சனி, 30 ஏப்ரல், 2011

இந்த ஆண்டு முடிவுக்குள் முன்னாள் போராளிகள் அனைவரும் விடுதலை

தடுப்பு முகாம்களில் எஞ்சியுள்ள 4092 முன்னாள் போராளிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு அமைச்சின் செயலர் திசநாயக்க கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

“இறுதிக்கட்டப் போரின்போது போது 11,898 முன்னாள் போராளிகள் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 6528 பேர் இதுவரையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்களுக்கு 9 புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது.

அனைவரையும் ஒரேதடவையில் விடுவிக்க முடியாது. கட்டம் கட்டமாகவே விடுதலை செய்ய முடியும்.

அடுத்த மாதம் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சுமார் 500 பேர் விடுவிக்கப்படவுள்ளனர்.

தற்போது தடுப்பிலுள்ள 4092 முன்னாள் போராளிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு விடுவர்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: