இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் இலங்கைப் பணியாளர்களை பாகாக்க வேண்டியதன் அவசியத்தை அந்த அமைப்பு மீண்டும் இலங்கைக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் மே மாதம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக பாரிய போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்தவ விடயம் குறித்து அரசாங்கம் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்களில் ஒன்றாகும் என அமைப்பின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இடையறா சேவையை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, போராட்டங்கள் நடத்தப்படாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ள அதேவளை, பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தப்படும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் எதிர்வரும் மே தினத்தில் பாரியளவில் மக்கள் அணிதிரள வேண்டுமென அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களிடம் பகிரங்கக் கோரிக்கை விடுத்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக