அணியமாக உள்ளனர்:
தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலக மட்டத்திலான விசாரணை ஒன்றிற்கு ஒத்துழைப்புகொடுக்கத் தயராகவே இருக்கின்றார்கள் என அவர்கள் கூறியுள்ளார்கள். உண்மையில் இது தொடர்பாகஏற்கனவே அவர்கள் நிபுணர் குழுவிற்குக் கடித மூலம் ஒத்துழைப்பதற்கான தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்கள். விடுதலைப் புலிகள் தம்மீதான குற்றச்சாட்டுக்களை நியாயமான முறையில்எதிர்கொள்ளவே விரும்புகின்றார்கள்.
போரின் இறுதிக் கட்டங்களில் பொதுமக்களை அனைத்துலகப் பாதுகாப்புடன் ஒப்படைக்க அல்லதுஅவர்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்ல விடுதலைப்புலிகள் விருப்பம் தெரிவித்திருந்தார்கள்.அவர்களின் பாதுகாப்புக்கு அனைத்துலகத்தின் உறுதிமொழி ஒன்றினைக் கேட்டிருந்தார்கள். ஆனால்அனைத்துலகம் சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது.
சிங்கள அரசிடம் பொதுமக்களைச்செல்ல அனுமதிப்பதன் மூலம் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை விடுதலைப்புலிகள் முன்பே அறிந்திருந்தார்கள். அவர்கள் நினைத்தது போலத்தான் இறுதியில் எல்லாம் நடந்தது.விடுதலைப்புலிகள் ஏன் மக்களைச் சிறிலங்கா அரசிடம் ஒப்படைக்கத் தயக்கம் காட்டினார்கள் என்பதற்கான காரணத்திற்கும் நியாயத்திற்கும் அதன் பின்னர் சிங்கள அரசு அவர்களைக் கொடூரமாக நடத்திய விதம் சாட்சியாக இருக்கின்றது.
தமிழர் தாயகத்தைப புலம்பெயர் மக்களால் கட்டி எழுப்ப முடியும்:
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் மக்கள் சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவிக்கவும் தமது தேவைகளைத் தாமே நிறைவு செய்யும் இயல்பு நிலை தோற்றுவிக்கப்படவேண்டும். அனைத்துலக சமூகத்தின் ஈடுபாட்டோடு இயல்பு நிலை தோற்றுவிக்கப் படவேண்டும். அதன் பின்னர்புலம்பெயர்மக்களும் தாயக மக்களும் தமது பிரதேசங்களைத் தாமாகவே கட்டி எழுப்புவார்கள்.அப்படியான சூழலில் சனநாயக முறையில் தமக்கு என்ன தீர்வு தேவை என்பதனை அவர்களே தீர்மானிப்பார்கள். இதனை அடைய அனைத்துலக சமூகம் வழிசமைக்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும்:
சிறிலங்கா அரசிடம் இருந்து எந்தவொரு சூழலிலும் தமிழ் மக்களிற்கான நீதியை எதிர்பார்க்க முடியாது.இப்போது இலட்சக்கணக்கான உயிர்களைக் கொடுத்த தமிழ் இனம் அனைத்லுகத்திடம் நீதியை வேண்டிநிற்கின்றது. பாரபட்சம் அற்ற சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணையினைக் கேட்டு நிற்கின்றது.வடக்கு கிழக்கில் சிங்கள அரசின் இராணுவ ஆட்சியினை நீக்கி அங்கு அனைத்துலக கண்காணிப்பின் கீழ் ஓர் இயல்பு நிலையினை உருவாக்குவதற்கு உதவுமாறு அழைப்பு விடுக்கிறது.
தமது பிரதேசத்தைத்தாமே கட்டி எழுப்பக் கூடிய வாய்ப்பு ஒன்றினை எதிர்பார்த்து நிற்கின்றது. தமக்கு எவ்வகையான தீர்வுதேவை என்பதனைத் தமிழ் மக்கள் தீர்மானிப்பதற்கு உரிய சூழலை ஏற்படுத்தித் தரப்படவேண்டும்.
இவற்றை அனைத்துலகம் செய்து கொடுக்கத் தவறுமேயானால் அல்லது அசட்டையாகஇருக்குமேயானால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் எதிர்காலம் பேரிழப்புக்கு உள்ளாகிவிடும். இதனையே 2008 இலும் 2009 இலும் நாங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் தெரிவித்திருந்தோம்.
தமிழ் நாட்டு உறவுகளின் பங்களிப்பு முழுமையாகத் தேவை:
நிபுணர் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த உலகத் தமிழர்களின் அழுத்தங்கள் அவசியம். குறிப்பாகதமிழ் நாட்டு உறவுகளின் பங்களிப்பே இப்போது அதிகம் தேவைப்படுகின்றது. தமிழ் நாட்டு மக்கள்இ இந்தியா மற்றும் உருசிய நாடுகளுக்கு அழுத்தங்களைக் கொடுத்து அவர்களைச் சம்மதிக்க வைக்க முடியும்.எட்டுக் கோடி மக்களின் ஒருமித்த குரலை எந்தவொரு அரசும் இலகுவாகப் புறக்கணிக்க முடியாது.
ஆகவே தமிழகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்இ ஊடகங்கள் ஆகியவற்றின் பங்களிப்பும்அழுத்தங்களும் இந்தியாவின் தீர்மானத்தினை நிபுணர் குழுவிற்குச் சாதகமாக எடுக்க வைக்க வேண்டும்.இந்திய அரசு மென்மேலும் ஈழத்தமிழர்களுக்குத் கடும்துன்பம் விளைவிப்பதனை நிறுத்தி நேர்மையுடன்செயற்படவேண்டும்.
புலம்பெயர் வாழ் மக்களே:
எமது இனத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கும்இ எமது இனம் இன அழிப்பிற்கு உள்ளாகிக்கொண்டிருக்கின்றது என்பதற்கும் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையே சாட்சி. இந்த அறிக்கை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகவே பார்க்க முடியும்.
ஆகவே இந்த ஆவணத்தை மையமாக வைத்து எம் இனத்திற்கு நீதியும் விடுதலையும் வேண்டி அனைத்துலக ரீதியாக வெகுசன எழுச்சியை உருவாக்க வேண்டும் அதன் மூலம் சம்பந்தப்பட்டோர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படவேண்டும்.
நன்றி
கே.பி.றெஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக