செவ்வாய், 26 ஏப்ரல், 2011

நிபுணர்குழுவின் அறிக்கையை அப்படியே வெளியிட்டது ஐ.நா

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா வெளியிட்டுள்ளது.

ஐ.நாவின் இணையத்தளத்தில் இந்த அறிக்கை நியுயோர்க் நேரப்படி நேற்று மாலை(சிறிலங்கா நேரப்படி இன்று அதிகாலை) வெளியிடப்பட்டது.

மொத்தம் 216 பக்கங்களை உள்ளடக்கிய இந்த அறிக்கையின் முக்கியமான உள்ளடக்கங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

இந்த அறிக்கையில் போர் வலயத்தில் சிறிலங்காப் படைகள் தமது ஆட்டிலறி நிலைகளை அவ்வாறு மாற்றியமைத்த தாக்குதல்களை நடத்தினர் என்பது குறித்த பல வரைபடங்களும், அவற்றினால் தாக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் வாழ்விடங்கள் பற்றிய செய்மதிப் படங்களும், எறிகணை வீச்சினால் சிதைந்து கிடக்கும் உடல்களைக் காண்பிக்கும் ஒளிப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையை இங்கே அழுத்தி முழுமையாகப் பார்வையிடலாம்.

http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf

கருத்துகள் இல்லை: