வியாழன், 28 ஏப்ரல், 2011

நிபுணர் குழு அறிக்கைக்கு பிரித்தானியா முழுமையான ஆதரவு: குறற்ச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைக்கும் வலியுறுத்து

இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்பட வேண்டுமாயின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சரியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும் என சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியா, ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை பதிலளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.நிபுணர் குழு அறிக்கை சுயாதீனமானதுமான விசாரணைகளை வலியுறுத்தி நிற்பதாகத் தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதுடன் நிபுணர் குழுவினால் சுமத்தப்பட்டுள்ள பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதும் அவசியமானதுஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு பிரித்தானியா பூரண ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: