வெள்ளி, 29 ஏப்ரல், 2011

நிபுணர் குழு அறிக்கை: ஜனாதிபதியை கைது செய்ய முடியும். ஜனாதிபதி சட்டத்தரணி

ஐக்கியனாடுகள் அறிக்கையினை வைத்து சிறிலங்கா தலைவர்களை கைது செய்ய முடியும் என இலங்கையின் பிரபல ஜனாதிபதி சட்டத்தரணி விஜெதாஸ பிபிசி இற்கு கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையானது அதனை தயாரித்தவர்கள் அதிகாரங்கள் இல்லாதவர்களாக இருக்கலாம் ஆனால் அறிக்கை மிகவும் சக்திவாய்ந்த தொன்றாக இருக்கின்றது. இந்த அறிக்கையினை வைத்து வெளினாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள், உள்ளூர் நீதிமன்றங்களின் உதவியுடன் பிடியாணை பிறப்பிக்க முடியும். அவ்வாறு பிடியாணை பிறப்பித்தால் இலங்கையின் அரசியல் தலைவர்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் என்போர் வெளினாடுகளுக்கு செல்லும் வேளை கைது செய்யப்படலாம். அதற்கான சக்தியினை நிபுணர் குழு அறிக்கை கொண்டுள்ளது எனவும் பிபிசி சிங்கள சேவைக்கு கூறியுள்ளார்.
இந்த அடிப்படையில் சிறிலங்கா அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு எதிர்காலத்தில் வெளினாடுகள் செல்வது சவாலானதொன்றாகவே காணபப்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ கூறியுள்ளார்

1 கருத்து:

ராஜ நடராஜன் சொன்னது…

சட்டத்தரணியின் கருத்து எத்தனை வலுவானதென பார்ப்போம்!