
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மே 12 முதல் மே 18 வரையிலான நாட்கள் ஒரு துயர் நிறைந்த நாட்களாகும். சிறீலங்கா இனவெறி அரசானது உலகத்தின் கண்களுக்கு முன் எம் இனத்தின் மீது, இனப்படுகொலையின் அதி உச்ச கொடூரங்களை நடாத்திய கொடிய நாட்களாகும்.
இந்த நாட்களை நினைந்து மே 12 முதல் நினைவேந்தல் வாரமாக முன்னெடுக்கவும்- மே 18ஐ தமிழ் தேசிய துக்க நாளாக கடைப்பிடிக்கவும் உலகத் தமிழ் சமூகம் தயாராகி வருகின்றது.
இந்நிலையில் இந்த நிகழ்வுகளை கூட்டிணைவுடன் முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகள் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனொரு அங்கமாக பிரித்தானியாவிலும் கனடாவிலும் கலந்துரையாடுவதற்கான அழைபினை தமிழ் சமூக அரசியல் பொது அமைப்புக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.
எதிர்வரும் மே-1 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் நண்பகல் 11 மணிக்கு Scarborough Civic Center, conference Room B எனும் இடத்தில் அனைவரும் பங்கெடுத்து விடுதலைப் போராட்டத்துக்கு வலுவூட்டுமாறு உதவிப்பிரதமரும் கல்வி காலாச்சார விளையாட்டுத்துறை அமைச்சருமாகிய கலாநிதி ராம் சிவலிங்கம் அவர்கள் தெரவித்துள்ளார்.
பிரித்தானியாவில் மே-1 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணிக்கு Northolt Village Community Centre Ealing Road - Northolt UB5 6AD எனும் இடத்தில் ஒவ்வொரு அமைப்புக்கள் சார்பிலும் இருவர் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உதவிப்பிரதமரும் மாவீரர், முன்னால் போராளிகள் குடும்ப நலன் பேணுல் அமைச்சருமான உருத்திராபதி சேகர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு :
(கனடா) தகவல்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் : 416 847 8686
(பிரித்தானியா) உருத்திராபதி சேகர் : 078 122 7038
நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக