வெள்ளி, 29 ஏப்ரல், 2011

வன்னி மக்களின் தொண்டன் 'கிளி பாதர்' நினைவுகூரப்பட்டார்

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு உதவுவதற்காகவே தனது வாழ்வினை அர்ப்பணித்த கிளி பாதர் என அறியப்பட்ட 'மக்களின் மதகுரு' மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினத்தினை வடக்கு மற்றும் தெற்கிலுள்ள கிறிஸ்தவ மற்றும் சமூக செயற்பாட்டளார்கள் நினைவு கூர்ந்தனர்.

கடந்த ஏப்பிரல் 23ம் நாளன்று நாட்டினது வடக்குப் பகுதியிலுள்ள கருணாரத்தினம் அடிகளாரினது பங்கில் திரண்ட கிறீஸ்தவ மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அவரை நினைவுகூர்ந்ததோடு அவரது பணியினைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதென உறுதிபூண்டனர்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கிலுள்ள குக்கிராமமான வவுனிக்குளத்திலுள்ள வேளாங்கன்னி மாதா தேவலாயலத்தில் கிளி பாதரின் நினைவாக சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்றன.

ஏப்பிரல் 20 2008 அன்று தேவாலயமொன்றில் ஞாயிறு பூசையினை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது மல்லாவி வவுனிக்குளம் வீதியில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத்தாக்குதலில் கிளி பாதர் என மக்களால் வாஞ்சையோடு அழைக்கப்படும் கருணாரத்தினம் அடிகளார் கொல்லப்பட்டார்.

சிறிலங்கா இராணுவத்தினரே இந்தக் கொலையினைப் புரிந்ததாகப் விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தினர்.

"துணிவும், பலம் மற்றும் மனித நேயம் ஆகியவற்றைத் தன்னகத்தேகொண்ட உதாரண புருசராக அவர் திகழ்ந்தார். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே அவர் தனது வாழ்வினைக் கழித்தார். இவரது மறைவு நாட்டினது தெற்கு மற்றும் வடக்கிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்" என இந்த நிகழ்வில் பங்குகொண்ட கொழும்பு மறைமாவட்டத்தினைச் சேர்ந்த மக்கள் உரிமைச் செயற்பாட்டாளரான மதகுரு திறான்சி பெனாண்டோ கூறுகிறார்.

"போரின் போது அவர் மக்களுடன் இருந்தார். இடம்பெயர்ந்த மக்களிடம் அவர் அதியுச்ச பரிவினைக் காட்டினார். இவர்களது வாழ்க்கைதரத்தினை மேம்படுத்தும் வகையில் இவர் ஓய்வின்றி உழைத்தார்" என அவர் தொடர்து தெரிவித்தார்.

சுதந்திரமாகச் செயற்பட்ட உள்ளூர் மனித உரிமைக் காண்காணிப்பு அமைப்பான வடக்குக் கிழக்கு மனித உரிமைச் செயலகம் என்ற ஒன்றைத் தோற்றுவித்த கருணாரத்தினம் அடிகளால் அதன் பணிப்பாளராகச் செயற்பட்டார்.

கடந்த 30 ஆண்டுகாலப் போரின் போது கத்தோலிக்க மதகுருமார் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

1984ம் ஆண்டு மெதடிஸ்ட் திருச்சபையின் மதகுரு ஜோர்ச் ஜெயரத்னசிங்கமும் அவரது முஸ்லீம் சாரதியும் கொல்லப்பட்டனர். 1985ம் ஆண்டு மதகுரு பஸ்தியான் சுட்டுக்கொல்லப்பட்டார். 1988ம் ஆண்டு கத்தோலிக்க மதகுரு சந்திரா பெர்னாண்டோ படுகொலைசெய்யப்பட்டிருந்தார்.

1990ம் ஆண்டு மதகுரு ஜோன் காபேட் காணாமற்போயிருந்தார். 1997ம் ஆண்டு மதகுரு எஸ். செல்வராசா கடத்தப்பட்டிருந்தார். 2006ம் ஆண்டு கத்தோலிக்க மதகுரு பாக்கியரஞ்சித் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்;. 2008ம் ஆண்டு பறிதொரு கிளைமோர் தாக்குதலில் கருணாரத்தினம் அடிகளால் கொல்லப்பட்டார். 2009ம் ஆண்டு பிரான்சிஸ் யோசப் அடிகளால் காணாமற்போயிருக்கிறார். 1983ம் ஆண்டு கத்தோலிக்கக் அருட்சகோதரி மேரி அன்னிதா படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை: